உடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா? இல்லை பெண்களா? புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா?

தாம்பத்யத்தை பொறுத்தவரையில் ஆண்கள்தான் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது. ஒருநாளைக்கு ஒருமுறையாவது ஆண்களால் தாம்பத்யத்தை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது.

ஆண், பெண் உறவை பொறுத்த வரையில் தாம்பத்யம் என்பது மிகவும் முக்கியமானதாகும். உடல்ரீதியான நெருக்கும் என்பது எப்போதும் ஒரு உறவில் அவசியமானதாகும். உணர்வுரீதியான நெருக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கினாலும் உடல்ரீதியான நெருக்கம்தான் ஒரு உறவை முழுமையடைய வைக்கும். உலகம் தோன்றிய காலம் முதலே இதுதான் மனித இனத்தின் அடிப்படை நியதியாக இருக்கிறது.

who find making love more pleasurable

தாம்பத்யத்தை பொறுத்தவரையில் ஆண்கள்தான் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது. ஒருநாளைக்கு ஒருமுறையாவது ஆண்களால் தாம்பத்யத்தை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் இது முற்றிலும் உண்மை அல்ல, ஏனெனில் ஆண்கள் அளவிற்கு பெண்களும் தாம்பத்யத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் இவர்களில் யார் அதிக இன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாகும். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாபாரத கதைகள்

மகாபாரத கதைகள்

தாம்பத்யத்தில் யார் அதிக இன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பீஷ்மரிடம் இந்த கேள்வியை கேட்டபோது பீஷ்மர் அவர்கள் பங்காஷ்வன மன்னனின் கதையைக் கூறினார்.

பங்காஷ்வன அரசன்

பங்காஷ்வன அரசன்

இவர் ஒரு ஆணாக பிறந்து பல குழந்தைகளை பெற்றார். அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தார். இந்திரனை கோபப்படுத்தியதற்காக அவரை பெண்ணாக மாறும்படி இந்திரன் சபித்தார். சோகமாகவும் மனச்சோர்விலும் இருந்த அவர் தங்குவதற்காக காட்டுக்குச் சென்றார், அங்கு அவர் பெண்ணாக ஆண்களுடன் உறவில் ஈடுபட்டார்.

பங்காஷ்வனரின் முடிவு

பங்காஷ்வனரின் முடிவு

சில காலம் கழித்து இந்திரன் அவரை மீண்டும் ஆணாக மாற்ற முன்வந்தார், ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார். உடலுறவு கொள்வது ஒரு ஆணாக இருப்பதை விட ஒரு பெண்ணாக அவருக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது என்று அவர் கூறினார். இதன்மூலம் பீஷ்மர் பெண்கள்தான் உறவில் அதிக இன்பத்தை அனுபவித்தாகக் கூறினார்.

கிரேக்க புராணம்

கிரேக்க புராணம்

இதேபோன்ற சம்பவம் கிரேக்க புராணத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை ஒலிம்பியன்களின் அரசரும், ராணியுமான ஜீயஸ் மற்றும் ஹேரா, உடலுறவில் யார் அதிக இன்பத்தைப் பெறுகிறார்கள் என்று விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

டைரேசியாவின் கதை

டைரேசியாவின் கதை

அதன்படி, தீர்க்கதரிசியான டைரேசியாஸ் தற்செயலாக ஒரு ஜோடி பாம்புகளின் பெண்ணைக் கொன்றதால் பெண்ணாக மாற சபிக்கப்பட்டார். பின்னர் அவர் ஆண்களுடன் உடல்ரீதியாக நெருங்கினார். ஆண்களை விட பெண்களே உடலுறவில் அதிக இன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்ற முடிவுக்கு அவர் வந்தார். இருப்பினும், அவரது கோட்பாடு உண்மையில் அப்போது நம்பப்படவில்லை.

ஈரானிய புராணம்

ஈரானிய புராணம்

ஈரானிய புராணங்களும் ஒரு பெண்ணாக மாறிய தேவதைகளை எதிர்கொண்ட ஒரு மனிதனைப் பற்றி பேசுகின்றன. அவர் ஆண்களுடன் உடலுறவு கொண்டபோது, தனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது எது என்று அவர் நேரடியாகச் சொல்லவில்லை, ஆனால் அவரது பதிலை சற்று மாற்றிக்கூறினார். அதாவது தன்னை தந்தை என்று அழைத்தவர்களை விட தன்னை தாய் என்று அழைக்கும் குழந்தைகளை அவர் விரும்புவதாக அவர் கூறினார்.

குழப்பமான கருத்துக்கள்

குழப்பமான கருத்துக்கள்

விஞ்ஞானிகளால் இன்னும் இதற்கான முழுமையான பதிலை கூற முடியவில்லை. ஏனெனில் உடலுறவில் இன்பம் என்ற கருத்து ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். ஆண்களும், பெண்களும் தங்கள் கூட்டாளர்களுடன் உடலுறவு கொள்ளும்போது வெவ்வேறு மனநிலைகளைக் கொண்டுள்ளனர். இது அவர்களின் இன்ப நிலைகளை வரையறுக்கக்கூடும்.

பாலினங்களை மாற்றுதல்

பாலினங்களை மாற்றுதல்

பாலியல் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்களும் மாறுபட்ட பதில்களைத் தருகிறார்கள். அவர்கள் முந்தைய உடல்கள் குறித்து ஏற்கனவே அதிருப்தி அடைந்திருந்ததால், அவர்களின் பதில்கள் நியாயமானவை என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை.

நிலையானது

நிலையானது

ஆண்களின் இன்பம் குறுகியதாகவும், இனிமையாகவும் இருக்கும்போது, பெண்களுக்கு இது மிகவும் நீடித்தது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே தாம்பத்யம் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சில ஆண்கள் பாதுகாப்பின்மையால் சிக்கித் தவிக்க இது ஒரு காரணமாக இருக்கலாம், அது ஆணாதிக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுபடும்.

புராணக்கதைகள்

புராணக்கதைகள்

சத்தியுகாவிலும், ஆண்கள் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்கும்போது பெண்களை விட கவலைப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது, ஏனெனில் அவர்கள் விரும்பிய அளவுக்கு அதை அனுபவிக்க முடியவில்லை என்ற கவலையில் இருந்தனர். மோகினியும் சடங்குகளை செய்ய தன்னை திருப்திப்படுத்த முடியாததால் பிரம்மாவை சபித்ததாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, November 7, 2019, 12:21 [IST]
Desktop Bottom Promotion