Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
Chandra Garahan Mantras : சந்திர கிரகண நாளில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
கிரகணத்தின் போது எதிர்மறை சக்திகளால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒருசில மந்திரங்களை சொல்ல வேண்டும். அந்த மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது முழு சந்திர கிரகணம் ஆகும். இதற்கு முன் மே மாதத்தில் 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. நவம்பரில் நிகழும் சந்திர கிரகணம் மாலை 4.23 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை இருக்கும். மேலும் சந்திர கிரகணத்திற்கு ஒன்பது மணிநேரத்திற்கு முன்பிருந்தே சூதக் காலம் தொடங்குகிறது. இந்த சூதக் காலத்தில் எந்த ஒரு சுப காரியமும் செய்யக்கூடாது.

பொதுவாக கிரகணத்தின் போது நேர்மறை சக்திகளை விட எதிர்மறை சக்திகள் அதிக ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. எனவே தான் கிரகண காலத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் கிரகணத்தின் போது எதிர்மறை சக்திகளால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒருசில மந்திரங்களை சொல்ல வேண்டும். அந்த மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மந்திரம் #1
ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸ்வாஹா:
இந்த மந்திரத்தை சந்திர கிரகண நாளில் கூறுவதன் மூலம் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது.

மந்திரம் #2
ஓம் ஹ்லீம் து துர்காய நமஹ:
இந்த மந்திரத்தை சந்திர கிரகணத்தின் போது கூறுவதன் மூலம், நல்ல பேச்சாற்றல் கிடைப்பதாக கூறப்படுகிறது.

மந்திரம் #3
ஓம் ஹ்லீம் பகலமுகி ஸர்வதுஷ்டானாம் வாச்சம் முகம் பதம் ஸ்தம்பய் ஜிஹ்வாம் கீலே புத்திம் விநாஷே ஹ்ரிங் ஓம் ஸ்வாஹா:
இந்த மந்திரமானது பகுலாமுகி தேவியின் மந்திரமாகும். இந்த மந்திரத்தை சந்திர கிரகணத்தின் போது சொல்வதால், எதிரிகளால் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மந்திரம் #4
ஓம் ஸ்ரீ ஹ்ரிம் ஷ்ரிம் கம்லே கமலாலயே ப்ரஸித்-ப்ரஸித் ஸ்ரீ ஹ்ரிம் ஷ்ரிம் மஹாலக்ஷ்மி நமஹ:
வேலை மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி பெற சந்திர கிரகண நாளில் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

மந்திரம் #5
சந்திர கிரகணத்தன்று மன அமைதிக்காக சொல்ல வேண்டிய மந்திரங்கள் பின்வருமாறு:
ஓம் ஷ்ரம் ஶ்ரீம் ஷ்ரம் ஸஹ் சந்த்ராம்ஸே நமஹ.
ஓம் ஸோம் ஸோமாய நமஹ.
ஓம் சாம் சந்த்ரமஸாயை நமஹ.
ஓம் ஷிதாஞ்சு, விபந்ஷு அமிர்தாஞ்சு நமஹ.
ஓம் ஐம் க்லீம் ஸௌமாயை நமஹ.

மந்திரங்களை சொல்வதற்கான சரியான வழி
கிரகண நாளில் சொல்லும் மந்திரங்களை முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் சொன்னால் மட்டும் தான் அந்த மந்திரம் பலனைத் தரும். மேலும் கிரகண நாளில் மந்திரங்களை சொல்வதாக இருந்தால், ஒரு இடத்தில் அமர்ந்து ஊதுபத்தியை ஏற்றி, மனதை ஒருமுகப்படுத்தி மந்திரத்தை சொல்ல வேண்டும். இப்படி நம்பிக்கையுடன் மந்திரங்களை சொல்லி வந்தால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நன்மை கிடைப்பதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











