Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
வேதங்களின் படி ஒவ்வொரு நாளுடனும் தொடர்புடைய நிறம் எது? எந்த நிற ஆடை அணிவது அதிர்ஷ்டம் தெரியுமா?
பல கலாச்சாரங்கள் வாரத்தின் ஒவ்வொரு நாளுடனும் தொடர்புடைய வண்ணங்கள் இருப்பதாக நம்புகின்றன.
பல கலாச்சாரங்கள் வாரத்தின் ஒவ்வொரு நாளுடனும் தொடர்புடைய வண்ணங்கள் இருப்பதாக நம்புகின்றன. உதாரணமாக, தாய்லாந்தில், ராணி உண்மையில் அன்றைய நாளுக்கு உரிய நிற ஆடைகளை மட்டுமே அணிவார். இதேபோல், இந்தியா மற்றும் கம்போடியா போன்ற பிற ஆசிய கலாச்சாரங்களும் பௌத்தம் மற்றும் இந்து மதத்துடன் ஜோதிட நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்றன.

இந்தியாவில், ஜோதிடர்கள் மற்றும் ஆயுர்வேத பயிற்சியாளர்கள் ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்ட நிறங்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இந்த கலாச்சாரங்கள் அனைத்தும் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்துடன் அல்லது ஒரு தெய்வத்துடன் தொடர்புடையதாக நம்புகின்றன. எனவே ஒரு நிறத்துடன் ஒரு நாளை இணைப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அந்த குறிப்பிட்ட நாளில் அதற்குரிய நிறத்தை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிற ஆடைகளை அணிவது மங்களகரமானது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த கிழமையில் மக்கள் சூரியக் கடவுளுக்கு சிவப்பு மலர்களை வழங்குகிறார்கள். மேலும் இந்த நாளில் விரதமிருந்து ஒருவேளை மட்டும் சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

திங்கள்
இந்து மதத்தின் படி, திங்கட்கிழமையின் நிறம் மஞ்சள், ஆனால் இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் வெள்ளை நிறமும்அணிவார்கள். சிவபெருமான் வாரத்தின் இந்த நாளுடன் தொடர்புடைய தெய்வம், எனவே மக்கள் பெரும்பாலும் ஈசனுக்கு வெள்ளை பூக்களை வழங்குகிறார்கள். திங்கட்கிழமை சந்திரனுடன் தொடர்புடையது மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வண்ணங்கள் வெள்ளி, வெளிர் சாம்பல் அல்லது நீலம்.

செவ்வாய்
இளஞ்சிவப்பு அல்லது பிங்க் என்பது செவ்வாய்க்கிழமையுடன் தொடர்புடைய நிறம். இந்து கலாச்சாரத்தில், இந்த நாள் ஹனுமானுடன் தொடர்புடையது மற்றும் இந்த இறைவனிடம் விரதம் இருந்து பிரார்த்தனை செய்பவர்கள் சிவப்பு நிறமும் அணியலாம். இந்த நாள் செவ்வாய் கிரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கோபமான கிரகமான இதனை இளஞ்சிவப்பு அணிவதன் மூலம் சமாதானப்படுத்தப்படலாம்.

புதன்
பச்சை என்பது புதன்கிழமையின் நாளின் நிறம். புதன் கிழமை குரு பகவானுடன் தொடர்புடையது, மேலும் புத்தருக்கும் பச்சை நிறம் ஏற்றது. புத்தர் மற்றும் குருபகவான் இருவரும் பச்சை நிறத்தை விரும்புகிறார்கள்.

வியாழன்
இந்த நாளில் மக்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தை அணிய வேண்டும். இந்து கலாச்சாரத்தின் படி, இந்த நாள் விஷ்ணு பகவானுக்கு உரிய நாளாகும். மேலும் ஆரஞ்சு நிறம் சுக்கிர பகவானுடன் தொடர்புடையது. இந்த நாளில் ஆரஞ்சு நிறம் அணிவது சுக்கிரனின் அருளை பெற்றுத்தரும்.

வெள்ளி
வெள்ளிக்கிழமையின் நிறம் நீலம் (கடல் பச்சை அல்லது அக்வாமரைன் ஆகியவை கூட ஏற்றுக்கொள்ளத்தக்க நிறங்களாகும்). இது சுக்கிரனுடன் தொடர்புடையது. இந்த நாள் வெள்ளை நிறத்தை விரும்பும் சக்தி தேவியுடன் தொடர்புடையது. எனவே இந்த நாட்களில் நீல நிறத்தை அணிவது நல்லது.

சனி
சனிக்கிழமை என்பது ராயல்டியின் நாள், இந்த நாளில் ஊதா, கருப்பு, இண்டிகோ அல்லது அடர் சாம்பல் ஆகியவற்றை அணியலாம், இவை அனைத்தும் சனியின் (சனி) கோபத்துடன் தொடர்புடையவை. இந்த நாளில் மக்கள் சனிபகவான் சன்னதிக்குச் சென்று கறுப்பு எண்ணெய், கருப்பு எள் மற்றும் கருப்பு ஆடைகளை தானம் செய்கிறார்கள்.



Click it and Unblock the Notifications