Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
காமசூத்ராவில் கூறியுள்ளபடி இந்த பெண்களுடன் ஒருபோதும் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாதாம் ஏன் தெரியுமா?
இந்தியாவில் குப்த பேரரசின் காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் உலகின் மிகவும் பிரபலமான இந்து தத்துவஞானி வத்ஸ்யானா ஆவார்.
இந்தியாவில் குப்த பேரரசின் காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் உலகின் மிகவும் பிரபலமான இந்து தத்துவஞானி வத்ஸ்யானா ஆவார். இவரது புத்தகம் 'காம்சூத்ரா' இந்தியாவில் உள்ளதைப் போலவே மேற்கிலும் பிரபலமாக உள்ளது. இது பாலியல் செயல்பாடு குறித்த ஆய்வில் மிகவும் பயனுள்ள படைப்பாகக் கருதப்படுகிறது மற்றும் பல வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வத்ஸ்யாயனா தனது புத்தகத்தில் கூறியதாவது, "இந்த வேலை வெறுமனே நம் ஆசைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படக்கூடாது. இந்த விஞ்ஞானத்தின் உண்மையான கொள்கைகளை அறிந்த ஒரு நபர், தனது தர்மம், அர்த்த மற்றும் அவரது காம ஆகியவற்றைப் பாதுகாத்து, அவரது புலன்களில் தேர்ச்சி பெறுங்கள். " காமசூத்ரா பற்றிய சில உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

வத்ஸ்யான
வத்ஸ்யான மக்கள் கலவி குறித்து அதீத உற்சாகமாக தேவையில்லை என்று கருதினார். அவர் தன் வாழ்க்கையில் பரம் சமாதி விரதம் பூண்டிருந்தார். அதனால் அவர் வாழ்நாள் முழுவதும் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தார். இதனால் அவருக்கு உயரிய பட்டமான மகரிஷி பட்டம் வழங்கப்பட்டது.

கலவியின் வகைகள்
வத்ஸ்யான தனது காமசூத்ராவில் கூறியுள்ளபடி மொத்தம் 8 வகையான கலவி உள்ளது. ஆண் வலுக்கட்டாயமாக பெண்ணை கலவியின் போது கடித்தால் அவள் தனது காதலனை கூந்தலால் கவர வேண்டும். காதலனின் கீழ் உதட்டை இருமடங்கு வேகத்துடன் முத்தமிட வேண்டும்.

கடிக்க கூடாத இடங்கள்
காமசூத்ராவில் கூறியுள்ள படி, கலவியின் போது முத்தமிடக் கூடிய அனைத்து இடங்களும் கடிக்கவும் கூடிய இடங்கள்தான். ஆனால் மேல் உதடு, வாயின் உட்பகுதி மற்றும் கண்களை ஒருபோதும் கடிக்கக்கூடாது.

முத்தங்கள்
பிரெஞ்சு முத்தம் என்பது உலகம் முழுவதும் பிரபலமானது, ஆனால் அவர்களிடம் ஒரேயொரு முத்த வகைதான் உள்ளது. ஆனால் காமசூத்ராவில் மொத்தம் 40 வகையான முத்தங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பெண்கள்
கலவி என்பது பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே இன்பத்தை வழங்கக்கூடியது. ஆனால் குறிப்பிட்ட குறைபாடுகள் இருக்கும் பெண்களோடு கொள்ளும் கலவி இன்பமாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மனநிலை சரியில்லாத பெண்கள், தனது அழகு குறித்த தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள் மற்றும் துர்நாற்றம் வீசும் பெண்களுடன் கலவி கொள்ளும்போது அது இன்பமனதாக இருக்காது.

ஓரினச் சேர்க்கை
வத்ஸ்யான தனது காமசூத்ராவில் ஒருபோதும் ஓரினசேர்க்கையை ஆதரித்து கூறவில்லை. அவரை பொறுத்தவரை உடலுறவு என்பது எதிர் பாலினத்தவருடன் வைத்துக்கொள்ளும் போது மட்டும்தான் இன்பத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் தனது நூலில் ஓரினசேர்கையாளர்களை மிகவும் ஏளனமாக குறிப்பிட்டுள்ளார்.

காமசூத்ரா
காமசூத்ரா புத்தகத்தில் வெறும் 20 சதவீதம் மட்டுமே பாலியல் நிலைகள் மற்றும் பாலியல் உறவுகளை பற்றி கூறுகிறது. மீதமுள்ளவை மனித உளவியல் மற்றும் பாலியல் உறவால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை பற்றித்தான் கூறுகிறது.

வத்ஸ்யானாவின் காலம்
வத்ஸ்யானா மகரிஷியின் வாழ்க்கை முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. சில ஆராய்ச்சியாளர்கள் இவர் கிறிஸ்துவிற்கு முன்னால் வாழ்ந்தவர் என்று கூறுகிறார்கள், சிலர் முதலாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள். இவருக்கு முன்னரே சில ஆராய்ச்சியாளர்கள் கலவியை பற்றி எழுதியுள்ளனர். அவை பபார்வா, நந்தி, கோணிக்கபுத்ரா மற்றும் குச்சும்பர் ஆகும்.



Click it and Unblock the Notifications











