Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பிறவியில் இருந்தே சிவபெருமானின் அருளைப் பெற்றிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சிவபெருமான் என்னதான் தனது பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கினாலும், ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானால் பிறவில் இருந்தே ஆசீர்வதிக்கப்பட்ட சில ராசிக்காரர்கள் உள்ளனர்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. என்ன தான் நாம் மார்டனான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், மக்களிடையே சில நம்பிக்கைகள் குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜோதிடத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மட்டுமின்றி, கடவுள்களும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களிடம் கருணை காட்டுகிறார்கள்.

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது. அந்த வகையில் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சிவபெருமானை முறையாக வழிபட்டால், அவரின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் அருள் கிடைத்தால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமான் என்னதான் தனது பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கினாலும், ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானால் பிறவில் இருந்தே ஆசீர்வதிக்கப்பட்ட சில ராசிக்காரர்கள் உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.

மேஷம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் கிரகம் சிவபெருமானின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஆகவே தான் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பான அருளைப் பெற்றுள்ளார்கள். மேஷ ராசியைச் சேர்ந்த மக்கள், திங்கட்கிழமை அன்று சிவபெருமானை முறைப்படி வழிபட்டு வந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை.

விருச்சிகம்
ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்களுக்கும் சிவபெருமானின் அருள் உண்டு. விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், சிவனின் அருளால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இது தவிர அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் விடுபடலாம்.

மகரம்
மகர ராசியும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளுள் ஒன்றாகும். இந்த ராசியின் அதிபதி சனி. இவர் சிவபெருமானின் தீவிர பக்தர். எனவே மகர ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் சிறப்பான அருள் உண்டு. இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் வில்வ இலை, பசும்பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வந்தால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு இச்செயலால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்குமாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் அதிபதியும் சனி பகவான். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருளுடன், சிவபெருமானின் அருளும் உண்டு. கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் சிவபெருமானை திங்கட்கிழமைகளில் முறையாக வழிபட்டு வந்தால், சிவனை எளிதில் மகிழ்விக்கலாம். அதுவும் திங்கட்கிழமைகளில் கும்ப ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்தால் விரும்பிய வரம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications