Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
பிறவியில் இருந்தே சிவபெருமானின் அருளைப் பெற்றிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சிவபெருமான் என்னதான் தனது பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கினாலும், ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானால் பிறவில் இருந்தே ஆசீர்வதிக்கப்பட்ட சில ராசிக்காரர்கள் உள்ளனர்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. என்ன தான் நாம் மார்டனான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், மக்களிடையே சில நம்பிக்கைகள் குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜோதிடத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மட்டுமின்றி, கடவுள்களும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களிடம் கருணை காட்டுகிறார்கள்.

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது. அந்த வகையில் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சிவபெருமானை முறையாக வழிபட்டால், அவரின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் அருள் கிடைத்தால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமான் என்னதான் தனது பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கினாலும், ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானால் பிறவில் இருந்தே ஆசீர்வதிக்கப்பட்ட சில ராசிக்காரர்கள் உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.

மேஷம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் கிரகம் சிவபெருமானின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஆகவே தான் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பான அருளைப் பெற்றுள்ளார்கள். மேஷ ராசியைச் சேர்ந்த மக்கள், திங்கட்கிழமை அன்று சிவபெருமானை முறைப்படி வழிபட்டு வந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை.

விருச்சிகம்
ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்களுக்கும் சிவபெருமானின் அருள் உண்டு. விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், சிவனின் அருளால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இது தவிர அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் விடுபடலாம்.

மகரம்
மகர ராசியும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளுள் ஒன்றாகும். இந்த ராசியின் அதிபதி சனி. இவர் சிவபெருமானின் தீவிர பக்தர். எனவே மகர ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் சிறப்பான அருள் உண்டு. இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் வில்வ இலை, பசும்பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வந்தால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு இச்செயலால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்குமாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் அதிபதியும் சனி பகவான். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருளுடன், சிவபெருமானின் அருளும் உண்டு. கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் சிவபெருமானை திங்கட்கிழமைகளில் முறையாக வழிபட்டு வந்தால், சிவனை எளிதில் மகிழ்விக்கலாம். அதுவும் திங்கட்கிழமைகளில் கும்ப ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்தால் விரும்பிய வரம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications