Just In
- 35 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிறவியில் இருந்தே சிவபெருமானின் அருளைப் பெற்றிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சிவபெருமான் என்னதான் தனது பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கினாலும், ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானால் பிறவில் இருந்தே ஆசீர்வதிக்கப்பட்ட சில ராசிக்காரர்கள் உள்ளனர்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. என்ன தான் நாம் மார்டனான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், மக்களிடையே சில நம்பிக்கைகள் குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜோதிடத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மட்டுமின்றி, கடவுள்களும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களிடம் கருணை காட்டுகிறார்கள்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது. அந்த வகையில் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சிவபெருமானை முறையாக வழிபட்டால், அவரின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் அருள் கிடைத்தால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமான் என்னதான் தனது பக்தர்களின் கஷ்டங்களைப் போக்கினாலும், ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானால் பிறவில் இருந்தே ஆசீர்வதிக்கப்பட்ட சில ராசிக்காரர்கள் உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.
மேஷம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் கிரகம் சிவபெருமானின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஆகவே தான் இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பான அருளைப் பெற்றுள்ளார்கள். மேஷ ராசியைச் சேர்ந்த மக்கள், திங்கட்கிழமை அன்று சிவபெருமானை முறைப்படி வழிபட்டு வந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை.
விருச்சிகம்
ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்களுக்கும் சிவபெருமானின் அருள் உண்டு. விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமைகளில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், சிவனின் அருளால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இது தவிர அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் விடுபடலாம்.
மகரம்
மகர ராசியும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளுள் ஒன்றாகும். இந்த ராசியின் அதிபதி சனி. இவர் சிவபெருமானின் தீவிர பக்தர். எனவே மகர ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் சிறப்பான அருள் உண்டு. இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் வில்வ இலை, பசும்பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வந்தால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு இச்செயலால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்குமாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் அதிபதியும் சனி பகவான். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருளுடன், சிவபெருமானின் அருளும் உண்டு. கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் சிவபெருமானை திங்கட்கிழமைகளில் முறையாக வழிபட்டு வந்தால், சிவனை எளிதில் மகிழ்விக்கலாம். அதுவும் திங்கட்கிழமைகளில் கும்ப ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்தால் விரும்பிய வரம் கிடைக்கும்.