Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?
காதலன் திரைப்படம் வெள்ளி விழா கொண்டாடும் இந்த ஆண்டில் அப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
எப்போதும் நம்முடைய இயல்பு வாழ்ககையைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பவர் தான் கே.டி.குஞ்சுமோன். இப்படி வாழ்க்கையின் இயல்பை மிக எதார்த்தமாக வெளிப்படுத்திய படம் தான் காதலன். இந்த படத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சங்கர் இயக்கம், ஏ.ஆர்.ரகுமான் இசை இப்படி இந்த படத்துக்கு வலு சேர்த்த விஷயங்கள் நிறைய.

சரி அத விடுங்க. விஷயத்துக்கு வருவோம். எல்லோரும் தூக்கிக் கொண்டாடிய இந்த காதலன் திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் முடிந்து வெள்ளி விழா கொண்டாட்டத்தில் இருக்கிறது. என்ன அதுக்குள்ள 25 வருஷமாச்சா. இப்ப இருக்கற தலைமுறைக்கும் பிடித்த காதல் படங்கள்ல ஒன்னு இது. இந்த படம் உருவானது பற்றியும் வேறு சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரபுதேவா ஹீராவான கதை
பிரபுதேவாவை மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று சொல்லி, இந்த படத்துக்கு ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் சங்கர் முதலில் மிகவும் தயங்கினாராம். ஆனால் தயாரிப்பாளரான கே.டி.குஞ்சுமோன் இவருடைய ஜெண்டில்மன் மற்றும் சூரியன் படத்தில் ஆடியிருந்த சூறாவளி நடனத்தைப் பார்த்திருந்ததால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், நன்றாக வரும் என்று சிபாரிசு செய்து சங்கரை சமாதானம் செய்து பிரபுதேவாவை நடிக்க வைத்தாராம்.

டப்பிங் குரல்
அந்த படத்தில் பிரபுதேவாவாவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது நம்முடைய சீயான் விக்ரம். அதேபோல் நக்மாவின் குரல் நடிகை சரிதாவின் குரல்.

நக்மா அறிமுகம்
முதலில் இந்த படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் மாதுரி தீட்ஷித். அவருடைய கால்ஷீட் கிடைக்காததால், புதிதாக தமிழ் சினிமாத்துறைக்குள் நுழைந்த நக்மா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

வடிவேலு
இந்த படத்துக்கு ஹீரோவின் நண்பராகவும் காமெடியனாகவும் கவுண்டமணியை நடிக்க வைக்க குஞ்சுமோன் விரும்பியிருக்கிறார். அவர் மிகவும் பிஸியானதால் அந்த வாய்ப்பு வடிவேலுவைத் தேடி வந்திருக்கிறது.

பஸ்
இந்த படத்துக்கான விஷூவல் எபக்ட்ஸ் முழுவதும் செய்தவர் விக்கி. ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு வரும் பஸ் நடனம் மிகவும் பேமஸ். அந்த பாடலில் வரும் பஸ் அந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணியால் வடிவமைக்கப்பட்டது. அதே பேருந்து தான் கிளைமேக்ஸில் வெடிக்க வைக்கப்பட்டதாம்.

திருக்குற்றாலக்குறிஞ்சி
இந்த படத்தில் வைரமுத்து மட்டுமே 6 பாடல் எழுதியிருக்கிறார். இளைஞர்களின் சூப்பர் ஃபேவரட்டான் முக்காலா முக்காபுஃல்லா எழுதியது வாலி. பேட்ட ராப் பாடலை இயக்குநர் சங்கரே எழுதியிருக்கிறார். ஆனால் அதில் உள்ள மெலடியான இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் படக்குழுவினரால் எழுதப்படவில்லை. இது குற்றாலக்குறவஞ்சி என்னும் இலக்கியத்தில் உள்ள திரிகூடராசப்பரால் எழுதப்பட்டது.

ஹிந்தி - தெலுங்கு மொழிகளில்
இந்த திரைப்படம் ஹிந்தியில் ஹம்சே ஹெய் முக்காபுல்லா (humse hai muqabala) என்னும் பெயரில் டப் செய்யப்பட்டது. இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு சோலே படத்தின் தயாரிப்பாளர் ஜிபி சிப்பி குஞ்சுமோளை வெகுவாக பாராட்டினாராம். அதேபோல் இந்த படம் பிரேமிகுடு என்னும் பெயரில் டப் செய்யப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெற்றிப்படங்களாக அமைந்தன.

4 தேசிய விருதுகள்
இந்த திரைப்படம் 4 தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது. இந்த படத்தில் என்னவளே! அடி என்னவளே! என்னும் பாடலுக்கும் விசுவல் எபக்டெக்ஸ்க்காக வெங்கிக்கும் ஆடியோ கிராபிக்காக ஏஎஸ் லக்ஷ்மி நாராயணன் மற்றும் விஎஸ் மூர்த்தி அவர்களும் எடிட்டிங்குக்காக லெனின் மற்றும் விடி. விஜயன் அவர்களுக்கும் கிடைத்தது.

ஃபிலிம் ஃபேர்
இயக்குநர் சங்கர் அவர்களுக்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம் ஃபேர் அவார்டையும் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த மியூசிக் டைரக்டருக்கும் கிடைத்தது.

சிதம்பரம் கோவில்
முதலில் இந்த படத்துக்கான சில சீன்கள் அனுமதியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் எடுக்கப்பட்டது. அதன்பிறகு சில சர்ச்சைகளால் அங்கே கோவிலின் உள்ளே எடம்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications