Latest Updates
-
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க...
காணும் பொங்கல் பண்டிகை ஏன் பெண்களுக்கு முக்கியமானது? அதுக்கு என்ன காரணம் தெரியுமா?
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பெருவிழா மிகவும் கோலாகாலமாக இருக்கும். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை, தை முதல் நாள் தைப்பொங்கல், மூன்றாம் நாள் மாட்டு பொங்கல், பொங்கல் விழாவின் கடைசி நாளும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருக்கும். பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளும், அதன் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. காணும் பொங்கலை பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் பல சம்பிரதாயங்கள் மற்றும் கொண்டாட்ட முறைகள் உள்ளன. அவை என்னவென்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பழமையான பண்டிகை
பொங்கல் தமிழ்நாட்டின் முக்கியமான அறுவடைத் திருநாளாகும், காணும் பொங்கல் பொங்கல் பண்டிகையின் கடைசி மற்றும் நான்காவது நாளாகக் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலுடன் பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவடைகின்றன. காணும் பொங்கல் தமிழர்களுக்கு ஒரு பழமையான பண்டிகையாகும். இது தமிழ் நாட்காட்டியில் தை மாதத்தின் மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.
இது இந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என பல்வேறு நிகழ்வுகள் அடங்கும். பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் மிகவும் மகிழ்ச்சியாகவும் கோலாகலமாகவும் இருக்கும்.

திருவள்ளுவர் தினம்
காணும் பொங்கல் ‘திருவள்ளுவர்' என்ற தலைசிறந்த தமிழ் தத்துவஞானி மற்றும் கவிஞரின் நினைவாக ‘திருவள்ளுவர் தினம்' என்றும் அழைக்கப்படுகிறது. காணும் பொங்கல் என்பது தளர்வு மற்றும் மகிழ்ச்சியின் நாளாகும்.
மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக பழகுவதன் மூலமோ அல்லது வீட்டிற்குச் செல்வதன் மூலமோ இந்நாளை செலவிடுகிறார்கள்.

பெண்களுக்கு முக்கியமான நாள்
காணும் பொங்கல் பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள் கொத்தினைக் கட்டி அதனை எடுத்து வயதில் மூத்த தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதால், அவர்களின் ஆசியை நீங்கள் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.

ஆசீர்வாதம்
காணும் பொங்கல் அன்று அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் கொண்டாடப்படும் மகிழ்ச்சியான பண்டிகை. இந்நாளில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீட்டிற்கு செல்வது, ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துவது மற்றும் வீட்டு பெரியோரின் ஆசியைப் பெறுவது போன்றவற்றை அனைவரும் செய்வார்கள். முக்கியமாக இந்த நாளன்று ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் நடைபெறும்.

கும்மிப்பாட்டு
காணும் பொங்கல் அன்று கடைப்பிடிக்கப்படும் மற்றொரு முக்கியமான சடங்கு குமி பாடு அல்லது கும்மிப்பாட்டு. இந்த சடங்கு தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் சில காரணங்களால் திருமணம் தாமதமாகும் இளம் பெண்களின் விரைவாக திருமணம் நடக்க செய்யப்படுகிறது. கும்மிப்பாடும் போது, சிறுமியை வட்டத்தின் நடுவில் உட்கார வைத்து, குமி பாடு என்ற தாளத்திற்குப் பெண்கள் அவளைச் சுற்றி நடனமாடுவார்கள்.

விளையாட்டு போட்டிகள்
காணும் பொங்கலன்று பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். கிராமப்புறங்களில் இது மிகவும் விமர்சையாக இருக்கும். உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், கோலப்போட்டி, கபடி போன்ற போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளும் சாகச போட்டிகளும் நடத்தப்படும்.
சுவாரசியமாக காணும் பொங்கலன்று பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். மக்கள் மகிழ்ச்சியாக விளையாடி பொங்கல் விழாவை சிறப்பாக முடிப்பார்கள்.



Click it and Unblock the Notifications











