For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாக் ஆகாதீங்க! உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா?

உலகின் பல முக்கிய மாற்றங்களுக்கு வித்திட்ட இந்தியாதான் ரகசிய அமைப்புகளுக்கும் வித்திட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?

|

இந்த உலகத்தில் பல ரகசிய சமூகங்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான். இல்லுமினாட்டி, ஸ்கல்ஸ் அண்ட் போனஸ் போன்ற பல ரகசிய சமூகங்கள் இன்றும் உயிர்ப்புடன்தான் உள்ளது. இந்த உலகத்தை ரகசியமாக ஆள்வது இவர்களின் அமைப்புகள்தான். உலகின் பல முக்கிய மாற்றங்களுக்கு வித்திட்ட இந்தியாதான் இந்த ரகசிய அமைப்புகளுக்கும் வித்திட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?

Interesting Facts About The Ashokas Nine Unknown Men

இந்த ரகசிய சமூகத்தைத் தொடங்கியவர் மாமன்னர் அசோகர் ஆவார். இந்த ரகசிய சமூகத்தில் 9 பேர் இருந்தார்கள். பொதுவாக ரகசிய சமூகத்தில் இருப்பவர்கள் யார் என்று யாராலும் கண்டறிய முடியாது, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கே கூட இது தெரியாது. இந்த விதி அசோகரின் ரகசிய சமூகத்திற்கும் பொருந்தும். ஆனால் அவர்களைப் பற்றிய சில உண்மைகளை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அதனை பற்றி ஒரு புத்தகமே எழுதினர். இந்த ரகசிய சமூகத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோற்றம்

தோற்றம்

இந்த இரகசிய சமூகம் 270 BCE-ல் மௌரிய பேரரசர் அசோகரால் தொடங்கப்பட்டது. கலிங்கத்து போரில் கிட்டதட்ட 1,00,000 பேரின் மரணத்திற்கு காரணமாக மாறியதால் ஏற்பட்ட குற்ற உணர்வு காரணமாக சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் இந்த ரகசியம் சமூகத்தைத் தொடங்கினார். இது பூமியின் மிகவும் சக்திவாய்ந்த இரகசிய சமூகமாக கருதப்பட்டது.

இரகசிய சமூகத்தின் வேலை

இரகசிய சமூகத்தின் வேலை

இந்த 9 பேரும் அதிசக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களின் பணி மனிதகுல வளர்ச்சிக்கான பல்வேறு ஆராய்ச்சிகளை செய்வதும், அதன் மூலம் கிடைத்த தகவல்களை தீயமனிதர்களிடம் இருந்து பாதுகாப்பதும்தான். இந்த 9 நபருக்கும் தலா ஒரு புத்தகம் வழங்கப்பட்டது, . ஒவ்வொரு புத்தகத்திலும் மனிதகுலம் வளர்ச்சியடைய உதவும் மிக உயர்ந்த அறிவு இருந்தது, ஆனால் தவறான கைகளில் இது இருந்தால், அறிவு மனிதகுலத்தை அழிக்கக்கூடும். அதனை பாதுகாக்கும் பணியை அவர்கள் செய்தனர்.

இரகசிய புத்தகம்

இரகசிய புத்தகம்

அசோகரின் ஆட்சியின் போது, கடந்த கால மற்றும் நிகழ்கால அறிவு மற்றும் இயற்கை அறிவியல் பற்றிய அனைத்து தகவல்களும் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 2000 ஆண்டுகள், வளர்ந்த அனைத்து அறிவும் ரகசிய புத்தகங்களில் மறைக்கப்பட்டன.

MOST READ: இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா?

அசோகரின் எண்ணம்

அசோகரின் எண்ணம்

அசோக அந்த 9 மனிதர்களிடமும் இந்திய கலாச்சாரத்தை கையாளும் பணியைக் கொடுத்து , அதை வெளி உலகத்திற்கு மாய நோக்குடைய பின்தங்கிய மக்களின் நாடாக காட்டும்படி கூறினார், இதனால் அவர்களால் திரட்டப்பட்ட மேம்பட்ட அறிவியல் அறிவை தீங்கிழைக்கும் நோக்கங்களுடன் அடைய நினைப்பவர்களிடம் இருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் நம்பினார்.

இராம ராஜ்ஜியம்

இராம ராஜ்ஜியம்

இந்த இரகசிய சமூகத்தை சுற்றி பல வதந்திகள் பரவியது, அதில் முக்கியமானது அசோகர் இந்த இரகசிய சமூகத்தை நிறுவியதே இராம ராஜ்ஜயத்தின் விஞ்ஞான ரகசியங்களை பாதுகாக்கத்தான் என்று கூறப்பட்டது. இராம ராஜ்ஜியம் பழமையான அட்லாண்டிட்ஸ் கலாச்சாரத்துடன் ஒப்பிடப்பட்டது. இந்து புராணங்களின் படி இராம ராஜ்ஜியம் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவாய்ந்த ஆயுதங்களால் அழிக்கப்பட்டது.

அணுசக்தி

அணுசக்தி

சில தரவுகளின் படி இராம ராஜ்ஜியமும், அட்லாண்டிசும் அணுசக்தி யுத்தத்தில் ஈடுபட்டதாகவும் இதில் இரண்டுமே அழிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த அழிவை ஏற்படுத்தும் ஆயுத ரகசியத்தை இந்த இரகசிய சமூகம் பாதுகாத்ததாக வதந்திகள் பரவியது. ஆனால் இது வெறும் தகவலாக மட்டுமே இருந்தது, இதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

ஒன்பது இரகசிய புத்தகம்

ஒன்பது இரகசிய புத்தகம்

அசோகரின் ரகசிய சமூகத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு ரகசிய புத்தகத்தை பாதுகாத்தனர். ஒவ்வொரு ரகசிய புத்தகத்திலும் ஒரு துறை பற்றிய ரகசியங்கள் இருந்தது. முதல் புத்தகம் பிரச்சாரம் மற்றும் உளவியல் யுத்தம் என்று கூறப்படுகிறது, இது வெகுஜன கருத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பதைக் கற்பிக்கிறது. அனைத்து 9 புத்தகங்களிலும் இது மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

MOST READ: திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா?

இரண்டாவது புத்தகம்

இரண்டாவது புத்தகம்

இரண்டாவது புத்தகம் உடலியல் பற்றியது, இது ஒரு நபரைத் தொடுவதன் மூலம் எவ்வாறு கொல்வது என்பதை விளக்குகிறது. ‘மரணத்தின் தொடுதல்' என்று அழைக்கப்படும் இந்த புத்தகம், ஒரு மனிதனின் நரம்பு துடிப்பை ஒரு எளிய தொடுதலால் எவ்வாறு திருப்புவது மற்றும் அவனை அல்லது அவளைக் கொல்வது என்று கற்பிக்கிறது. இந்த இரண்டாவது புத்தகத்திலிருந்து கசிந்ததன் விளைவாக தற்காப்பு கலை வடிவமான ஜூடோ என்று பலர் கூறுகிறார்கள்.

மூன்றாவது மற்றும் நான்காவது புத்தகம்

மூன்றாவது மற்றும் நான்காவது புத்தகம்

மூன்றாவது புத்தகம் உயிரி தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் ஆகியவற்றைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது. இந்த இரகசிய சமூகம்தான் காலரா தடுப்பூசியை உலகுக்குக் கொடுத்ததாக சிலர் கூறுகிறார்கள், இது இந்த மூன்றாவது புத்தகத்தில் தக்கவைக்கப்பட்ட அறிவின் ஒரு பகுதியாகும். நான்காவது புத்தகம் உலோகங்கள் மற்றும் ரசவாதத்தை மாற்றுவதைப் பற்றியது.

ஐந்தாவது மற்றும் ஆறாவது புத்தகம்

ஐந்தாவது மற்றும் ஆறாவது புத்தகம்

ஐந்தாவது புத்தகத்தில் தகவல்தொடர்புகள் பற்றி இருந்ததாக நம்பப்படுகிறது மற்றும் வேற்று கிரகங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை விளக்குகிறது. ஆறாவது புத்தகம் ஈர்ப்பு விசை மற்றும் விமானிக சாஸ்திரவை உள்ளடக்கியது. விமானங்களை எப்படி கட்டமைப்பது என்பது இதில் கூறப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 இறுதி புத்தகங்கள்

இறுதி புத்தகங்கள்

ஏழாவது புத்தகம் அண்டவியல் மற்றும் காலப்பயணம் மூலம் நேரடியாக மகத்தான வேகத்தில் உள்ளக மற்றும் உள்-உலகளாவிய பயணங்கள் உள்ளிட்ட நேர பயணத்தின் ரகசியத்தை வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. எட்டாவது புத்தகம் ஒளியியல் பற்றியதாக நம்பப்படுகிறது, இது ஒளியின் வேகத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது மற்றும் அதை ஒரு ஆயுதமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது. இறுதி புத்தகமான ஒன்பதாவது புத்தகம் சமூகவியல் பற்றியதாகக் கூறப்படுகிறது, இது சமூக பரிணாமத்தின் ரகசியங்களை வைத்திருக்கிறது மற்றும் அவற்றின் வீழ்ச்சியை முன்னறே அறிவது எப்படி என்பது பற்றியது.

MOST READ: சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

இறுதி காலம்

இறுதி காலம்

அசோகர் மறைந்தாலும் இந்த இரகசிய சமூகம் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன்தான் இருந்தது. இதிலிருந்த ஆட்கள் மாறிக்கொண்டே இருந்தனர், இவர்களின் ஆராய்ச்சிகளின் முடிவுகளின் படி புத்தகங்களும் மாற்றியமைக்கப்பட்டு கொண்டே இருந்தது. 1923 ஆம் ஆண்டு டால்பட் மண்டி என்னும் ஆங்கில எழுத்தாளர் தி நைன் அன்நோவ்ன் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் இந்த இரகசிய சமூகம் பல உண்மைகளும், இரகசியங்களும் இருந்தது. பல இரகசிய சமூகங்களுக்கு முன்னோடியாக இருந்தது இந்தியாவின் இந்த இரகசிய சமூகம்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About The Ashoka's Nine Unknown Men

Read to know why ashoka creates the nine unknown men and what they did to the society.
Story first published: Tuesday, November 12, 2019, 13:55 [IST]
Desktop Bottom Promotion