Just In
- 1 hr ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 6 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 7 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 8 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவங்ககிட்ட என்னென்ன மோசமான குணங்கள் இருக்கும் தெரியுமா?
அன்பின் மாதமான பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு என சில தனித்துவமான குணாதிசயங்களும், ஆளுமையும் இருக்கிறது. இது இவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
ஒருவர் பிறந்த பருவம் அவர்களின் தனிப்பட்ட மனநிலையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆண்டுகளில் இது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பின் மாதமான பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு என சில தனித்துவமான குணாதிசயங்களும், ஆளுமையும் இருக்கிறது. இது இவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
அவர்கள் தனித்துவமான திறமைகளைக் கொண்டுள்ளனர், அவர்கள் வெற்றிகரமான உறவுகளை உருவாக்குகிறார்கள், மிக முக்கியமாக, அவர்கள் நம்பகமானவர்கள். அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில், அவர்கள் வெற்றிபெற முயற்சிக்கிறார்கள், புதிய சவால்களை எதிர்கொள்ள பயப்படுவதில்லை மற்றும் அனைத்து சிக்கல்களையும் இவர்களால் தீர்க்க முடியும். இவர்களுக்குள் சில மோசமான குணங்களும் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் தீய குணங்களை பார்க்கலாம்.
முன்னோக்கிய சிந்தனை கொண்டவர்கள்
இவர்கள் எப்போதும் தங்கள் இதயத்தில் இருந்து பேசுவார்கள், தங்களின் உணர்வுகளில் எப்போதும் நேர்மையாக இருப்பார்கள். பிப்ரவரியில் பிறந்த மக்களின் ஒரு சிறந்த தரம் இதுதான், அவர்கள் உண்மையை பேச பயப்படுவதில்லை, அது அவர்களுக்கு வித்தியாசமான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடும். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளியேற இவர்கள் பொய் கூறமாட்டார்கள். இவர்களின் நேர்மையான விமர்சனத்திற்காக இவர்கள் சிலசமயம் வெறுக்கப்பட்டாலும் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்படுவார்கள்.
பிறரின் பெருமையை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஒருபோதும் பிறரின் பெருமையையும், பெயரையும் திருட மாட்டார்கள். சிறிய வெற்றியாக இருந்தாலும் அதனை தனது சொந்த முயற்சியில் பெறவே விரும்புவார்கள். தங்களின் அனுபவத்தில் இருந்து இவர்கள் தங்களுக்கான முதிர்ச்சியை பெறுவார்கள். இவர்கள் யாருடைய அடிச்சுவட்டையும் கண்மூடித்தனமாக பின்பற்ற மாட்டார்கள்.
மர்மமானவர்கள்
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் சிலசமயம் மர்மமானவர்களாக இருப்பதை நீங்கள் காணலாம். ஏனென்றால், அவர்கள் தங்களைப் பற்றி அதிகம் வெளிப்படுத்த விரும்புவதில்லை. மற்றவர்களுக்கு முன்னால் வெளிப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்களின் மர்மமான நடத்தைதான் அவர்களைச் சுற்றியுள்ள எதிர் பாலினத்தவர்களை ஈர்க்க வைக்கிறது.
MOST READ:பீர் அடிக்கிறவங்களுக்கான அதிர்ச்சி செய்தி... இனிமேலாவது பீர் அடிக்கிறத நிறுத்திறுங்க...!
புதுமையை விரும்புபவர்கள்
அவர்கள் மிகவும் ஆக்கபூர்வமான நபர்கள் மற்றும் புதிய விஷயங்களை உருவாக்க விரும்புகிறார்கள். இவர்களின் மூளை எப்பொழுதும் சிறப்பாக செயல்படும், இவர்கள் எந்த துறையில் இருக்கிறார்களோ அதில் டெவலப்பர்கள் என்று அறியப்படுகிறார்கள். உலகை மாற்றிய பெரும்பாலான விஞ்ஞானிகள் பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
தனிவழி
இவர்கள் மெதுவாக செயல்படுபவர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் விஷயங்களை செய்வதற்கு தனக்கென சொந்த வழியை வைத்துள்ளார்கள். அவர்களின் சொந்த வழியில் வேலைகளை செய்யும்போது இவர்கள் அசுர வேகத்தில் காரியங்களை முடிப்பார்கள். பொதுவாக இவர்கள் வேகமாக செய்வதைக் காட்டிலும் சரியாக செய்வதில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.
உறவில் நேர்மை
தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு உறவையும் உண்மையாக வைத்திருப்பது பிப்ரவரியில் பிறந்த மக்களின் பல குணங்களில் ஒன்றாகும். இது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடனான பிணைப்பு அல்லது அவர்கள் விரும்பும் ஒருவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இதுவே அவர்கள் நல்ல ஆத்ம துணையை உருவாக்குவதற்கும் அவர்களின் உறவுகள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் காரணம். எனவே உங்கள் கூட்டாளர் பிப்ரவரி பிறந்தவர் என்றால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.
MOST READ:மனிதர்கள் செய்த திகிலூட்டும் ஆபத்தான ஆராய்ச்சிகள்... பூமிய அழிக்காம விடமாட்டாங்க போலயே...
அமைதியை விரும்புபவர்கள்
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் தங்களை சுற்றி எப்போதும் அமைதியான சூழ்நிலை இருப்பதை விரும்புவார்கள். ஒருவேளை நீங்கள் அவர்கள் அமைதியாக இருப்பதை நீங்கள் பார்த்தால் அவர்கள் மூட்அவுட்டில் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல, அவர்கள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். உண்மையில் அவர்கள் தங்களுக்குளேயே ஆறுதலைத் தேடுகிறார்கள்.
தூரமானவர்கள்
இவர்கள் எப்பொழுதும் தங்கள் சிந்தனைக்குள் மூழ்கி இருக்கிறார்கள். எனவே இவர்கள் எப்பொழுதும் தூரமாக இருப்பது போன்ற உணர்வைத் தருவார்கள். பிப்ரவரியில் பிறந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் யாரையும் தங்கள் இதயங்களை அணுக அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் அவர்களைச் சுற்றி பல நபர்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஒரு சிலரே அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதனால் பலரும் இவர்களை நெருங்கிவர தயங்குவார்கள்.
பிடிவாதம்
அவர்கள் மனதில் தனித்துவமாக இருக்க முடியும், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தங்கள் வாழ்க்கையை வாழலாம் மற்றும் விஷயங்களைச் செய்யவார்கள். தாங்கள் செய்யும் அனைத்தும் சரிதான் என்று நினைப்பார்கள், மற்றவர்களை அதனை தவறு என்று நிரூபித்தாலும் அதனைப் பற்றி இவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
உணர்ச்சிகள் குறைவானவர்கள்
அவர்கள் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை மறைக்கிறார்கள், நிச்சயமாக இவர்கள் உணர்ச்சிவசக்கூடியவர்கள் அல்ல. நன்றாக புரிந்து கொள்ளாமல் இவர்கள் எந்த உறவிலும் ஒருபோதும் நுழையமாட்டார்கள். நெருக்கமானவர்களுக்கு இவர்கள் மிகசிறந்த துணையாகவும், அதீத புரிதலுடனும் இருப்பார்கள். ஆனால் அதே அக்கறையை அனைவருக்கும் இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.
விபரீதிமான வித்தியாசம்
எப்போதும் வித்தியாசமாக இருக்க முயற்சிக்கவும், வழக்கமானவற்றிலிருந்து விலகவும் முயற்சிக்கும் இவர்கள் பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதில் ஆர்வம் செலுத்த மாட்டார்கள். இதனால் பலசமயங்களில் இவர்கள் இருக்கும் இடங்களில் கலகங்கள் ஏற்படும். இவர்களின் அனுமானங்களால் இவர்கள் பெரும்பாலும் பிரைன் உணர்வுகளை காயப்படுத்துவார்கள்.