Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
எதுனாலும் பிரம்ம முகூர்த்தத்துல பண்ண சொல்றாங்களே அதோ சீக்ரெட் என்னனு தெரியுமா? இதுதான்...
பிரம்ம முகூர்த்தத்தின முக்கியத்துவம் என்ன, அதிலுள்ள ரகசியங்கள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
எந்த நல்ல காரியம் பண்ணினாலும் பிரம்ம முகூர்த்தத்துல பண்ணா அது ஜெயமாகும். நல்லபடியா நடக்கும். குறிப்பாக கல்யாணம் போன்ற வாழ்வியல் நிகழ்ச்சிகளைச் செய்கின்ற பொழுது பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் வாழ்க்கை செழிக்கும். அந்த சமயத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் நன்மையில் முடியும் என்று சொல்வார்கள். பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4 மணி முதல் 6 வரை.
பெரியவங்க வீட்ல அதிகாலைல எழுந்திரு. அப்ப தான் அன்னைக்கு நாள் உருப்படும்னு சொல்றாங்களே அது வெறும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம்னு நினைக்கறீங்களா? அவர்கள் சொல்வதற்குப் பின்னால் சில ஆன்மீகக் காரணங்களும் உண்டு. அதைப் பற்றி விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதிகாலை எழுதல்
அதிகாலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுது, சூரியனிடம் இருந்து பூமிக்கு வந்து சேருகின்ற சூரியக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அந்த கதிர்கள் நம்முடைய உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்ச்சி அடையும். கண்களுக்கும் தெளிவு கிடைக்கும். அதனால் தான் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்கிறார்கள்.

சனிக்கிழமைகளில்...
சனிக்கிழமையன்று அதிகாலை நேரத்தில் தான் சனி பகவானுடைய கிரகண சக்தி அதிக பலம் பெற்றிருக்குமாம். அதனால் தான் பெரியவர்கள் சனிக்கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்கிறார்கள்.

வேதங்கள்
ரிக் வேதத்தில் உஷஸ் என்னும் பெண் தெய்வம் இருக்கிறது. பொதுவாக இந்த பெண் தோன்றிய பிறகு தான் தினமும் சூரிய உதயம் நடக்குமாம். அதனால் தான் அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேவதையினுடைய செழிப்பான கதிர்வீச்சுக்கள் பூமியை வந்தடைகிற அதிகாலை நேரத்தில் அதனால் தான் குளித்து உடலையும் மனதையும் தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எப்போது ஆரம்பமாகும்?
சூரியன் பூமியில் உதிப்பதற்கு முன்பாக 48 நிமிடங்களுக்கு முன்பான நேரம் தான் பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்லப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் என்பது படைக்கும் கடவுளான பிரம்மனைக் குறிக்கிறது. பிரம்மன் தான் நம்முடைய நாக்கினில் சரஸ்வதியை அமர வைத்து, 24 கலைகளையும் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.

திருமணம், கிரகப் பிரவேசம்
எந்தெந்த காரியங்களை பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். எந்த காரியமாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம். குறிப்பாக திருமணம் மற்றும் வீடு கிரகப் பிரவேசம் ஆகியவற்றை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது மிகவும் நன்மை தரும்.

ஏன் இந்த பெயர்
பொதுவாக இறவில் உறங்கும் உயிர்கள் அடுத்த நாள் காலையில் உயிர்ப்பித்து தூங்கி எழுந்து இயங்குதல் தான் சிருஷ்டி படைத்தல் என்பார். இந்த படைத்தலைச் செய்வது பிரம்மன் என்பதால் தான் அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications