அனுமன் ஜெயந்தியன்று அவரை இப்படி வழிபடுவது உங்களை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பாற்றும்...!

ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி சுக்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பதினைந்தாம் நாளில் அதாவது பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.

இந்து மதத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவர் அனுமன். அனுமன் ஜெயந்தி முக்கியமான மற்றும் பரவலாக வணங்கப்படும் இந்து கடவுள்களில் ஒருவரான அனுமனின் பிறந்த நாளை குறிக்கும் ஒரு நாளாகும். வானர கடவுளான அனுமன் இராமாயணத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவராவார், மேலும் இவர் சிவபெருமானின் 11 வது அவதாரமாக கருதப்படுகிறார்.

Hanuman Jayanti 2020: Date, Muhurta, Rituals And Significance

ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி சுக்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பதினைந்தாம் நாளில் அதாவது பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா 2020 ஏப்ரல் 8 அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய திருவிழாவின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகூர்த்தம்

முகூர்த்தம்

சுக்ரா மாதத்தில் பௌர்ணமி நாளன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதால், பௌர்ணமிக்கான முகூர்த்த நேரம் ஏப்ரல் 7, 2020 அன்று மதியம் 12:01 மணிக்கு தொடங்கும். திதி 2020 ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 08:04 மணிக்கு முடிவடையும். இந்த நல்ல முஹூர்த்தாவின் போது, மக்கள் பூஜை செய்ய முடியும்.

சடங்குகள்

சடங்குகள்

அனுமனை வழிபடுவதற்கான சிறந்த நாளான இன்று அவரை வழிபட அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்த பிறகு குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்குப் பிறகு, அவர்கள் எந்த பூஜையின் போதும் பயன்படுத்தப்படும் குங்குமம், பூ, கங்கை நீர், பழங்கள் மற்றும் பிற புனிதமான பொருட்களைக் கொண்டு அனுமனை வழிபட வேண்டும்.

அனுமன் மந்திரம்

அனுமன் மந்திரம்

மக்கள் புனித அனுமன் மந்திரம் மற்றும் சங்கத்மோகன் ஸ்தோத்திரத்தை கொண்டு முழக்கமிட வேண்டும். பக்தர்கள் பின்னர் தங்கள் வீட்டின் முற்றத்தில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறக் கொடியை ஏற்று வேண்டும். அவர்களில் சிலர் அதை தங்கள் மொட்டை மாடியில் ஏற்றலாம். இதற்குப் பிறகு, பிரசாதம் தேவைப்படும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

அனுமன் ஜெயந்தியின் முக்கியத்துவம்

அனுமன் ஜெயந்தியின் முக்கியத்துவம்

இராமரின் பக்தர்களாக இருப்பவர்களும் அனுமனை வழிபடுகிறார்கள், அதற்கு காரணம் அனுமன் இராமரின் சீடராக இருந்ததுதான். அனுமனின் பக்தர்கள் கண்டிப்பான விரதத்தைக் கடைப்பிடித்து, இந்த நாளில் தியானித்து, தெய்வத்திற்காக ஒரு சிறப்பு பூஜை செய்கிறார்கள். அனுமன் மந்திரத்தில் நேர்மறை ஆற்றல் இருப்பதாக நம்பப்படுவதால் பக்தர்கள் பல முறை அனுமன் மந்திரத்தைக் குழுக்களாக கோஷமிடுகிறார்கள்.

யாரெல்லாம் வழிபடுகிறார்கள்?

யாரெல்லாம் வழிபடுகிறார்கள்?

பிரம்மச்சாரிகள், மல்யுத்த வீரர்கள் மற்றும் பாடி பில்டர்கள், அவர்கள் பெரும்பாலும் அனுமன் ஜெயந்தியை அனுசரிக்கிறார்கள், ஏனெனில் தெய்வம் ஆற்றல், உறுதிப்பாடு, விருப்பம் மற்றும் சக்தி ஆகியவற்றின் கடவுள் என்று கருதப்படுகிறது. பகவர்களால் அவரது ஆசீர்வாதங்களைத் தேடுவதற்காக ஒரு புனித ஆரத்தி பகவான் அனுமனுக்கு செய்யப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, April 8, 2020, 15:25 [IST]
Desktop Bottom Promotion