Just In
- 1 hr ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 4 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 6 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Don't Miss
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கணுமா? அப்ப குரு பூர்ணிமா அன்னிக்கு இத தானம் பண்ணுங்க..
இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 13 ஆம் தேதி வருகிறது. வேத வியாசர் தான் வேதங்களை ரிக், யஜுர், சாம, அதர்வ என 4 வகுப்புகளாக வகைப்படுத்தினார். இந்த ஆண்டு குரு பூர்ணிமா நாளில் கிரகங்களின் சிறப்பு சேர்க்கை நிகழ்கிறது.
இந்தியாவில் குரு பூர்ணிமா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குருக்கள் வணங்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தே குரு சிஷ்ய பாரம்பரியம் உள்ளது. குரு இல்லாமல், சீடர் தனது இலக்கை அடைய முடியாது என்பது நம்பிக்கை. குருவால் மட்டுமே சீடர்களுக்கு சரியான பாதையை காட்ட முடியும். இப்படிப்பட்ட குருவை வணங்குவதற்கு ஏற்ற நாள் தான் குரு பூர்ணிமா.
புராணங்களின் படி, பராசர முனிவருக்கும், சத்யவதி தேவிக்கும் மகனான மகரிஷி வேத வியாசர், ஆனி மாத பௌர்ணமி திதியில் பிறந்தார். அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத பௌர்ணமி நாள் குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 13 ஆம் தேதி வருகிறது. வேத வியாசர் தான் வேதங்களை ரிக், யஜுர், சாம, அதர்வ என 4 வகுப்புகளாக வகைப்படுத்தினார். இந்த ஆண்டு குரு பூர்ணிமா நாளில் கிரகங்களின் சிறப்பு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த குரு பூர்ணிமாவின் முக்கியத்துவம் இன்னமும் அதிகரித்துள்ளது. இப்போது கிரகங்களின் சிறப்பு சேர்க்கையினால் குரு பூர்ணிமா நாளில் எந்தெந்த பொருட்களை தானம் செய்வது பலன் தரும் என்பதை அறிவோம்.
மேஷம்
குரு பூர்ணிமா நாளன்று மேஷ ராசிக்காரர்கள் வெல்லம் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவது நல்லது. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளன்று கற்கண்டுகளை தானம் செய்வது நல்லது. அதோடு ரிஷப ராசிக்காரர்கள் கடவுளை வழிபடும் போது நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா நாளில் பசுவிற்கு பசுந்தீவனம் கொடுப்பது நல்லது. அதோடு, பச்சை பயறை தானமாக வழங்குவதும் நல்லது. இப்படி செய்வதால் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளன்று அரிசியை ஏழை எளியோருக்கு தானம் செய்வது நல்லது. இதன் மூலம் மன கஷ்டம் குறைவதோடு, மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.
சிம்மம்
சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமான தினத்தன்று கோதுமை தானம் செய்வது மிகவும் நல்லது. இதனால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளன்று பிராமணருக்கு அவரவர் தகுதிக்கேற்ப தட்சிணை கொடுக்க வேண்டும். இது மட்டுமின்றி, இந்த ராசிக்காரர்கள் பசுவிற்கு பசுந்தீவனம் கொடுப்பதும் நல்லது.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா நாளன்று பெண்களுக்கு பாயாசத்தை தானம் வழங்க வேண்டும். இப்படி செய்வதனால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைப்பதோடு, செழிப்பும் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் குரங்குகளுக்கு பருப்பு மற்றும் வெல்லத்தை தானம் செய்ய வேண்டும். இது தவிர, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், படிக்கும் பொருட்களை வாங்கி கொடுப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் கோவில்களில் பருப்புக்களை தானம் செய்வது நல்லது. இப்படி செய்வதனால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா நாளில் ஏழை எளியோருக்கு போர்வைகளை வழங்குவது நல்லது. இப்படி செய்வதால், ஒருவரின் வேலை அல்லது வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் முதியோர் ஆசிரமத்தில் உள்ள முதியோர்களுக்கு ஆடை, அன்னதானம் செய்வது நல்லது. இது தவிர கும்ப ராசிக்காரர்கள் கோவிலுக்கு சென்று கருப்பு உளுந்து தானமாக வழங்குவது நல்லது.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா நாளில் ஏழை எளியோருக்கு மஞ்சள், கடலை மாவு ஆகியவற்றால் செய்யப்பட்ட இனிப்புகளை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும்.