Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
குரு பூர்ணிமா அன்று உருவாகும் 4 ராஜ யோகங்கள்.. உங்க கடன் பிரச்சனை நீங்கணும்-ன்னா இத செய்யுங்க...
இந்த ஆண்டு குரு பூர்ணிமா 2022 ஜூலை 13 ஆம் தேதி புதன் கிழமை, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் மிகவும் மங்களகரமான 4 ராஜ யோகங்கள் உருவாகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் குரு பூர்ணிமா ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. இது குருவின் முக்கியத்துவத்தை நினைவுக்கூறும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தான் நமது வழிகாட்டிகள். அவர்கள் பாரபட்சமின்றி நம்மை சரியான பாதையில் எப்போதும் வழிநடத்துவார்கள். அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு அவர்களுக்கு நன்றி சொல்வது மிகவும் முக்கியம்.

குரு பூர்ணிமா என்பது குரு வேத வியாசரின் பிறந்த நாளாகும். மகரிஷி வேத வியாசர் தான் வேதங்களையும், புராணங்களையும் இயற்றியுள்ளார். இந்த ஆண்டு குரு பூர்ணிமா 2022 ஜூலை 13 ஆம் தேதி புதன் கிழமை, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் குரு பூர்ணிமா அன்று மிகவும் மங்களகரமான 4 ராஜ யோகங்கள் உருவாகின்றன. இந்நாளில் நமது வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு சில விஷயங்களை செய்வதன் மூலம் விடுபடலாம்.

நிதி பிரச்சனைகள் நீங்க...
குரு பூர்ணிமா நாளன்று ஏழை எளியோருக்கு பருப்புக்களை தானம் செய்வதன் மூலம், கடன் பிரச்சனைகள் அல்லது நிதி தொடர்பான பிற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மஞ்சள் நிற இனிப்புக்களை வழங்குவதன் மூலம் நிதி பிரச்சனைகளைத் தவிர்த்து, நிதி நிலைமையை மேம்படுத்தலாம்.

அதிர்ஷ்டம் மற்றும் வெற்றிக்கு...
குரு பூர்ணிமா நாளில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு சென்று, துருவிய தேங்காயால் அர்ச்சனை செய்து விஷ்ணு பகவானை வழிபடுங்கள். மேலும் தானம் செய்யுங்கள். முக்கியமாக மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் ஆடைகளை தானம் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் ஜாதகத்தில் உள்ள குரு தோஷம் நீங்கும் மற்றும் அதிர்ஷ்டம் எப்போதும் உடன் இருக்கும்.

திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க...
திருமணத்தில் தடைகளை சந்தித்து வருகிறீர்களா? உங்கள் திருமணத்தில் உள்ள தடைளை நீங்க குரு பூர்ணிமா நாளில் வீட்டில் குரு யந்திரத்தை வையுங்கள். இந்த குரு யந்திரத்தை தினமும் பூஜை செய்து வழிபடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், திருமணம் விரைவில் நடைபெறும்.

மாணவர்களின் பிரச்சனைகள் நீங்க...
மாணவர்கள் தங்கள் படிப்பில் சிரமத்தை எதிர்கொண்டால் அல்லது எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் கஷ்டப்பட்டால், குரு பூர்ணிமா நாளன்று மாடுகளுக்கு தீவனம் வாங்கி கொடுங்கள். உங்கள் குருவை மரியாதையுடன் நடத்துங்கள். முடிந்தால், தினமும் பகவத் கீதையில் சில பகுதிகளை படியுங்கள். இதனால் நல்ல பலன கிடைக்கும். மேலும் குரு பூர்ணிமா நாளன்று குருவை சந்தித்து, அவரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்யுங்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்ட வரும்.



Click it and Unblock the Notifications