Latest Updates
-
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
இன்னிக்கே உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்!
குரு அஸ்தமனமாவதால் அடுத்த ஒரு மாதம் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகிறது. இந்த அஸ்தமனத்தால் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதில் 4 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கலாம்.
வேத ஜோதிடத்தில் வியாழன் அல்லது குரு ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது. இது அறிவு, மதம், திருமணம், குழந்தைகள், வளர்ச்சி போன்றவற்றின் காரணியாகும். இந்த குரு தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதி. இத்தகைய குரு பகவான் கடக ராசியில் உச்சமாக இருந்தாலும், மகர ராசியில் சற்று பலவீனமாக இருப்பதாக கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை அல்லது இடத்தை மாற்றும் போது, அது மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வகையில் குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகிறது. இந்த அஸ்தமனத்தால் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதில் 4 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கலாம். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார், எம்மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள் மற்றும் குரு பகவானை மகிழ்விக்க என்ன பரிகாரங்களை செய்வது என்பதைக் காண்போம்.

கடகம்
குரு அஸ்தமன காலத்தில் கடக ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது இக்காலத்தில் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள். முதலீடு செய்ய நினைத்தால், அதை தள்ளிப் போடுங்கள். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரித்து, மன உளைச்சலால் அவதிப்படுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் குரு அஸ்தமனமாவதால் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் எந்த புதிய வேலையையும் தொடங்காதீர்கள். யாருடனும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை செய்யாதீர்கள். குடும்ப பிரச்சனையால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

தனுசு
குரு அஸ்தமனமாவதால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு தனசு ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். எதிலும் புதிய முதலீடு செய்யாதீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். யாருடனும் சண்டையில் ஈடுபடாதீர்கள். முக்கியமாக புதிய வேலை எதையும் ஆரம்பிக்காதீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் குரு அஸ்தமன காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். தற்போதைக்கு முதலீடு செய்ய நினைத்தால், அதை ஒத்திப் போடுங்கள். குடும்ப பிரச்சனையால் மன உளைச்சல் ஏற்படும். இக்காலத்தில் எந்த விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். பேசும் போது வார்த்தைகளை கவனித்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

பரிகாரங்கள்
குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் பரிகாரங்களின் மூலம், தாக்கத்தைக் குறைக்கலாம்.
* வியாழக்கிழமை அன்று 'ஓம் பிருஹஸ்பதே நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
* வியாழக்கிழமை அன்று தங்கம், மஞ்சள், உளுத்தம் பருப்பு, மாம்பழம் போன்ற மஞ்சள் பொருட்களை தானம் செய்யுங்கள்.
* வியாழக்கிழமை அன்று மகாவிஷ்ணுவிற்கு உளுத்தம் பருப்பு லட்டு செய்து படையுங்கள். இதனால் விஷ்ணு பகவான் மகிழ்வார்.
* குரு தோஷம் நீங்குவதற்கு, வியாழக்கிழமை அன்று விரதம் இருங்கள். மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து உப்பில்லாத உணவை உண்ணுங்கள்.
* ஜாதகத்தில் குரு தோஷம் நீங்க வேண்டுமானால், வியாழக்கிழமை அன்று நீராடுவதற்கு முன் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து குளியுங்கள். குளித்த பின்னர் 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.



Click it and Unblock the Notifications