Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கீரை சாப்பிட்டால் குழந்தை பிறக்காது என்று அஞ்சிய ஆண்கள்... உலகத்தின் சில மோசமான மூடநம்பிக்கைகள்...!
உலகத்தின் அனைத்து நாடுகளிலும், கலாச்சாரங்களிலும் மூடநம்பிக்கைகள் என்பது இருக்கத்தான் செய்கிறது. இந்த மூடநம்பிக்கைகள் சிலசமயம் வேடிக்கையானதாகவும், சிலசமயம் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கும்.
உலகத்தின் அனைத்து நாடுகளிலும், கலாச்சாரங்களிலும் மூடநம்பிக்கைகள் என்பது இருக்கத்தான் செய்கிறது. இந்த மூடநம்பிக்கைகள் சிலசமயம் வேடிக்கையானதாகவும், சிலசமயம் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கும். இந்தியாவில் மட்டும்தான் இற்றுப்போன மூடநம்பிக்கைகள் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில் கூட பல முட்டாள்த்தனமான நம்பிக்கைகள் உள்ளது. இந்த பதிவில் உலகம் முழுவதும் இருக்கும் சில வேடிக்கையான மூடநம்பிக்கைகள் என்னவென்று பார்க்கலாம்.


டேபிள் மூடநம்பிக்கை
ரஷ்யாவில், திருமணமாகாதவர்கள் மேசையின் மூலையில் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமருபவர்கள் அவர்களுக்கான வாழ்க்கைத்துணையை கண்டறிவதில் சிரமப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினமான ஒன்றாக நம்பப்படுகிறது.

கூரை ஓடு மூடநம்பிக்கை
வீட்டு மேற்கூரைப் பற்றிய மூடநம்பிக்கை பல நாடுகளில் நிலவுகிறது. குறிப்பாக ஜெர்மனியில் யாராவது இறப்பதில் சிரமம் இருந்தால் வீட்டு மேற்கூரையின் மூன்று ஓடுகளை உயர்த்தி வைத்தால் அவர்களின் உயிர் எளிதில் பிரிந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

வெள்ளை நிற மூடநம்பிக்கை
சீனாவில், வெள்ளை நிறம் மரணம் / துக்கத்துடன் தொடர்புடையது. சீனாவில் அழைப்பிதழ்கள் அல்லது பூக்களை வெள்ளை நிறத்தில் அனுப்பு மாட்டார்கள். வெள்ளை கவர்களில் உள்ள பணம் 'பாக் கம்' என்று அழைக்கப்படுகிறது, பொதுவாக இறந்தவரின் குடும்பத்திற்கு இறுதிச் செலவுக்கு இது உதவுகிறது.

தூக்க மூடநம்பிக்கை
ஜப்பானில், உங்கள் தலையை வடக்கு நோக்கி எதிர்கொண்டு இரவில் தூங்கினால் உங்களுக்கு குறுகிய ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 'விழித்தெழும்' விழாவின் போது ஜப்பானிய சடலங்கள் தலையை வடக்கு நோக்கி எதிர்கொள்வது வழக்கம்.

பபுள் கம் மூடநம்பிக்கை
துருக்கியின் சில பகுதிகளில் நீங்கள் மெல்லும் பசையைத் துடைப்பதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டும். இரவில் நீங்கள் மெல்லும் பபுள் கம் அது உண்மையில் இறந்தவர்களின் அழுகிய சதை என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

குதிரைலாட மூடநம்பிக்கை
மேற்கு நாடுகளில் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதற்கும், கெட்ட கனவுகளைத் தவிர்ப்பதற்கும், குதிரைக் காலணியை படுக்கையறையிலோ அல்லது ஒரு வாசற்கதவிலோ தொங்கவிட வேண்டும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஒரு குதிரை ஷூவில் ஏழு துளைகளைக் கொண்டுள்ளது, இது ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது, மேலும் அது இரும்பினால் ஆனது, எனவே இது உங்கள் கனவுகளில் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடிய தீய சக்திகளைத் தடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மணி அடிக்கும் மூடநம்பிக்கை
மணிகள் எப்போதும் திருமணங்களுடனும், சிறப்பு சந்தர்ப்பங்களுடனும் ஏன் தொடர்பு படுத்தப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு காரணம் மணிகளின் ஓசை தீயசக்திகளை விரட்டும் என்று நம்பப்படுகிறது. இதனால்தான் அனைத்து விஷேஷங்களின் போதும் மணி ஒலிக்கப்படுகிறது. இந்த நம்பிக்கை இரண்டு காரணங்களுக்காக ராணி எலிசபெத் ஆட்சியின் போது தோன்றியது; புறப்பட்ட ஆத்மாவுக்காக ஜெபங்களைக் கேட்பதற்கும், படுக்கையின் அடிவாரத்தில் நின்ற தீய சக்திகளை விரட்டுவதற்கும்.

பறவை எச்சம் மூடநம்பிக்கை
ரஷ்யாவில், ஒரு பறவை கார் அல்லது மனிதர்கள் மீது மலம் கழித்தால் அது ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்பதற்கான அறிகுறியாகும், மேலும் உங்களுக்கு செல்வத்தைக் கொண்டு வரக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. எவ்வளவு பறவைகள் எச்சமிடுகிறதோ அவ்வளவு செல்வம் வந்து சேரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

புகைபிடித்தல் மூடநம்பிக்கை
கிரிமியன் போரிலிருந்து முதல் உலகப் போர் வரை, ஒரே தீக்குச்சியில் மூன்று சிகரெட்டுகளை பற்ற வைப்பது படையினரிடையே துரதிர்ஷ்டவசமாக கருதப்பட்டது. மூன்றாவது சிகரெட் எரியும் நேரத்தில், ஒரு துப்பாக்கி சுடும் வீரர் தனது பார்வையில் சிப்பாயைக் குறிபார்க்கும் நேரம் இருந்திருக்கும், அபோது அவர் கொலை செய்யப்பட தயாராக இருப்பார் என்ற கோட்பாடு இருந்தது.

கண்ணாடி மூடநம்பிக்கை
கண்ணாடியில் உங்களைப் பார்ப்பது உங்களின் ஆன்மாவை திருடும் என்று நம்பப்படுகிறது. ஸ்னோ ஒயிட்டுக்கு தீங்கு விளைவிக்கும் தீய ராணி ஏன் ஒரு கண்ணாடியைப் பயன்படுத்துகிறார், ஏன் நர்சிஸஸ் தனது சொந்த பிரதிபலிப்பால் சிக்கிக் கொண்டார், ஏன் ஆத்மா இல்லாத காட்டேரிகளுக்கு பிரதிபலிப்பு இல்லை என்பதை விளக்க இது உதவுகிறது. மேற்கு நாடுகளில் பெரும்பாலான மக்கள் குளியலறையில் கண்ணாடியை பயன்படுத்துவதில்லை.

புகைப்பட மூடநம்பிக்கை
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகைப்படம் எடுத்தல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒருவரின் படத்தை எடுப்பது அவரது ஆன்மாவை எடுப்பதற்கு ஒப்பானது என்ற ஆதாரமற்ற நம்பிக்கையை வைத்திருந்தனர்.இவ்வாறு ஒரு எதிரி உங்களைப் பற்றிய புகைப்படத்தைப் பெற முடிந்தால், அவர் உங்கள் ஆத்மாவை சிறைபிடித்து விட்டதாக நம்பப்பட்டது.

கீரை மூடநம்பிக்கை
19 ஆம் நூற்றாண்டில், ஆங்கில ஆண்கள் ஒரு குடும்பத்தைத் உருவாக்க விரும்பினால் சாலட்களைத் தவிர்த்தனர். மூடநம்பிக்கைகளை பற்றிய ஆக்ஸ்போர்டு புத்தகத்தில் தாவர வேர்கள் குழந்தைகளை உருவாக்கும் திறனை இழக்கச் செய்வதாக நம்பப்படுகிறது. ஏனெனில் இது ஒரு 'மலட்டு இலை' என்று நம்பப்பட்டு வந்தது.

குடை மூடநம்பிக்கை
வீட்டிற்க்குள் நீங்கள் குடையை விரித்தால் நீங்கள் உங்களை நோக்கி துரதிர்ஷ்ட மழையை அழைக்கிறீர்கள் என்று அர்த்தம். சூரியனிடமிருந்து பாதுகாப்பாக குடைகள் பயன்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து ஒரு விளக்கம் வருகிறது. வீட்டிற்குள் குடையைத் திறப்பது சூரியக் கடவுளை அவமதிப்பதாகும், அவர் உங்களை துரதிர்ஷ்டவசமாக சபிப்பார். வாழ்க்கையின் ஒரு புயலிலிருந்து ஒரு குடை உங்களைப் பாதுகாக்கிறது என்று மற்றொரு கோட்பாடு கூறுகிறது, எனவே உங்கள் வீட்டினுள் ஒன்றைத் திறப்பது உங்கள் வீட்டின் பாதுகாவலர்களை அவமதிக்கிறது. இதனால் அவர்கள் உங்களை பாதுகாக்காமல் விட்டுவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

திராட்சை மூடநம்பிக்கை
ஸ்பெயினில் புத்தாண்டு தினத்தன்று, கடிகாரம் பன்னிரண்டைத் தொடும் போது எல்லோரும் முத்தமிடுவதில்லை. அதற்குப் பதிலாக 12 திராட்சைகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், இது 12 மாதங்களுக்கும் அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மூடநம்பிக்கை இன்றும் நடைமுறையில் உள்ளது.

ஹாஸ்பிட்டல் மூடநம்பிக்கை
மூடநம்பிக்கைகளின் புத்தகத்தின் படியும் பழைய பாட்டிக்கதைகளின் படியம் மருத்துவமனைக்கு செல்ல சிறந்த நாள் புதன்கிழமை என்று நம்பப்படுகிறது. அதேபோல மருத்துவமனையில் இருந்து செல்வதற்கு திங்கள் கிழமை சிறந்த நாளாகவும், சனிக்கிழமை மோசமான நாளாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து சென்றால் மீண்டும் விரைவில் திரும்பி வருவீர்கள் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications











