Just In
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 5 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 6 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...!
தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் சில செயல்களை செய்ய வேண்டும். அது பூஜையாகவும் இருக்கலாம், நீங்கள் வீட்டிற்கு கொண்டுவரும் சில பொருட்களாகவும் இருக்கலாம்
இந்தியாவே கொண்டாட தயாராக இருக்கும் பண்டிகையான தீபாவளி நெருங்கிவிட்டது. தீபாவளி எப்பொழுதும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டு வரும் பண்டிகையாகும். இவற்றுடன் சேர்த்து இது உங்கள் வீட்டுக்கு செல்வத்தையும் கொண்டு வரும்.
தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் சில செயல்களை செய்ய வேண்டும். அது பூஜையாகவும் இருக்கலாம், நீங்கள் வீட்டிற்கு கொண்டுவரும் சில பொருட்களாகவும் இருக்கலாம். இந்த பதிவில் தீபாவளிக்கு உங்கள் வீட்டுக்கு செல்வத்தை அழைத்து வரும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
லக்ஷ்மி தேவி
லட்சுமி தேவிதான் செல்வத்தின் முதன்மை தெய்வமாக கருதப்படுகிறார். லட்சுமியை சரியான முறையில் வணங்கினால், அவர் அதிக செல்வத்தை வழங்குவார் என்று மக்கள் நம்புகிறார்கள். தாந்த்ரீக சாஸ்திரத்தின்படி, நிதி தொடர்பான தோஷங்களை ஒழிக்க உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய சில பொருட்கள் உள்ளன.
லட்சுமியை ஈர்ப்பது எப்படி?
தந்திர சாஷ்டிரங்களின்படி, நீங்கள் இந்த விஷயங்களை உங்கள் வீட்டில் வைத்திருந்தால், நீங்கள் ஒருபோதும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் லட்சுமியை சரியாக வணங்குவது மட்டுமின்றி இந்த பொருட்களில் ஒருவரை வைத்திருப்பது கூட செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும்.
ஸ்ரீ யந்திரம்
ஸ்ரீ யந்திரத்தில் லட்சுமி தேவியுடன் 33 கடவுள்களின் படங்களும் உள்ளது. ரியான பூஜை சடங்குகளுக்குப் பிறகு அவற்றை வீட்டில் வைத்திருப்பது உங்கள் வீட்டிற்கு ஏராளமான நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.
மோதி சங்கு
இந்த சங்கை அனைத்து சடங்குகளுடன் வணங்கிய பிறகு உங்கள் வீட்டில் வைத்திருந்தால், அது உங்கள் வீடு அல்லது பணியிடத்தில் நேர்மறை சக்தியை ஈர்க்கிறது. இதை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் நீங்கள் ஒருபோதும் பணம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டீர்கள்.
MOST READ: உங்க ராசிப்படி நீங்க செய்யுற ஒரு மோசமான காரியம் என்ன தெரியுமா?
லட்சுமி கவுரி
நீங்கள் பணத்தை வைத்திருக்கும் இடத்தில் லட்சுமி கவுரியை வைத்திருப்பது லட்சுமி தேவி உங்கள் வீட்டிலேயே இருப்பதை உறுதிசெய்யும். வாஸ்து சாஸ்திரத்தின் படி ‘லட்சுமி கவுரி' சரியான நேரத்தில் அங்கு வைக்கப்பட வேண்டும். சரியான முடிவுகளுக்கு நேரம் முக்கியமானது. வெள்ளிக்கிழமை இதனை மஞ்சள் துணியில் சுற்றி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும்.
கோமதி சக்கரம்
இந்தியாவின் குஜராத்தின் ஒரு பகுதியான துவாரகாவில் உள்ள கோமதி ஆற்றில் கோமதி சக்ரா காணப்படுகிறது. கிருஷ்ணரின் தெய்வீக ஆயுதமான சுதர்சன சக்ரத்தை ஒத்திருப்பதால் கோமதி சக்கரம் சுதர்சன சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. 11 கோமதி சக்கரத்தை மஞ்சள் துணியில் சுற்றி உங்கள் பணப்பெட்டியில் தீபாவளி அன்று வைத்தால் உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டமே ஏற்படாது.
எருக்கை வேர்கள்
வெள்ளிக்கிழமையில் நல்ல நேரத்தில் வெள்ளை எருக்கை செடியின் வேர்களை சரியான சடங்குகளுடன் வணங்கி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் அதனை வைக்கவும். இது அதிக பலனளிக்கக்கூடிய ஒன்றாகும்.
கமல மாலை
கமல மாலை தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பூவில் லட்சுமி தேவி அமர்ந்திருப்பதால் இந்த மலர் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. லக்ஷ்மியை வழிபடும் போது இந்த மாலையை கையில் வைத்துக்கொண்டு மந்திரம் கூறுவது மிகவும் பயனுள்ளதாகும். தீபாவளி பூஜையின் போது இவ்வாறு செய்வது உங்கள் வாழ்க்கையில் செல்வத்தின் இருப்பை உறுதிசெய்யும்.
MOST READ: உங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா? இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...!
தட்சிணவர்த்தி சங்கு
தட்சிநவர்த்தி சங்கு என்பது சங்குகளில் மிகவும் அரிதான ஒன்றாகும். இது லட்சுமி தேவியுடன் தொடர்புடையது, மேலும் பொதுவாக விஷ்ணு மற்றும் லட்சுமியின் ஒவ்வொரு புகைப்படத்திலும் காணப்படுகிறது, அவர்கள் அதை தங்கள் கைகளில் ஒன்றைப் பிடித்துக் கொள்கிறார்கள். தீபாவளியன்று இந்த சங்கில் பால் மற்றும் புனித நீர் சேர்த்து அதனை உங்கள் வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளித்து விடுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒருபோதும் எந்தவொரு நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.