Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
துர்காஷ்டமி ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த பூஜை செய்தால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
நவராத்திரி அல்லது துர்கா பூஜை கொண்டாட்டங்களின் எட்டாவது நாள் துர்கா அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இது மகாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது இந்து மதத்தின் படி மிகவும் புனிதமான நாளாகும்.
துர்கா அஷ்டமி அல்லது மகா அஷ்டமி ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் துர்கா பூஜா விழாவின் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். பாரம்பரியமாக, அனைத்து இந்திய வீடுகளிலும் இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆனால், 'பந்தல்களில்' நடக்கும் உண்மையான பூஜை 5 நாட்கள் (சாஷ்டியில் தொடங்கி) நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த புனித நாளில் பலர் உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றனர். பொதுவாக பெண்கள் விரதம் மேற்கொண்டு பூஜை செய்து துர்கா தேவியை வழிபடுகிறார்கள். துர்கா தேவியின் ஆயுதங்கள் வணங்கப்படுவதால் இந்த நாள் 'ஆயுத பூஜை' (ஆயுதங்களை வணங்குதல்) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் ஆயுதங்கள் அல்லது தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்துவதால் இந்த நாள் விரா அஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் எட்டாவது நாளில் துர்காஷ்டமி வருவதால், வீட்டிலையே துர்கை அம்மனை வழிபடலாம். குறிப்பாக, வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில் எட்டு வயது நிரம்பிய சிறுமிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை அம்பிகையாக பாவித்து வழிபட்டு, அவர்களுக்கு மங்கலப் பொருள்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினால், துர்கையின் அருளால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

எப்போது துர்கா அஷ்டமி?
துர்கா அஷ்டமி அல்லது மகா அஷ்டமி அக்டோபர் 13, புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதி அக்டோபர் 12ஆம் தேதி இரவு 9.57 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 13ஆம் தேதி இரவு 8.07 மணிக்கு முடிவடையும் என்று த்ரிக் பஞ்சாங் கூறுகிறது.

துர்கா பூஜை
துர்கா அஷ்டமி துர்கா பூஜையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது மகாஸ்னன் மற்றும் ஷோடஷோபச்சார் பூஜையுடன் தொடங்குகிறது. இது சப்தமி பூஜையைப் போன்றது. இந்த நாளில், ஒன்பது சிறிய தொட்டிகள் நிறுவப்பட்டு, துர்கையின் ஒன்பது சக்திகள் அவற்றில் அழைக்கப்படுகின்றன. மகாஷ்டமி பூஜையின் போது அம்மனின் ஒன்பது வடிவங்களும் வழிபடப்படுகின்றன. சிறுமிகள் மற்றும் திருமணமாகாத இளம் பெண்கள் இந்த நாளில் பூஜை செய்து வணங்குகிறார்கள். இது ‘குமாரி பூஜை' என்றும் அழைக்கப்படுகிறது.

மகாஷ்டமி
நவராத்திரி அல்லது துர்கா பூஜை கொண்டாட்டங்களின் எட்டாவது நாள் துர்கா அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இது மகாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது இந்து மதத்தின் படி மிகவும் புனிதமான நாளாகும். இது இந்து நாட்காட்டியின்படி அஸ்வினா மாதத்தின் பிரகாசமான சந்திர பதினைந்து அஷ்டமி திதியில் விழுகிறது.

சாமுண்டா தேவி
இது சில பிராந்தியங்களில் நம்பப்படுகிறது. சாமுண்டா தேவி இந்த நாளில் அன்னை துர்காவின் நெற்றியில் இருந்து தோன்றி சாந்தா, முண்டா மற்றும் ரக்தாபிஜா (மகிஷாசுராவின் கூட்டாளிகளாக இருந்த பேய்கள்) ஆகியவற்றை அழித்துவிட்டார். மகாஷ்டமியில் துர்கா பூஜை சடங்குகளின் போது 64 யோகினிகள் மற்றும் அஷ்ட சக்தி அல்லது மெட்ரிகாக்கள் (துர்கா தேவியின் எட்டு மூர்க்க வடிவம்) வழிபடப்படுகின்றன. அஷ்ட சக்திகள் என்றும் எட்டு சக்திகள் என்றும் அழைக்கப்படும். இது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமாக விளக்கப்படுகிறது.

அஷ்ட சக்திகள்
இறுதியில், எட்டு தெய்வங்களும் சக்தியின் அவதாரங்கள். அவை ஒரே சக்திவாய்ந்த தெய்வீக பெண்பால், வெவ்வேறு ஆற்றல்களைக் குறிக்கும். துர்கா பூஜையின் போது வழிபடும் அஷ்ட சக்தி பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, நரசிங்கி, இந்திராணி மற்றும் சாமுண்டா.

சாந்தி பூஜை
துர்கா அஷ்டமியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அஷ்டமி திதி முடிந்து நவமி திதி தொடங்கும் சமயத்தில் நடைபெறும் சாந்தி பூஜை ஆகும். பூஜை பொதுவாக சுமார் 48 நிமிடங்கள் நீடிக்கும். இம்முறை, மாலை 07.43 மணி முதல் இரவு 08.31 வரை பூஜை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில், ஒரு விலங்கை பலி கொடுத்து யாகம் செய்வது வழக்கம். பலிகளைத் தவிர்ப்பவர்கள் அதை அடையாள ‘பலி' செய்வதற்காக வாழை, வெள்ளரி அல்லது பூசணிக்காயை வைத்து பூஜை செய்யலாம். மேலும் சாந்தி பூஜையின் போது 108 மண் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம்.



Click it and Unblock the Notifications