Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா? அப்ப இந்த எளிய தாந்திரீக பரிகாரங்களை செஞ்சு பாருங்க...
கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு ஒருசில தாந்திரீக பரிகாரங்களை உங்கள் வீட்டில் செய்யுங்கள்.
நல்ல சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கையை வாழவே நாம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம். ஆனால் அப்படி கஷ்டப்பட்டு உழைத்தாலும், சிலரது குடும்ப நிலை மேம்படுவதில்லை. இதற்கு காரணம் வீட்டில் உள்ள வாஸ்து தோஷமாக இருக்கலாம். அல்லும் பகலும் அயராமல் உழைத்தும், உங்களின் வீட்டில் பணப் பிரச்சனை நீங்கவில்லையா? கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு ஒருசில தாந்திரீக பரிகாரங்களை உங்கள் வீட்டில் செய்யுங்கள்.

கீழே ஒருவரின் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனையைத் தீர்க்க மற்றும் விரைவில் பணக்காரராக செய்ய வேண்டிய சில பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தாந்திரீக பரிகாரங்களை செய்தால், நிதி நிலையில் சீக்கிரம் முன்னேற்றமடையும். இப்போது அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.

பரிகாரம் #1
திங்கட்கிழமை சந்திரன் உதயமான பின் இரவு நீங்கள் படுக்கும் படுக்கையின் நான்கு மூலையிலும் வெள்ளி ஆணிகளை வையுங்கள். வேண்டுமானால், சிறிய வெள்ளி பொருட்களையும் வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து போவதோடு, பணப் பிரச்சனையும் குறைய ஆரம்பிக்கும்.

பரிகாரம் #2
புதன்கிழமை அன்று 7 சோழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சோழிகளானது பூஜைப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் எளிதில் கிடைக்கும். பின் ஒரு பச்சை நிறத் துணியில் அந்த சோழிகளை வைத்து, அத்துடன் ஒரு கைப்பிடி பாசிப்பயறை வைத்து கட்டி, அதை வீட்டின் பூஜை அறையில் உள்ள நிலப்படியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, வீட்டில் செல்வம் பெருகும். ஆனால் இதை யாரிடமும் சொல்லக்கூடாது. இல்லாவிட்டால் எந்த பலனும் கிடைக்காது.

பரிகாரம் #3
ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு தூங்கும் போது ஒரு டம்ளரில் பாலை நிரப்பி, தலைக்கு அருகில் வைத்து தூங்க வேண்டும். அப்படி வைக்கும் பாலானது தூக்கத்தில் சிந்தக்கூடாது. மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த பாலை ஒரு சீமை கருவேல மரத்தில் ஊற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தால், வீட்டின் மீதுள்ள கண் திருஷ்டி நீங்கும். உங்கள் வேலையில் எதிர்மறை ஆற்றல்களால் ஏற்பட்ட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். முக்கியமாக பணப்பிரச்சனை நீங்கும்.

பரிகாரம் #4
திங்கட்கிழமை காலை தூங்கி எழுந்ததும் குளிக்க வேண்டும். பின் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும் செய்து வந்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும். மேலும் சிவனின் அருளால் மனதில் உள்ள ஆசைகளும் நிறைவேறும்.

பரிகாரம் #5
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிவதோடு, மஞ்சள் துணி, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் கிழங்கு போன்ற மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்து வந்தால், வீட்டில் பண பிரச்சனை இருக்காது மற்றும் செல்வம் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











