Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
சாணக்கிய நீதி படி கணவன் இந்த ரகசியங்களை மனைவியிடம் தூக்கத்தில் கூட உளறிவிட கூடாதாம்... ஏன் தெரியுமா?
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார வல்லுனர், அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார். மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திர்கான வழிகளை தனது கொள்கைகள் மூலம் விளக்க முயன்றுள்ளார்.
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார வல்லுனர், அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார். மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திர்கான வழிகளை தனது கொள்கைகள் மூலம் விளக்க முயன்றுள்ளார்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார். நீதி சாஸ்திரத்தில் பணம், முன்னேற்றம், திருமணம், நட்பு, பகை, வியாபாரம் போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகளை சாணக்கியர் விளக்கியுள்ளார்.

சாணக்கியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவையும் அவர்களின் குணங்களையும் சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் என்பது அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொருவரும் தங்களை எல்லா வகையிலும் நேசிக்கக்கூடிய மற்றும் பராமரிக்கக்கூடிய ஒருவர் தங்கள் வாழ்க்கையில் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஒரு நல்ல வாழ்க்கைத் துணை உங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று கூறப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் வாழ்க்கையில் பூர்த்தி செய்கிறார்கள். இருவரும் பரஸ்பரம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆனால் கணவன் மனைவியிடம் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். இல்லையெனில் எதிர்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

வருமானம்
சாணக்கியரின் கூற்றுப்படி, கணவன் தனது சம்பாத்தியத்தைப் பற்றி மனைவியிடம் கூறக்கூடாது. பெண்கள் தங்கள் கணவரின் சேமிப்பைப் பற்றி அறிந்தால், அவர்கள் அதைச் செலவழிப்பதைத் தடுக்கத் தொடங்குவார்கள், மேலும் உங்கள் எல்லா செலவையும் நிறுத்த முயற்சிப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பலவீனம்
சாணக்கியரின் கொள்கையின்படி, கணவன் தன் பலவீனத்தைப் பற்றி மனைவியிடம் சொல்லவே கூடாது. மாறாக, அந்த ரகசியத்தை அவர் தனக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனைவி தன் கணவனின் பலவீனத்தைப் பற்றி அறிந்தால், ஒவ்வொரு உரையாடலிலும் அவரை பலவீனப்படுத்த அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அதனால் உங்கள் பலவீனத்தை யாரிடமும் சொல்லாதீர்கள், குறிப்பாக மனைவியிடம் சொல்லாதீர்கள்.

அவமரியாதை
சாணக்கியரின் கூற்றுப்படி, யாராவது உங்களை அவமதித்திருந்தால், தற்செயலாக கூட அதைப் பற்றி உங்கள் மனைவியிடம் சொல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் கணவனுடன் சண்டை அல்லது வாழ்க்கையில் வேறு சில கெட்ட நேரங்கள் ஏற்படும் போது, பெண்கள் அந்த அவமானத்தை நினைத்து கணவனை பற்றி தவறாக பேசுவார்கள் என்று நம்பப்படுகிறது. இதனுடன், அவர்கள் உங்களை மீண்டும் மீண்டும் கேலி செய்து அவமானப்படுத்தலாம்.

நன்கொடை
தானம் செய்யும் போது அதை ரகசியமாக செய்ய வேண்டும் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. தானம் பற்றி யாரிடமும் சொல்லாக்கூடாது. குறிப்பாக உங்கள் மனைவியிடமிருந்து இதை மறைக்கவும். வலது கை என்ன செய்கிறது என்பதை இடது கைக்குத் தெரிய விடாதீர்கள். நீங்கள் ஒருவருக்கு நன்கொடை அல்லது நிதி உதவி செய்யும் போது, அதைப் பற்றி உங்கள் மனைவியிடம் சொல்லாதீர்கள். எதிர்காலத்தில் அவ்வாறு செய்வதிலிருந்து அவர்கள் உங்களைத் தடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications