Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
சாணக்கிய நீதியின் படி உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் கெட்ட நேரம் உங்களை நெருங்கிவிட்டதாம்...ஜாக்கிரதை
இந்திய வரலாற்றில் வாழ்ந்த மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்தவர் சாணக்கியர். சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள பல விஷயங்களில் முக்கியமானது வரப்போகும்.
இந்திய வரலாற்றில் வாழ்ந்த மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்தவர் சாணக்கியர். அவரது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், வாழ்க்கைச் சிக்கலை எதிர்கொள்ளும் போது அவை மிகவும் எளிதாக இருக்கும். அவரது சிந்தனைகளெல்லாம் சாணக்யநீதி என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. சாணக்கிய நீதியில் சாணக்கியர் விவரித்த கொள்கைகள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமானது.

சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள பல விஷயங்களில் முக்கியமானது வரப்போகும் மோசமான நேரத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வதாகும். உங்கள் வீட்டில் உள்ள சில அறிகுறிகள் உங்களை நோக்கி மோசமான நேரம் வருவதை உணர்த்தக்கூடும். சாணக்கிய நீதியின் படி வரவிருக்கும் மோசமான நேரத்தை குறிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

துளசி செடி கருகுவது
துளசி செடியை இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதை வீட்டில் வளர்த்தால் நேர்மறை ஆற்றல் நிரம்பி வழியும். ஆனால், வீட்டில்வளர்த்த துளசி செடி உங்களுக்கு கெட்ட நேரம் வரப்போகிறது என்று அர்த்தம். ஏனெனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை தான் ஏற்றுக்கொண்டு துளசி செடி கருகுவதாக நம்பப்படுகிறது.

பெரியவர்களை அவமதித்தல்
பெரியவர்களை மதித்து நடக்கும் வீட்டில் எப்போதும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும். சாணக்கிய நீதியின் படி, வீட்டில் யாராவது பெரியவர்களை தவறாக அழைக்கவோ, அவமானப்படுத்தவோ செய்தால், அந்த வீட்டில் குழப்பங்கள் வரும். வயதானவர்கள் அதிருப்தியாக வாழும் வீட்டை துரதிர்ஷ்டம் வேகமாக வரும் என்று நம்பப்படுகிறது.

கடவுள் பக்தியின்மை
சாணக்கிய நீதியின் படி கடவுள் பக்தி இல்லாதவர்கள் மற்றும் வீட்டில் பூஜை செய்யாதவர்கள் விரைவில் வாழ்க்கையில் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் விரைவில் பல ஆபத்துக்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அந்த வீட்டிற்கு கெட்ட நேரம் விரைவில் வந்துவிடும்.

தினமும் வீட்டில் பிரச்சினைகள் இருப்பது
சாணக்கிய நீதியின் படி எப்போதும் கலகங்கள் நிறைந்த வீட்டில் லக்ஷ்மி தேவி இருக்க மாட்டார்கள். உங்கள் வீட்டில் தினமும் பிரச்சினைகளும், வாக்குவாதங்களும் இருந்தால் உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டம் விரைவில் வரப்போகிறது என்று அர்த்தம். தினமும் சண்டைகள் இருக்கும் இல்லத்தில் எதிர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கிறது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சமாதானமும் அழிக்கப்படுகிறது.

பிறரை சார்ந்திருக்கும் நிலை
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு நல்லறிவு கொண்ட மனிதனும் தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கூடியவர் என்று சாணக்கியர் கூறுகிறார். உங்கள் உடல் மட்டுமல்ல, உங்கள் மன உறுதியும், அறிவும் தான் உங்களை முன்னோக்கி வழிநடத்துகிறது. சாணக்கிய நீதியின் படி, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், உணவுக்காக இன்னொருவரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.

மனைவி முன்கூட்டியே மரணிப்பது
வாழ்க்கையின் ஆரம்ப மற்றும் பிற்பகுதியில், ஒருவர் உணர்ச்சிபூர்வமான ஆதரவிற்காக பெற்றோர் மற்றும் மனைவியைச் சார்ந்துள்ளார். குறிப்பாக வயதான காலத்தில், மரணம் உங்களை உங்கள் மனைவியிடமிருந்து பிரிந்தால், அது உங்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். வயதான காலத்தில், உங்கள் துணையைப் போல யாரும் உங்களை உணர்ச்சிபூர்வமாக ஆதரிக்க மாட்டார்கள். இது மரணத்திற்கு முந்தைய மோசமான காலத்தைக் குறிக்கிறது.



Click it and Unblock the Notifications