Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
சாணக்கிய நீதியின் படி இந்த குணங்கள் இருக்கும் பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகளாம்!
சாணக்கியர் ஒரு சிறந்த அரசியல் ஞானி மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர். பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறிய அவரின் அறிவுரைகள் இன்றைய காலக்கட்டத்திற்கு பொருத்தமானவையாக இருக்கிறது.
சாணக்கியர் ஒரு சிறந்த அரசியல் ஞானி மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர். பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறிய அவரின் அறிவுரைகள் இன்றைய காலக்கட்டத்திற்கு பொருத்தமானவையாக இருக்கிறது. அவரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இன்றும் கொண்டாடப்படும் நூல்களாக உள்ளன. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும் மற்றும் அவரது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கலாம்.

சாணக்கியர் மனித வாழ்க்கை வெற்றியடைய பல விதிகளை சாணக்கிய நீதியில் வழங்கியுள்ளார். இந்த கொள்கைகளை கடைபிடிப்பவர் தனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. சாணக்கியர் திருமண மகிழ்ச்சிக்காக ஆண்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார். சில குணங்கள் கொண்ட பெண்களை மனைவியாகப் பெறும் ஆண்களை அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த குணங்களைக் கொண்ட பெண்களின் கணவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்.

கடவுள் நம்பிக்கை
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, தர்மத்தின் வழியைப் பின்பற்றும் ஒரு பெண் தன் கணவனுக்கு அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார். அத்தகைய பெண் எப்பொழுதும் சரியான பாதையில் செல்கிறார், அவர் குடும்பத்தின் மதிப்பை அதிகரிக்கிறார். கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண் வீட்டில் இருந்தால், வீட்டில் கடவுளின் அருள் எப்போதும் இருக்கும். கடவுள் இருக்கும் வீட்டில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது.

பணத்தை சரியாக கையாளுதல்
பணத்தை எப்பொழுதும் சரியாகப் பயன்படுத்தும் பெண், வீட்டை சரியாக வழிநடத்துவார், அவர் கணவருக்கு சிறந்த அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார். ஏனெனில் சாணக்கியரின் கூற்றுப்படி, கஷ்டம் ஏற்படும் போது பணம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். பணத்தை சரியாக கையாளும் பெண் சிரமங்களைக் கூட எளிதில் சமாளிக்க முடியும்.

திருப்தியுணர்வு
சாணக்கியரின் கூற்றுப்படி, திருப்தியான மற்றும் பொறுமையான மனைவியைக் கொண்ட ஒரு மனிதன் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒரு திருப்தியான பெண்ணின் கணவன் தனக்குக் கிடைப்பதில் திருப்தி அடைகிறான், அதனால் அவர்களின் திருமண வாழ்க்கை என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோன்று, ஒரு பொறுமையான பெண் கடினமான சூழ்நிலைகளிலும் ஒருங்கிணைப்புடன் நகர்ந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார். அத்தகைய குணம் கொண்ட பெண்ணின் கணவன் எல்லா வகையிலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்.

மென்மையாக பேசுதல்
சாணக்கியர், மென்மையாக பேசும் மனைவியைக் கொண்டவர் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறார். அத்தகைய பெண் குடும்பம் மற்றும் உறவுகளை நன்கு பராமரிப்பார், அதே போல் வீட்டுச் சூழலை எப்போதும் அமைதியானதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவார். இது கணவருக்கும் முழு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்குகிறது.

பொறுமை
பொறுமை என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நற்பண்பு. எல்லாச் சூழ்நிலைகளிலும் பொறுமையைக் காட்டும் ஒரு பெண், அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காண்பார் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்ட பெண்ணின் கணவன் அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார்.

முன்கோபம் இல்லாத பெண்
கோபப்படுவது இயற்கையானது. ஆனால் அதிக கோபமும், முன்கோபமும் நல்லதாக கருதப்படுவதில்லை. கோபம் மனிதனின் மிகப்பெரிய எதிரி. கோபம் இல்லாத பெண்ணின் கணவன் மிகவும் அதிர்ஷ்டசாலி என்கிறார் சாணக்கியர். ஏனென்றால், அப்படிப்பட்டவர்களின் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழல் இல்லை. அதனால் குடும்பத்தில் எப்போதும் முன்னேற்றம் இருக்கும்.



Click it and Unblock the Notifications
