Just In
- 28 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
Don't Miss
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராசிப்படி, இன்னைக்கு இத வாங்குனா செல்வம் அதிகரிக்குமாம்.. உங்க ராசிக்கு என்ன வாங்கணும் தெரியுமா?
தனத்திரயோதசி நாளன்று மாலை நேரத்தில் வீட்டில் யமதீபம் ஏற்றி, அதை வீட்டின் உயரமான இடத்தில் வைப்பார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, யமனும் மகிழ்ந்து அருளுவானாம். அதுவும் ராசிக்கேற்ற பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது.
தென்னிந்தியாவில் தான் தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம். ஆனால் வட இந்தியாவில் அது 5 நாள் கொண்டாட்டம். அதில் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ் என்னும் தனத்திரயோதசி. இந்நாளில் அட்சய திருதியைப் போன்று தங்கம், வெள்ளி வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பொதுவாக செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெற குபேரர், லட்சுமி தேவி, தன்வந்திரி மற்றும் எமதர்மர் ஆகியோரை வணங்க வேண்டும்.
அதுவும் தனத்திரயோதசி நாளன்று மாலை நேரத்தில் வீட்டில் யமதீபம் ஏற்றி, அதை வீட்டின் உயரமான இடத்தில் வைப்பார்கள். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, யமனும் மகிழ்ந்து அருளுவானாம். இத தவிர இந்நாளில் ஒருவது தங்களது ராசிக்கு ஏற்ப பொருட்களை வாங்கினால், லட்சுமி தேவியின் சிறப்பான ஆசீர்வாதத்தைப் பெறலாம். இப்போது ராசிப்படி தனத்திரயோதசி நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கலாம் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக் கிண்ணம், எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றை தனத்திரயோதசி நாளில் வாங்குவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தீபாவளிக்கு முன் கொண்டாடப்படும் தனத்திரயோதசி நாளன்று ஆடைகள் மற்றும் கலசம் வாங்குவது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்கள், சில்வர் பாத்திரங்கள் போன்றவற்றை தந்தேராஸ் என்று அழைக்கப்படும் தனத்திரயோதசி நாளில் வாங்குவது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் வெள்ளி ஆபரணங்கள் அல்லது வெள்ளிப் பாத்திரங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை தனத்திரயோதசி நாளில் வாங்கினால் நல்லது நடக்கும்.
சிம்மம்
தனத்திரயோதசி நாளன்று சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் காப்பர் பாத்திரங்கள் அல்லது காப்பர் கலசம், சிவப்பு நிற ஆடைகளை வாங்குவது அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்கள் அல்லது வெள்ளி ஆபரணங்கள் அல்லது கலசத்தை வாங்குவது மிகவும் நல்லது. இதனால் செல்வ செழிப்போடு சந்தோஷமாக வாழலாம்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் தனத்திரயோதசி நாளன்று ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் அல்லது வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்குவது, இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து, சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்கள், காப்பர் பாத்திரங்கள் மற்றும் மண் பாத்திரங்களை தனத்திரயோதசி நாளில் வாங்குவது மிகவும் நல்லது.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடைகள், வாகனங்கள், வெள்ளி பாத்திரங்கள் அல்லது வெள்ளி ஆபரணங்களை வாங்குவது, அவர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளன்று அழகு சாதனப் பொருட்கள், தங்கம் மற்றும் காப்பர் பாத்திரங்களை வாங்குவது மிகவும் நல்லது. இது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்க நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை தனத்திரயோதசி நாளில் வாங்கினால், அது அவர்களின் அதிர்ஷ்டம் இன்னும் அதிகரிக்கும்.