Just In
- 28 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 56 min ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 3 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
Don't Miss
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மோசமான மனநிலையால் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
ஒருவருக்கு தற்கொலை எண்ணமானது மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
உலகளவில் மரணத்திற்கான முக்கிய காரணிகளுள் ஒன்று தற்கொலை மற்றும் உலகளாவில தற்கொலை வழக்குகளில் இந்தியாவின் பங்கு ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது. தி லான்செட் பப்ளிக் ஹீல்தோப்செர்வ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் உலகளாவிய பெண் தற்கொலை விகிதத்தில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் உலகெங்கிலும் உள்ள ஆண் தற்கொலைகளில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவருக்கு தற்கொலை எண்ணமானது மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து உருவாகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு மனநிலைக் கோளாறு ஆகும். சோக உணர்வுகள் மற்றும் எதிலும் ஆர்வமில்லாமை போன்ற அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் போது, அவற்றை மனச்சோர்வு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த மனநல சவாலின் மற்ற சில பண்புகளில் எரிச்சலுணர்வு, அமைதியின்மை, பாலியல் ஆசையின்மை, சோர்வு, தசைவலி, தனிமையாக இருப்பது போன்ற உணர்வு, சூழலில் இருந்து விலகுதல், பதற்றம், பசியின்மை போன்றவை அடங்கும். பல தசாப்தங்களாக இவ்வுலகம் பல தற்கொலைகளைக் கண்டிருக்கிறது மற்றும் பாலிவுட் ஒரு விதிவிலக்கல்ல. குணால் சிங் முதல் சுஷாந்த் சிங் ராஜ்புத் வரை பல பாலிவுட் பிரபலங்கள் மோசமான மனநிலையால் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
குணால் சிங்
இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் நடித்தவர் தான் குணால் சிங். இவர் தமிழில் காதலர் தினம் என்ற திரைப்படத்தில் சோனாலி பிந்த்ரே ஜோடியாக நடித்தவர். இவர் 2008 ஆம் ஆண்டு ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவியுடனான உறவில் உள்ள பிரச்சனையால், குழந்தைகளைப் பார்க்க அவர் அனுமதிக்கப்படவில்லை என்பதே அவரது தற்கொலைக்கு காரணம் என்று வதந்திகள் பரவின.
ஜியா கான்
நடிகை ஜியா கான் தனது முதல் திரைப்படமான நிஷாப்ட் மூலம் பார்வையாளர்களை திகைக்க வைத்தவர். இவர் 2013 ஆம் ஆண்டு தனது ஜுஹு குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த நடிகை தனது உறவில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட மனச்சோர்வினால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
பிரத்யுஷா பானர்ஜி
பிரபல தொலைக்காட்சி தொடரில் 'ஆனந்தி' என்ற வேடத்தில் நடித்த பிரத்யுஷா, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தனது மும்பை குடியிருப்பில் இறந்து கிடந்தார். இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக, மனரீதியாக மிகவும் கடினமான காலங்களை கடந்து கொண்டிருந்தால், இந்த முடிவை எடுத்துள்ளார்.
குஷால் பஞ்சாபி
"கால்" மற்றும் "லக்ஷ்யா" போன்ற திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றிய நடிகர் தான் குஷால் பஞ்சாபி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாந்த்ரா குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேலும் இவர் தற்கொலை செய்வதற்கு முன், தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்ற குறிப்பையும் விட்டுச் சென்றார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்
சமீபத்தில் பாலிவுட்டில் தற்கொண்ட செய்து வழக்கு தான் இது. மும்பையில் உள்ள பாந்த்ரா இல்லத்தில் சுஷாந்த் இறந்து கிடந்தார். ஆதாரங்களின் படி, இவர் கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையில் இருந்தது தெரிய வந்தது.