மனிதர்களை உயிரோடு புதைத்து அதை திருவிழாவாக கொண்டாடும் வினோத கிராமம்... காரணம் என்ன தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன.

உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன. விலங்குகளை பலியிடுவது முதல் பட்டினி கிடப்பது வரை விவேகமுள்ள எவரையும் முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்யும் இத்தகைய பல நடைமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள்.

Bizarre Village Where People Burying Alive

இந்த சடங்குகளில் பெரும்பாலானவை மிகவும் பழமை வாய்ந்தவை. கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் வசிப்பவர்கள் பின்பற்றி வரும் மிகவும் வினோதமான மற்றும் பயமுறுத்தும் சடங்கைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வினோதமான இறுதி சடங்கு

வினோதமான இறுதி சடங்கு

உலகெங்கிலும் பல மரண சடங்குகள் பின்பற்றப்படுவதால், இந்த குறிப்பிட்ட சடங்கு நிச்சயமாக உங்களுக்கு பல தூக்கமில்லாத இரவுகளைத் தரும். மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் சடங்கு இது. மக்களை உயிருடன் புதைக்கும் இந்த வினோதமான நடைமுறை குறித்த கூடுதல் விவரங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

பழங்கால பாரம்பரியம்

பழங்கால பாரம்பரியம்

கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸ் மக்கள் தங்கள் கல்லறைகளில் மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் ஒரு பழமையான மனிதாபிமானமற்ற பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த பாரம்பரியம் பெரும் கொண்டாட்டத்தை உள்ளடக்கியது, இதில் வேடிக்கையானது என்னவெனில் இங்கு மக்கள் அதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

சடங்கின் வரலாறு

சடங்கின் வரலாறு

கியூபா தலைநகரிலிருந்து தெற்கே சுமார் 12 மைல் தொலைவில் சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் இந்த கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 ஆம் தேதி, கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது, மேலும் இது பச்செஞ்சோவின் அடக்கம் என்று அழைக்கப்படுகிறது.

எப்படித் தொடங்கியது?

எப்படித் தொடங்கியது?

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் கியூபாவில் ஒரு பண்டிகையாக பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ‘ஆல்கஹால் திருவிழா' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிப்பவர்கள் தாங்கள் இந்த திருவிழாவை மிக நீண்ட காலமாக பின்பற்றி வருவதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு மரபாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

திருவிழா

திருவிழா

மக்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் கூடி பேரணிகளை ஏற்பாடு செய்கிறார்கள், அங்கு அவர்கள் மற்றவர்களை சவப்பெட்டிகளில் கொண்டு சென்று புதைக்க கல்லறைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதில் முக்கியமானது இந்த நடைமுறையைப் பின்பற்றும்போது இந்த மக்கள் உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்லறையில் என்ன நடக்கிறது?

கல்லறையில் என்ன நடக்கிறது?

தூக்கி வருபவர்கள் சவப்பெட்டியை கல்லறையில் வைத்து அந்த நபரின் மரணம் குறித்து துக்கப்படுகிறார்கள். துக்கத்தைத் தொடர்ந்து ஒரு விதவை அவரது / அவள் பெயரை மிகவும் சத்தமாக கத்திவிட்டு அந்த நபரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார்.

கொண்டாட்டங்களின் தொடக்கம்

கொண்டாட்டங்களின் தொடக்கம்

கியூபா மக்களின் கூற்றுப்படி, ‘மறுபிறவி என்பது வாழ்க்கையில் மிக அழகான விஷயம்' என்ற நம்பிக்கைக்காக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. சவப்பெட்டியில் இருப்பவரை சுற்றியுள்ள அனைவரும் மது அருந்துகிறார்கள், நடனமாடுகிறார்கள், பலவகையான உணவுகளை சாப்பிடுகிறார்கள். கல்லறையில் வைக்கப்பட்டு இறந்த நபரைப் போல நடத்தப்பட்ட ஒரு நபரின் புதிய பிறப்பைக் கொண்டாட இது அவர்களை அனுமதிக்கிறது. பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இது அந்த மாகாண மக்களின் முக்கிய கொண்டாட்டமாக இருக்கிறது. இன்றும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, November 17, 2020, 15:43 [IST]
Desktop Bottom Promotion