Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
மனிதர்களை உயிரோடு புதைத்து அதை திருவிழாவாக கொண்டாடும் வினோத கிராமம்... காரணம் என்ன தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன.
உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன. விலங்குகளை பலியிடுவது முதல் பட்டினி கிடப்பது வரை விவேகமுள்ள எவரையும் முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்யும் இத்தகைய பல நடைமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இந்த சடங்குகளில் பெரும்பாலானவை மிகவும் பழமை வாய்ந்தவை. கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் வசிப்பவர்கள் பின்பற்றி வரும் மிகவும் வினோதமான மற்றும் பயமுறுத்தும் சடங்கைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வினோதமான இறுதி சடங்கு
உலகெங்கிலும் பல மரண சடங்குகள் பின்பற்றப்படுவதால், இந்த குறிப்பிட்ட சடங்கு நிச்சயமாக உங்களுக்கு பல தூக்கமில்லாத இரவுகளைத் தரும். மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் சடங்கு இது. மக்களை உயிருடன் புதைக்கும் இந்த வினோதமான நடைமுறை குறித்த கூடுதல் விவரங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

பழங்கால பாரம்பரியம்
கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸ் மக்கள் தங்கள் கல்லறைகளில் மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் ஒரு பழமையான மனிதாபிமானமற்ற பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த பாரம்பரியம் பெரும் கொண்டாட்டத்தை உள்ளடக்கியது, இதில் வேடிக்கையானது என்னவெனில் இங்கு மக்கள் அதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

சடங்கின் வரலாறு
கியூபா தலைநகரிலிருந்து தெற்கே சுமார் 12 மைல் தொலைவில் சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் இந்த கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 ஆம் தேதி, கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது, மேலும் இது பச்செஞ்சோவின் அடக்கம் என்று அழைக்கப்படுகிறது.

எப்படித் தொடங்கியது?
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் கியூபாவில் ஒரு பண்டிகையாக பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ‘ஆல்கஹால் திருவிழா' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிப்பவர்கள் தாங்கள் இந்த திருவிழாவை மிக நீண்ட காலமாக பின்பற்றி வருவதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு மரபாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

திருவிழா
மக்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் கூடி பேரணிகளை ஏற்பாடு செய்கிறார்கள், அங்கு அவர்கள் மற்றவர்களை சவப்பெட்டிகளில் கொண்டு சென்று புதைக்க கல்லறைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதில் முக்கியமானது இந்த நடைமுறையைப் பின்பற்றும்போது இந்த மக்கள் உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்லறையில் என்ன நடக்கிறது?
தூக்கி வருபவர்கள் சவப்பெட்டியை கல்லறையில் வைத்து அந்த நபரின் மரணம் குறித்து துக்கப்படுகிறார்கள். துக்கத்தைத் தொடர்ந்து ஒரு விதவை அவரது / அவள் பெயரை மிகவும் சத்தமாக கத்திவிட்டு அந்த நபரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார்.

கொண்டாட்டங்களின் தொடக்கம்
கியூபா மக்களின் கூற்றுப்படி, ‘மறுபிறவி என்பது வாழ்க்கையில் மிக அழகான விஷயம்' என்ற நம்பிக்கைக்காக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. சவப்பெட்டியில் இருப்பவரை சுற்றியுள்ள அனைவரும் மது அருந்துகிறார்கள், நடனமாடுகிறார்கள், பலவகையான உணவுகளை சாப்பிடுகிறார்கள். கல்லறையில் வைக்கப்பட்டு இறந்த நபரைப் போல நடத்தப்பட்ட ஒரு நபரின் புதிய பிறப்பைக் கொண்டாட இது அவர்களை அனுமதிக்கிறது. பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இது அந்த மாகாண மக்களின் முக்கிய கொண்டாட்டமாக இருக்கிறது. இன்றும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications