Just In
- 3 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
Don't Miss
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மனிதர்களை உயிரோடு புதைத்து அதை திருவிழாவாக கொண்டாடும் வினோத கிராமம்... காரணம் என்ன தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன.
உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் சில வினோதமான பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன. விலங்குகளை பலியிடுவது முதல் பட்டினி கிடப்பது வரை விவேகமுள்ள எவரையும் முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்யும் இத்தகைய பல நடைமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்த சடங்குகளில் பெரும்பாலானவை மிகவும் பழமை வாய்ந்தவை. கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் வசிப்பவர்கள் பின்பற்றி வரும் மிகவும் வினோதமான மற்றும் பயமுறுத்தும் சடங்கைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வினோதமான இறுதி சடங்கு
உலகெங்கிலும் பல மரண சடங்குகள் பின்பற்றப்படுவதால், இந்த குறிப்பிட்ட சடங்கு நிச்சயமாக உங்களுக்கு பல தூக்கமில்லாத இரவுகளைத் தரும். மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் சடங்கு இது. மக்களை உயிருடன் புதைக்கும் இந்த வினோதமான நடைமுறை குறித்த கூடுதல் விவரங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.
பழங்கால பாரம்பரியம்
கியூபாவில் உள்ள சாண்டியாகோ டி லாஸ் வேகாஸ் மக்கள் தங்கள் கல்லறைகளில் மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் ஒரு பழமையான மனிதாபிமானமற்ற பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த பாரம்பரியம் பெரும் கொண்டாட்டத்தை உள்ளடக்கியது, இதில் வேடிக்கையானது என்னவெனில் இங்கு மக்கள் அதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
சடங்கின் வரலாறு
கியூபா தலைநகரிலிருந்து தெற்கே சுமார் 12 மைல் தொலைவில் சாண்டியாகோ டி லாஸ் வேகாஸில் இந்த கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5 ஆம் தேதி, கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது, மேலும் இது பச்செஞ்சோவின் அடக்கம் என்று அழைக்கப்படுகிறது.
MOST READ: உங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்...!
எப்படித் தொடங்கியது?
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் கியூபாவில் ஒரு பண்டிகையாக பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ‘ஆல்கஹால் திருவிழா' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிப்பவர்கள் தாங்கள் இந்த திருவிழாவை மிக நீண்ட காலமாக பின்பற்றி வருவதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு மரபாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
திருவிழா
மக்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் கூடி பேரணிகளை ஏற்பாடு செய்கிறார்கள், அங்கு அவர்கள் மற்றவர்களை சவப்பெட்டிகளில் கொண்டு சென்று புதைக்க கல்லறைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதில் முக்கியமானது இந்த நடைமுறையைப் பின்பற்றும்போது இந்த மக்கள் உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கல்லறையில் என்ன நடக்கிறது?
தூக்கி வருபவர்கள் சவப்பெட்டியை கல்லறையில் வைத்து அந்த நபரின் மரணம் குறித்து துக்கப்படுகிறார்கள். துக்கத்தைத் தொடர்ந்து ஒரு விதவை அவரது / அவள் பெயரை மிகவும் சத்தமாக கத்திவிட்டு அந்த நபரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார்.
MOST READ: நீங்கள் காதலிக்கும்போது இந்த காரணங்களுக்காக அவங்கள ரிஜெக்ட் பண்ணாதீங்க... நஷ்டம் உங்களுக்குத்தான்..!
கொண்டாட்டங்களின் தொடக்கம்
கியூபா மக்களின் கூற்றுப்படி, ‘மறுபிறவி என்பது வாழ்க்கையில் மிக அழகான விஷயம்' என்ற நம்பிக்கைக்காக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. சவப்பெட்டியில் இருப்பவரை சுற்றியுள்ள அனைவரும் மது அருந்துகிறார்கள், நடனமாடுகிறார்கள், பலவகையான உணவுகளை சாப்பிடுகிறார்கள். கல்லறையில் வைக்கப்பட்டு இறந்த நபரைப் போல நடத்தப்பட்ட ஒரு நபரின் புதிய பிறப்பைக் கொண்டாட இது அவர்களை அனுமதிக்கிறது. பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இது அந்த மாகாண மக்களின் முக்கிய கொண்டாட்டமாக இருக்கிறது. இன்றும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.