Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? அதைக் கட்டுப்படுத்த தினமும் இத செய்யுங்க போதும்...
ஜோதிடத்தின் படி, கோபம் என்பது நடத்தை மற்றும் மனதுடன் தொடர்புடையது மட்டுமல்ல. ராகு மற்றும் செவ்வாய் தோஷத்தாலும் ஒருவர் அதிகம் கோபம் கொள்வார். ஜோதிடத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க சில பரிகாரங்கள் உள்ளன.
தற்போதைய பரபரப்பான உலகில் அதிகரித்து வரும் பொறுப்புக்களால் பலரும் எளிதில் கோபமும் எரிச்சலும் அடைகிறார்கள். கோபம் கொள்வது ஒரு மனிதனின் குணங்களுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவில் கோபம் வரும். இப்படிப்பட்ட கோபம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அதிகம் கோபம் கொள்பவர்கள் சிறு தவறான பேச்சின் மூலமாகவும் கோபம் கொள்வார்கள். இத்தகையவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக அவர்களை சுற்றியிருப்பவர்கள் கருதுவார்கள். மேலும் இவர்களுடன் பேசவும் அச்சம் கொள்வார்கள்.

நீங்களும் இப்படி அதிகம் கோபம் கொள்பவரா? உங்களிடம் பேச மற்றவர்கள் அச்சம் கொள்கிறார்களா? அனைவரும் உங்களை ஒதுக்குவது போன்று உணர்கிறீர்களா? அப்படியானால் முதலில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். ஜோதிடத்தின் படி, கோபம் என்பது நடத்தை மற்றும் மனதுடன் தொடர்புடையது மட்டுமல்ல. ராகு மற்றும் செவ்வாய் தோஷத்தாலும் ஒருவர் அதிகம் கோபம் கொள்வார். ஜோதிடத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க சில பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்கள் செய்வதனால் கிரக தோஷங்களைக் குறைத்து கோபத்தைக் குறைக்கலாம். இப்போது கோபத்தைக் குறைக்க உதவும் பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.

சந்தனம்
பொதுவாக சந்தனம் குளிர்ச்சியான பண்பைக் கொண்டது. ஜோதிட சாஸ்திப்படி, அதிகம் கோபப்படுபவர்கள் சந்தனத்தைப் பயன்படுத்துவது நல்லது. கோபம் கொள்பவர்கள் தினமும் சந்தனத்தை நெற்றியில் வைப்பதால், மனம் அமைதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ராகு தோஷத்தில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

வெள்ளி
ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பேசும் போது உங்களுக்கு கோபம் வந்தால், அந்த கோபத்தைக் கட்டுப்படுத்த கையில் வெள்ளி மோதிரத்தை அல்லது கழுத்தில் வெள்ளி செயினை அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் வெள்ளி மனதை அமைதிப்படுத்தும். அதோடு, ஒருவருக்கு சந்திர தோஷம் இருந்தால், அவருக்கு கோபம் அதிகம் வரும். எனவே சந்திர தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்க வெள்ளி ஆபரணங்களை அணிவது நல்லது.

சூரிய பகவானை வணங்கவும்
கோபம் அதிகம் கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த, தினமும் காலையில் குளித்த பின்னர் சூரிய பகவானை வணங்க வேண்டும். அதுவும் அதிகாலையில் குளித்ததும் மனதில் சூரிய பகவானை நினைத்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.

சிவப்பு நிறத்தை தவிர்க்கவும்
உங்களுக்கு சிவப்பு நிறம் பிடித்த நிறமாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கோபம் அதிகம் வருமாயின் சிவப்பு நிற ஆடைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் சிவப்பு நிறம் உமிழும் இயற்கையின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆகவே உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த நினைத்தால், வெள்ளை அல்லது க்ரீம் நிற ஆடைகளை அதிகம் அணியுங்கள்.

அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யவும்
அனுமன் தைரியசாலி மட்டுமின்றி, பொறுமைசாலியும் கூட. அதிகம் கோபம் கொள்பவர்கள் அனுமனை நினைத்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். இதனால் செவ்வாய் தோஷம் குறைவதோடு, கோபமும் குறையும். இது தவிர, வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கிழக்கு திசையில் தீபத்தை ஏற்றுங்கள். இச்செயலால் ஒருவரின் கோபம் குறையும்.



Click it and Unblock the Notifications