இந்தியர்கள் பசுமாட்டை கடவுளாக வழிபடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் பசுவை வெறும் விலங்காகவும், உணவுப்பொருளாகவும் மட்டும் பார்க்கும்போது இந்தியாவில் மட்டும்தான் அது கடவுளாக மதிக்கப்படுகிறது.

இந்தியாவில் வினோதமான பழக்கவழக்கங்களும், சடங்குகளும் ஏராளமாக உள்ளது. அதில் வெளிநாட்டினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு வினோத சடங்கு பசு வழிபாடாகும். ஏனெனில் உலகம் முழுவதும் பசுவை வெறும் விலங்காகவும், உணவுப்பொருளாகவும் மட்டும் பார்க்கும்போது இந்தியாவில் மட்டும்தான் அது கடவுளாக மதிக்கப்படுகிறது.

Why Indians worship cow as a sacred animal

இந்திய மக்கள் ஏன் பசுவை கடவுளாக வழிபடுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? இது இந்து மத நூல்களில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது அதன் பயன்களுக்காக அவற்றை பாதுகாக்க உருவாக்கப்பட்ட மூடநம்பிக்கையா என்று யோசித்துள்ளீர்களா? இந்த பதவில் அதற்கான பதிலை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில ஆழமான உண்மைகள்

சில ஆழமான உண்மைகள்

இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம் மற்றும் பூடான் போன்ற நாடுகளிலும் பசு கடவுளாக மதிக்கப்படுகிறது. வேத காலங்களில் இருந்தவர்கள் ஆயர்களாக இருந்தனர். அவர்களின் அடிப்படை தேவையே பால் மற்றும் சாணமாகத்தான் இருந்தது. பசுவின் சாணம்தான் இந்தியாவில் எரிபொருளாகவும், உரமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் இது வீட்டை சுத்தம் செய்யவும், கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசு வேத கால மக்களுக்கு உணவு, எரிபொருள், உரம் , கிருமிநாசினி என அனைத்தையும் அளித்தது.

நெருப்பு வழிபாடு

நெருப்பு வழிபாடு

பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு முக்கிய பொருள் நெய் ஆகும். இது யாகத்திற்கும், கடவுள் வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நெருப்பு வழிபாடு என்பது அனைத்து வழிபாடுகளை விடவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது பசுவுக்கும், அதன்மூலம் கிடைக்கும் பொருட்களுக்கும் மதரீதியான முக்கியத்துவத்தை கொடுக்கிறது.

 அமைதியான விலங்கு

அமைதியான விலங்கு

உருவத்தில் பெரியதாக இருந்த போதிலும் பசு எப்பொழுதும் அமைதியான விலங்காகவும், அச்சுறுத்தல் இல்லாத விலங்காகவும் இருக்கிறது. இந்திய சாலைகளில் பசுமாடுகள் அமைதியாக உலா வருவதை நாம் பார்க்கலாம். . பசுவின் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் அமைதியை இந்தியர்கள் எப்போதும் பாராட்டியுள்ளனர். மேலும் பசுவுக்கு அதன் கன்றுக்குட்டி மீது இருக்கும் பாசம் அன்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வேதகாலத்தில் இருந்து கூறப்படுகிறது.

நிலைத்தன்மை

நிலைத்தன்மை

இந்தியர்கள் நாடோடிகளாக இருந்த போது மாமிசத்தை உண்பவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் ஆற்றுக்கரையில் நிலையான இடத்தை அமைத்த பிறகு அவர்களுக்கு விவசாயத்தின் பலனும், அவசியமும் புரிந்தது. எப்போதும் அவர்களுக்கு பசுக்கள் உதவியாக இருந்தன.

மேற்கத்திய கலாச்சாரம்

மேற்கத்திய கலாச்சாரம்

மேற்க்கத்திய கலாச்சாரத்தை பொறுத்தவரை பசு மாடு இந்தியர்களுக்கு செல்லப்பிராணி போன்றது என்று நம்பப்படுகிறது. மேற்கு நாடுகளில் நீங்கள் நாய் மாமிசம், பூனை மாமிசம் போன்றவற்றை பார்க்க இயலாது, அதற்கு காரணம் அவை அங்கு செல்லப்பிராணிகள். அதேபோலத்தான் இந்தியர்களுக்கு பசு மாடு செல்லப்பிராணியாகும்.

பயன்கள்

பயன்கள்

சென்ற தலைமுறை வரை கூட அனைத்து குடும்பங்களும் வீட்டிற்க்கு ஒரு பசுமாடு வைத்திருந்தார்கள். நமக்கு தேவையான உணவுப்பொருட்கள், வழிபாட்டு பொருட்கள், நோய்களில் இருந்து பாதுகாப்பு, எரிபொருள் என அனைத்தையும் பசுமாடுகள் வழங்கியது. அதனால்தான் இந்தியர்கள் பசுவை பாதுகாக்க அவற்றை வழிபட தொடங்கினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, July 2, 2019, 11:32 [IST]
Desktop Bottom Promotion