Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உங்களின் ராசிப்படி எந்த ராசிக்காரர் உங்களுக்கு மோசமான எதிரியாக இருப்பார்கள் தெரியுமா?
நமக்கு ஆயிரம் எதிரிகளும், துரோகிகளும் இருந்தாலும் அதில் ஒருவர் மட்டுமே அதிதீவிரமாக நமது அழிவிற்காக காத்திருப்பார்கள்.
உலகம் என்பது நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் கலந்திருப்பதாகும். ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை அவர்களின் சூழ்நிலையே முடிவு செய்கிறது. நமக்கு நூறு நண்பர்கள் இருந்தால் இரண்டு எதிரியாவது நிச்சயம் இருப்பார்கள். அனைவருக்கும் நல்லவராக இருப்பது என்பது அந்த கடவுளால் கூட முடியாத காரியம் ஆகும். இந்த சூழ்நிலையில் நமக்கே தெரியாமல் கூட நமக்கு எதிரிகளும், துரோகிகளும் இருக்கலாம்.
நமது வாழ்வில் நிகழும் அனைத்து சம்பவங்களும் முன்பே நிர்ணயிக்க பட்டவைதான். அப்படி இருக்கும்போது நமது எதிரிகளும் முன்பே தீர்மானிக்க பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
நமக்கு ஆயிரம் எதிரிகளும், துரோகிகளும் இருந்தாலும் அதில் ஒருவர் மட்டுமே அதிதீவிரமாக நமது அழிவிற்காக காத்திருப்பார்கள். அப்படி காத்திருப்பவர்கள் நமது ராசியை பொறுத்து குறிப்பிட்ட ராசிக்காரராகத்தான் இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி உங்கள் ராசிப்படி எந்த ராசியில் பிறந்தவர்கள் உங்களுக்கு மோசமான எதிரியாக, துரோகியாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் மற்றும் மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வில்லனாக இருக்கப்போவது இன்னொரு மேஷ ராசியில் பிறந்தவராகத்தான் இருக்கும். இருவருமே சமமானவர்களாக இருப்பார்கள் அதேசமயம் மூர்க்கமானவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் பொதுவாகவே தலைமை பண்பு உள்ளவர்கள். எனவே யார் தலைமை இடத்திற்கு வருவதென்று இவர்களுக்குள் எப்பொழுதும் சண்டைகள் ஏற்படும்." ஒரு உரையில் ஒரு கத்திதான் இருக்கனும் " என்று நினைப்பவர்கள்.
ரிஷபம் மற்றும் சிம்மம்
ரிஷப ராசிகாரருக்கு வில்லனா இருக்கிறது சிம்ம ராசிக்காரர்கள்தான். அலட்சியமும், சோம்பேறித்தனமும் இவர்கள் கூடவே பிறந்தது. எப்பொழுதும் முன்னிலை வகிக்க இவர்கள் விரும்பமாட்டார்கள். இதுதான் சிம்ம ராசிக்கார்களுடன் இவர்களுக்கு மோதல் எழ காரணமாகும். இவர்கள் எப்பொழுதும் பிடிவாதமாக இருப்பவர்கள் எனவே தன் தனி வழியில் செல்லும் சிம்ம ராசிக்காரர்கள் இவர்களுடன் இருந்தால் விரைவில் எதிரியாகி விடுவார்கள்.
மிதுனம் மற்றும் கடகம்
மிதுன ராசிக்காரர்களின் வில்லன் கடக ராசிக்காரர்கள் ஆவர். சுதந்திரமும், எச்சரிக்கை உணர்வும் இல்லாத மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் உணர்ச்சிவச படக்கூடிய கடக ராசிக்காரர்கள் எதிரியாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மற்றவர்களுடன் பேசுவதில் திறமையற்றவர்களாய் கடக ராசிக்காரர்கள் இருக்கும்போது மிதுன் ராசிக்காரர்கள் அதனை மிகவும் எளிமையாக செய்துவிடுகிறார்கள். மிதுன ராசியில் பிறந்தவர்கள் காமெடி என நினைத்து கொண்டு செய்யும் செயல்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களை கோபப்படுத்துவதாகவே இருக்கும்.
MOST READ: ஆண்களே! வயதில் மூத்த பெண்ணுடன் "உறவு" வைத்துக்கொண்டால் என்ன பிரச்சினை ஏற்படும் தெரியுமா?
கன்னி மற்றும் கும்பம்
இவர்களுக்குள் எழும் பிரச்சினை மிதுன- கடக ராசிக்காரர்களுக்குள் எழுவது போன்றதுதான். இவர்கள் இருவருமே சுயநலத்தை பெரிதாக என்னும் ராசிகள் ஆவர். கன்னி ராசிக்காரர்கள் தர்க்கரீதியாகவும், புத்திசாலித்தனமாகவும் அணுகும் போது கும்ப ராசிக்காரர்களோ அலட்சியமாகவும். மூர்கத்தனமாகவும் நடந்து கொள்வதால் இவர்களின் நட்பு முறிந்து விரைவில் எதிரியாக மாறிவிடுவார்கள்.
துலாம் மற்றும் மகரம்
துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனில் இருவருமே பலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பழமைவாதத்தில் மூழ்கியிருக்கும் மகர ராசிக்காரர்கள் அனைவரிடம் சகஜமாக பழகக்கூடிய துலாம் ராசிகர்களுடன் பழகுவது மிகவும் கடினம். அந்த நொடியை அனுபவிக்க வேண்டும் என்று துலாம் ராசிக்காரர்கள் நினைக்கும் போது மகர ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மர்மமாகவும், விலகி இருப்பதும் துலாம் ராசிகர்களுக்கு மகர ராசிக்காரர்களிடம் பிடிக்காத குணமாகும்.
விருச்சிகம் மற்றும் கும்பம்
விருச்சிக ராசிக்காரருக்கும், கும்ப ராசிக்காரருக்கும் இடையே இருக்கும் உறவானது கணிக்க முடியாத ஒன்றாகும். அவர்கள் இருவருமே மற்றவர்களால் கட்டுப்படுத்த படுவதையோ, கண்காணிக்க படுவதையோ விரும்பமாட்டார்கள். இதுவே அவர்களின் உறவை மிகவும் சுவாரஸ்யமானதாக வைத்திருக்கும். அவர்களுக்குள் பிரச்சினை எப்போது எதிரியாக மாறுகிறினார்கள் என்றால் அவர்களுக்குள் எழும் முரண்பாடுகளை கையாளும்போதுதான், இருவருமே தங்கள் நிலையிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். தான் சொல்வதுதான் சரி என்று நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள், இது அவர்களுக்குள் தீராப்பகையை உண்டாக்கும்.
MOST
READ:
இந்தியாவில்
பத்தில்
ஒரு
பெண்ணுக்கு
இந்த
பாலியல்
நோய்
உள்ளதாம்...காரணம்
என்ன
தெரியுமா?
தனுசு மற்றும் மீனம்
வெளிப்படையாக பேசக்கூடிய தனுசு ராசிக்கார்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடிய மீன ராசிக்காரர்கள் எளிதில் காயப்படுத்தி விடுவார்கள். மீன ராசிக்காரர்கள் ஒருபோதும் மூர்ககத்தனத்தையோ, கசப்பு உணர்வுகளையோ அனுமதிக்க மாட்டார்கள். இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் அதிகம் பேசக்கூடிய தனுசு ராசிக்காரர்களுக்கு எதிரியாகத்தான் இருப்பார்கள்.