For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாஸ்திரங்களின் படி தம்பதியினர் இந்த இடங்களில் கலவியில் ஈடுபடுவது மிகப்பெரிய பாவமாகும்...!

பண்டைய காலங்களில் இந்த புனித பிணைப்பை நிறுவுவதற்கு சில நேரங்களையும், விதிமுறைகளையும் நிறுவியிருக்கிறார்கள்.

|

காதல் பற்றியும் பாலியல் உறவுகள் பற்றியும் நமது வேத காலங்களில் முதலே குறிப்புகள் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில் இதற்கான வேர்களை கடவுள்களிடமே செல்கிறது. மனிதகுலத்தை விரிவுப்படுத்துவதில் இருந்து அவர்களுக்கிடையே மனித நேயத்தை வளர்ப்பது வரை அனைத்தும் காதலுடன் தொடர்புடையது.

Places where a couple should refrain from getting intimate

முறையான வழிகளில் பாலியல் உறவை வைத்துக்கொண்டால் அது ஒருவருக்கு வாழ்க்கையில் மேன்மையை வழங்கும். பண்டைய காலங்களில் இந்த புனித பிணைப்பை நிறுவுவதற்கு சில நேரங்களையும், விதிமுறைகளையும் நிறுவியிருக்கிறார்கள். சாஸ்திரங்களின் படி எந்தெந்த இடங்களில் தம்பதியினர் கலவியில் ஈடுபடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெருப்பு முன்னிலையில்

நெருப்பு முன்னிலையில்

மதரீதியாக வளர்க்கப்பட்ட நெருப்பிற்கு முன்னால் தம்பதிகள் ஒருபோதும் புணர்தலில் ஈடுபடக்கூடாது. இது அவர்களுக்கு கடவுளின் சாபத்தை பெற்றுத்தரும்.

மரியாதைக்குரிய நபர்

மரியாதைக்குரிய நபர்

வயதில் மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்பது அனைத்து சாஸ்திரங்களும் கூறும் ஒன்று. அதன்படி வயதானவர்கள் அருகில் இருக்கும்போதோ அல்லது அவர்கள் அறியும்படியோ ஒருபோதும் உறவில் ஈடுபடக்கூடாது.

நோயாளிகள் அருகில்

நோயாளிகள் அருகில்

நோய்வாய்ப்பட்டவர்கள் அருகில் இருக்கும்போது அந்த இடத்திற்கு அருகில் உறவில் ஈடுபடக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. மரணத்தின் வாசலில் இருக்கும் ஒருவருடன் ஒரே கூரையை பகிர்ந்து கொள்ளும்போது அங்கே உறவில் ஈடுபடக்கூடாது என்று கூறப்படுகிறது.

MOST READ: உங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா?

குழந்தையின் முன்னிலையில்

குழந்தையின் முன்னிலையில்

சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி குழந்தைகளின் முன்னிலையிலோ அல்லது குழந்தைகள் இருக்கும் அறையிலோ ஒருபோதும் கலவியில் ஈடுபடக்கூடாது. இது மிகப்பெரிய பாவமாகும்.

ஆற்றுப்புறம்

ஆற்றுப்புறம்

நதி அல்லது நீரோடை அருகே ஒருபோதும் உறவில் ஈடுபடக்கூடாது. தண்ணீர் ஓடும் சத்தம் தம்பதிகளின் காதில் விழாத தூரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடக்கூடாது. இது மிகவும் புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது.

கோவில் அல்லது கோவிலுக்கு முன்

கோவில் அல்லது கோவிலுக்கு முன்

கோவிலின் வளாகத்தினுள் அல்லது அதற்கு முன்னால் எந்த வீடும் கட்டப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக படுக்கையறை கோவிலை நோக்கி இருக்கக்கூடாது. கோவிலுக்கு அருகில் இருக்கும் இடத்தில் உறவில் ஈடுபடக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

மற்றொருவரின் வீடு

மற்றொருவரின் வீடு

ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் போது அங்கு அவர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும் மாறாக உறவில் ஈடுபடவதை தவிர்க்க வேண்டும்.

MOST READ: அனுமன் ஏன் வேண்டுமென்றே தன் சகோதரன் பீமனிடம் வம்புக்கு சென்றார் தெரியுமா?

இறந்த உடலுக்கு அருகில்

இறந்த உடலுக்கு அருகில்

சாஸ்திரங்களின் படி ஒருவர் இறந்து அவர்கள் ஒரே கூரைக்கு கீழே இருந்தால் அவர்கள் உங்களுக்கு வேண்டியவர்களாக இல்லாவிட்டாலும் தம்பதியினர் கலவியில் ஈடுபடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Shastra: Places where a couple should refrain from getting intimate

According to Vastu Shastra couples should not get intimate in these places.
Story first published: Tuesday, July 9, 2019, 15:21 [IST]
Desktop Bottom Promotion