Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
ஜோடின்னா இப்படிதான் இருக்கணும்... கல்யாணத்துல இவங்க செஞ்ச காரியத்த பாத்திங்களா?
ஒரு அந்நியோன்யமான கணவன், மனைவியைப் பற்றிய கதையை இந்த கட்டுரையில் மிக விளக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய அழகான தொகுப்பு தான் இது.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள். அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான்.

வெறும் வார்த்தைகளால் அன்பை பரிமாறாமல் "நீயும் நானும் ஒன்னு" என்று பாட்டாகவே பாடி விட்டால் அங்கே கலகலப்பு தான். அப்படித்தான் இந்த தம்பதிகளும் தங்கள் திருமணத்தில் பாட்டு பாடி அசத்தியுள்ளனர். "கொத் தே ஆ" என்ற பாடலை பாடி வைரலாக்கி உள்ளனர். பாட்டை விட அவர்களின் வெட்கமும் காதலும் தான் அழகோ அழகு.

புதுமணத் தம்பதிகள்
புதுமணத் தம்பதிகளான ஆனந் மற்றும் வீனா பாடிய பாடல் தான் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
குறிப்பு : உங்களுக்கு ஹிந்தி, பஞ்சாபி மொழி தெரிந்து இருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை ரசிப்பீர்கள்.

பாட்டு போட்டி
இந்த வீடியோ ஆரம்பிக்கும் போதே அழகான கொஞ்சலுடன் ஆரம்பிக்கிறது. வீனா ஆனந்தை கேலி செய்யும் விதமாக "உன் தாடியை கட் செய்து விடு, என் அம்மா பார்க்கிறார்" என்கிறார். அதற்கு ஆனந்" உன் அம்மாவை சமாதானம் செய்து விடுவேன் இருப்பினும் உன் அன்புக்காக என் தாடியை எடுப்பேன்" என்று அழகாக பதிலளிக்கிறார்.
வீனா மறுபடியும் ஆனந்திடம் "நீ என் அப்பாவை கண்டு பயப்படுகிறாய்" என்கிறார் அதற்கு ஆனந் அழகாக" அவர் என்னை அடித்தால் கூட உனக்காக அவரை சமாதானப்படுத்தி விடுவேன்" என்கிறார்.

கேள்வியும் பதிலும்
இப்படி ஒருவருக்கொருவர் அழகாக பதிலளித்துள்ளனர் அந்த பாட்டில். பார்க்கும் போதோ இந்த வீடியோ அவ்வளவு க்யூட்டாக உள்ளது என்பதால் இணையத்தில் பெரும் லைக்ஸ்யை பெற்று வலம் வருகிறது. ஒருவருக்கொருவர் அழகாக அன்பை பரிமாறிக் கொண்டு வாழ்க்கையை தொடங்குகின்றனர்.
என்னங்க வீடியோ பார்த்த கையோட இந்த தம்பதிகளையும் வாழ்த்திச் செல்லலாமே. இணைபிரியா காதலுடன் வாழ்க!



Click it and Unblock the Notifications