Just In
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 7 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 7 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா?
பண்டைய இந்திய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.
பண்டைய இந்திய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. இந்த விதிமுறைகள் பிரம்மாவாரதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.
இந்த விதிமுறைகள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய உதவும். நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்ததராக இருந்தாலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிடில் உங்கள் செல்வமும், புகழும் விரைவில் அழிந்து விடும். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் ஏழ்மை ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.
மனதில் கொள்ள வேண்டிய தேதிகள்
இந்து நாள்காட்டியின் படி ஆண்கள் அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி மற்றும் அஷ்டமி ஆகிய நாட்களில் எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளக்கூடாது, அதேசமயம் அசைவ உணவும் சாப்பிடக்கூடாது. சாஸ்திரங்களின் படி இது பாவச்செயலாகும்.
தரையில் வைக்கக்கூடாத பொருட்கள்
தெய்வங்களின் சிலைகள் மற்றும் படங்கள், விளக்குகள், சிவலிங்கம், தங்கம், சங்கு போன்ற பொருட்களை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. ஒருவேளை இவற்றை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் தரையில் ஒரு துணியை விரித்து அதன்மீது வைத்து வழிபடவும்.
உடலுறவு
பகல் பொழுது மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரம் பிரார்த்தனைக்கு உரிய நேரமாகும். இந்த நேரத்தில் உறவில் ஈடுபடுவது லக்ஷ்மி தேவியை அவமதிக்கும் செயலாகும். மேலும் வேதங்களில் கூறியுள்ள படி இந்த நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆண் மற்றும் பெண்களுக்கு கண் மற்றும் காது தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.
MOST READ: இந்த ராசிக்காரங்க மத்தவங்க மனசுல இருக்கறத ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க... உஷாரா இருங்க...!
ஆண்கள் நினைவிற்கொள்ள வேண்டியது
ஆண்கள் எப்பொழுதும் முன்பின் தெரியாத பெண்கள் மீது காமத்தில் ஈடுபடக்கூடாது. இது அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கும்.
பெண்கள் நினைவிற்கொள்ள வேண்டியது
கணவனை வெறுக்கும் பெண்கள், அவர்களை தவறான முறையில் நடத்துபவர்கள், காரணமே இல்லாமல் அவர்கள் மீது கோபப்படுவார்கள், அவர்கள் பேச்சை மதிக்காத பெண்கள் அடுத்த பிறவியில் காகமாக பிறப்பார்கள் என்று வேதங்கள் கூறுகிறது.
விலகி இருக்க வேண்டிய நபர்கள்
சுகாதாரம் இல்லாதவர்களிடம் இருந்தும், கடுமையான குணம் கொண்டவர்களிடம் இருந்தும் எப்பொழுதும் விலகி இருக்க வேண்டும். இத்தகையவர்கள் உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு ஏழ்மை மற்றும் அழிவையும் ஏற்படுத்தும்.
MOST READ: மஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா?
சூரிய அஸ்தமனம்
சூரியனும், சந்திரனும் மறையும் போது கண்டிப்பாக பார்க்கக்கூடாது. இது புனிதமற்றதாக கருதப்டுவதுடன் கண் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
இவர்களை அவமதிக்கக்கூடாது
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் வயதில் மூத்தவர்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. இவர்களை அவமதிப்பவர்கள் தனகுபேரரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
வாக்குறுதி அளித்த நாளில் தானம் செய்யவும்
ஒரு குறிப்பிட்ட நாளில் தானம் செய்ய முடிவெடுத்தல் கண்டிப்பாக அந்த நாளில் தானம் செய்துவிட வேண்டும். தாமதமாக தானம் செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
பாதத்தை சுத்தம் செய்யவும்
வீட்டிற்குள் நுழையும் முன் எப்பொழுதும் பாதத்தை சுத்தமாக கழுவிட வேண்டும், இது உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன் லக்ஷ்மியின் அருளையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.
வெண்கல பாத்திரம்
வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வெண்கல பாத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. இது உங்கள் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.