Just In
- 35 min ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 2 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 3 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 4 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
Don't Miss
- Movies Baakiyalakshmi: பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திரும்ப திரும்ப கேட்ட பழனிச்சாமி!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் அடுத்தவர்களின் விஷயங்களில் மூக்கை நுழைத்து கொண்டே இருப்பார்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர்களின் வேலையில் தலையிடுவதை தங்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வதை விட சுவாரஸ்யமானது எதுவும் இல்லை. ஆனால் அதனை அவர்களாக கூற வேண்டுமே தவிர நாமாக அவர்களை தொல்லை செய்தோ அல்லது அவர்களுக்கு தெரியாமலோ தெரிந்து கொள்ள முயலுவது என்பது முறையானதல்ல மேலும் இது அநாகரிகமான ஒன்றாகும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர்களின் வேலையில் தலையிடுவதை தங்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஒன்று இவர்கள் எப்பொழுதும் அடுத்தவர்களிடம் கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள், சிலசமயம் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பற்றி துப்பறியவும் செய்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அடுத்தவர்களின் வேலையில் அதிகம் மூக்கை நுழைப்பார்கள் என்று பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இவர்களிடம் யாரேனும் ரகசியத்தை மறைப்பது இவர்களுக்கு தெரிய வந்தால் அவர்களை எப்படியும் பேசியே ரகசியத்தை கூறவைக்க முயற்சிப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலியானவர்கள் அதனால் எப்படியும் இவர்கள் நினைத்ததை தெரிந்து கொள்வார்கள். அனைத்தும் இவர்களுக்கு சுவாரஸ்யத்தை வழங்குவதாக இருக்கும், இவர்கள் அடுத்தவர்களின் வேலையில் மூக்கு நுழைக்கிறோம் என்பது இவர்களுக்கே தெரியாது, ஆனால் உண்மையில் இவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எந்த வதந்திகளையும் இழக்க விரும்பமாட்டார்கள். யார் என்ன சொன்னார்கள் என்பதில் இருந்து மற்றவர்களின் சின்ன சின்ன ரகசியங்களை கூட தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இதனை இவர்கள் அவர்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் ஆனால் அதனை தெரிந்து கொள்வது இவர்களின் ஆர்வமாகும். இவர்களுக்கு மர்மத்தை தெரிந்து கொள்வதும், துப்பறிவதும் இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். ஒரு சிறிய தகவல் கிடைத்தாலும் அதைவைத்து முழுத்தகவலையும் தெரிந்து கொள்ளும் திறமை இவர்களுக்கு கிடைத்த வரமாகும். இவர்களின் இந்த துப்பறியும் ஆர்வம் இவர்களுக்கு தெரிந்தவர்களோடு நின்று விடாது.
MOST
READ:
எடையை
குறைக்க
விரும்புபவர்கள்
வெண்டைக்காயை
சாப்பிடலாமா?
கூடாதா?
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சிலசமயம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள். எனவே அவர்கள் தனக்கு தெரிய வேண்டியது மிகவும் குறைவாக தெரிவதாக உணருவார்கள். தனக்கு அனைத்து தகவல்களும், முழுபிரச்சினையும் தெரிந்து விட்டால் தன்னால் அதற்கான தீர்வை கூறமுடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்ள இவர்கள் முயலும்போது மாட்டிக்கொண்டால் அதனை சிரித்தே மழுப்பி விடுவார்கள்.
விருச்சிகம்
ராசியின் சின்னத்திலேயே மர்மத்தை கொண்டிருக்கும் இவர்கள் மற்றவர்களின் ரகசியங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவர்கள் ராஜதந்திரத்தில் சிறந்தவர்கள், அதனால் மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் இருக்குமிடத்தில் இவர்களுக்கு தெரியாத ரகசியங்களே இருக்காது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள், எனவே அவர்கள் தன்னை சுற்றி இருக்கும் அனைத்தை பற்றியும் தெரிந்து கொள்ள தயாராக இருப்பதோடு அதற்கு முயற்சியும் செய்வார்கள். எப்படி கேள்வி கேட்டால் யாரிடம் இருந்து தகவலை கறக்கலாம் என்று இவர்களுக்கு நன்கு தெரியும். சிலசமயம் மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வது அவர்களை சோதிப்பதற்காக கூட இருக்கலாம்.
தனுசு
அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வது என்பது இவர்களுக்கு பிறவி குணமாகும். அனைவராலும் ஏன் நேர்மையாக இருக்க முடியவில்லை என்ற கேள்வி இவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். தனக்கு தெரிந்த ரகசியத்தை கொண்டு மற்றவர்களின் பிரச்சினைகள் சமாளிக்க இவர்கள் முயல்வார்கள். மற்றவர்கள் கேட்காத வரை அவர்களின் விஷயத்தில் தலையிடமாட்டார்கள் ஆனால் தொடங்கிவிட்டால் அவர்களே விரும்பாவிட்டாலும் அதைவிட்டு வெளியே வரமாட்டார்கள்.