Just In
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 3 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கதை விட்டே அனைவரையும் கவுத்து விடுவார்களாம் தெரியுமா?
பிறரிடம் உங்கள் மனதில் படுவதை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.
அனைவருக்குமே வெளிப்படையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவரும் அப்படி இருப்பதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இது வெளிப்படையாக இருப்பது மிகவும் தேவையான ஒன்றாகும். அனைவருக்குமே அவர்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது.
பிறரிடம் உங்கள் மனதில் படுவதை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். அனைவருமே வெளிப்படையாக பேசுபவர்கள்தான் ஆனால் சிலர் அளவிற்க்கு அதிகமாக வெளிப்படையாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாக கூட இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக வெளிப்படையாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்பொழுதும் அதிகம் பழகுவதில்லை என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு ஏனெனில் அனைத்து சமூக நிகழ்வுகளிலும் இவர்கள்தான் முக்கியமானவராக இருப்பார்கள். இவர்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பதுடன் நன்றாக பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் பற்றிம் அனைத்தையும் பற்றி பேசக்கூடியவர்கள். மிதுன ராசிக்காரர்கள் தன்னை சுற்றி ஆட்கள் இருக்கும் போது அதிக உற்சாகமாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் கதைகள், ஜோக்குகள், தனிப்பட்ட விஷயங்கள் என அனைத்திற்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.
சிம்மம்
பொதுவாகவே சிம்ம ராசிக்கார்கள் எதையும் மறைக்க தெரியாதவர்கள், தங்கள் மனதில் இருப்பதை இந்த உலகிற்கு எப்போதும் கூற வேண்டும் என்று நினைப்பார்கள். சிம்ம ராசிக்காரர்களின் தனிப்பட்ட காந்தசக்தி மற்றும் அவர்களின் ஆளுமை, வசீகரம் போன்றவை அனைவரையும் ஈர்க்கும். மிதுன ராசிக்காரர்களை போலவே இவர்களும் அதிக வெளிப்படையானவர்கள் ஆனால் இவர்கள் அதிக நேர்மையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் மிகைப்படுத்தி கூறமாட்டார்கள் உள்ளதை கூறியே அனைவரையும் ஈர்ப்பார்கள்.
MOST
READ:
கசப்பு
சுவையுடைய
இந்த
பொருட்கள்
உங்கள்
ஆயுளை
பல
வழிகளில்
அதிகரிக்கும்
தெரியுமா?
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், அந்நியர்கள் என அனைவரிடமும் பேச விரும்புவார்கள் சிலசமயம் அவர்களுடனேயே பேசிக்கொள்வார்கள். இவர்கள் மற்றவர்களுடன் பேசும் பேச்சு மற்றவர்களுடன் அதிக பிணைப்பை உருவாகும் என்று இவர்கள் அறிவார்கள். ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும்போது இவர்கள் அதனை பற்றிய அனைத்தையும் பேசுவார்கள். தான் பேசும் அனைத்து விவாதங்களிலும் நேர்மையாகவும் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாகவும் கூறுவார்கள். அவர்களை பற்றிய விஷயங்களை மற்றவர்கள் கேட்காமலே இவர்கள் கூறிவிடுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்கும் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் இவர்களின் வெளிப்படை தன்மைதான். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தை பற்றியோ அவர்களுக்கு தெரியாத விஷயத்தை பற்றியோ இவர்கள் பேசமாட்டார்கள். இவர்கள் நகைசுவையானவர்கள் அதேசமயம் நேர்மையானவர்களும் கூட. புதிய விஷயங்களை பற்றி பேசும் போது இவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள். இவர்கள் என்ன பேச போகிறார்கள் என்பதை ஒருபோதும் கணிக்க இயலாது, ஏனெனில் இவர்கள் பேசுவது அனைத்தும் இவர்களின் உண்மையான கருத்தாக இருக்கும்.
MOST
READ:
பாஞ்சாலியின்
கற்பு
மீது
பீமனுக்கு
சந்தேகம்
ஏற்பட
காரணம்
என்ன
தெரியுமா?
துலாம்
துலாம் ராசிக்கார்கள் நன்றாக கதை சொல்லக்கூடியவர்கள், ஆனால் இவர்கள் கூறும் கதையில் பல கற்பனைகள் கலந்திருக்கும். ஒரு கூட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் இருந்தால் அங்கு பொழுது போக்கிற்கு பஞ்சமே இருக்காது. இவர்கள் கூறும் கதைகள் எப்பொழுதும் சாகசங்கள் நிறைந்ததாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். தாங்கள் கூறும் கதையை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துவதில் இவர்கள் வல்லவர்கள். வார்த்தைகளை விட இவர்களின் முகபாவங்களே பல கதைகளை கூறும்.