Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கதை விட்டே அனைவரையும் கவுத்து விடுவார்களாம் தெரியுமா?
பிறரிடம் உங்கள் மனதில் படுவதை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.
அனைவருக்குமே வெளிப்படையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவரும் அப்படி இருப்பதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இது வெளிப்படையாக இருப்பது மிகவும் தேவையான ஒன்றாகும். அனைவருக்குமே அவர்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது.

பிறரிடம் உங்கள் மனதில் படுவதை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். அனைவருமே வெளிப்படையாக பேசுபவர்கள்தான் ஆனால் சிலர் அளவிற்க்கு அதிகமாக வெளிப்படையாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாக கூட இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக வெளிப்படையாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்பொழுதும் அதிகம் பழகுவதில்லை என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு ஏனெனில் அனைத்து சமூக நிகழ்வுகளிலும் இவர்கள்தான் முக்கியமானவராக இருப்பார்கள். இவர்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பதுடன் நன்றாக பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் பற்றிம் அனைத்தையும் பற்றி பேசக்கூடியவர்கள். மிதுன ராசிக்காரர்கள் தன்னை சுற்றி ஆட்கள் இருக்கும் போது அதிக உற்சாகமாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் கதைகள், ஜோக்குகள், தனிப்பட்ட விஷயங்கள் என அனைத்திற்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.

சிம்மம்
பொதுவாகவே சிம்ம ராசிக்கார்கள் எதையும் மறைக்க தெரியாதவர்கள், தங்கள் மனதில் இருப்பதை இந்த உலகிற்கு எப்போதும் கூற வேண்டும் என்று நினைப்பார்கள். சிம்ம ராசிக்காரர்களின் தனிப்பட்ட காந்தசக்தி மற்றும் அவர்களின் ஆளுமை, வசீகரம் போன்றவை அனைவரையும் ஈர்க்கும். மிதுன ராசிக்காரர்களை போலவே இவர்களும் அதிக வெளிப்படையானவர்கள் ஆனால் இவர்கள் அதிக நேர்மையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் மிகைப்படுத்தி கூறமாட்டார்கள் உள்ளதை கூறியே அனைவரையும் ஈர்ப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், அந்நியர்கள் என அனைவரிடமும் பேச விரும்புவார்கள் சிலசமயம் அவர்களுடனேயே பேசிக்கொள்வார்கள். இவர்கள் மற்றவர்களுடன் பேசும் பேச்சு மற்றவர்களுடன் அதிக பிணைப்பை உருவாகும் என்று இவர்கள் அறிவார்கள். ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும்போது இவர்கள் அதனை பற்றிய அனைத்தையும் பேசுவார்கள். தான் பேசும் அனைத்து விவாதங்களிலும் நேர்மையாகவும் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாகவும் கூறுவார்கள். அவர்களை பற்றிய விஷயங்களை மற்றவர்கள் கேட்காமலே இவர்கள் கூறிவிடுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்கும் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் இவர்களின் வெளிப்படை தன்மைதான். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தை பற்றியோ அவர்களுக்கு தெரியாத விஷயத்தை பற்றியோ இவர்கள் பேசமாட்டார்கள். இவர்கள் நகைசுவையானவர்கள் அதேசமயம் நேர்மையானவர்களும் கூட. புதிய விஷயங்களை பற்றி பேசும் போது இவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள். இவர்கள் என்ன பேச போகிறார்கள் என்பதை ஒருபோதும் கணிக்க இயலாது, ஏனெனில் இவர்கள் பேசுவது அனைத்தும் இவர்களின் உண்மையான கருத்தாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்கார்கள் நன்றாக கதை சொல்லக்கூடியவர்கள், ஆனால் இவர்கள் கூறும் கதையில் பல கற்பனைகள் கலந்திருக்கும். ஒரு கூட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் இருந்தால் அங்கு பொழுது போக்கிற்கு பஞ்சமே இருக்காது. இவர்கள் கூறும் கதைகள் எப்பொழுதும் சாகசங்கள் நிறைந்ததாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். தாங்கள் கூறும் கதையை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துவதில் இவர்கள் வல்லவர்கள். வார்த்தைகளை விட இவர்களின் முகபாவங்களே பல கதைகளை கூறும்.



Click it and Unblock the Notifications











