Just In
- 2 min ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 32 min ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 1 hr ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 2 hrs ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
Don't Miss
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
திங்கள்கிழமை அன்று விநாயகரை இப்படி வழிபடுவது உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும்...!
உங்களுக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும் கடவுளின் அருள் உடனிருப்பது உங்களுக்கு கூடுதல் பலம்தான்.
ஒவ்வொரு வியாபாரத்தின் வெற்றி என்பதும் பல்வேறு காரணங்களை சார்ந்தது. உங்கள் தொழிலில் சிலவற்றை மட்டும்தான் நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும், பலவற்றை கட்டுப்படுத்த இயலாது. ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த திறமையும், அதிர்ஷ்டமும் கண்டிப்பாக வேண்டும்.
உங்களுக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும் கடவுளின் அருள் உடனிருப்பது உங்களுக்கு கூடுதல் பலம்தான். கடவுளின் அருளை பெறுவதற்கு சிறந்த வழி அவர்களுக்கு பிடித்த சக்திவாய்ந்த மந்திரங்களையும் கூறி பூஜை செய்து வழிபடுவதுதான். இந்த பதிவில் உங்கள் வியாபாரத்தை வெற்றிகரமானதாக மாற்றும் சக்திவாய்ந்த மந்திரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஆஞ்சநேய மந்திரம்
இந்த மந்திரத்தை செவ்வாய் கிழமையில் கூறி வழிபடுவது நல்லது. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜையறையையும், ஆஞ்சநேயரின் சிலையையும் சுத்தம் செய்யவும். தட்டில் மஞ்சள், குங்குமம் மற்றும் அரிசி வைத்து ஆஞ்சநேயரை வழிபடவும்.
எப்படி கூற வேண்டும்?
நெய் விளக்கேற்றி வைத்து மனதை ஒருமுகப்படுத்தி ஆஞ்சநேயரை நினைத்து 25 நிமிடம் மந்திரத்தை கூறவும். உங்களின் தொழில் போட்டிகள் எல்லாம் குறைந்து விரைவில் உங்கள் தொழில் நல்ல முன்னேற்றத்தை அடையும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் என்னவெனில் " ஓம் எங் ஹ்ரிங் ஹனுமதே ராமதூதாய லங்காவித்வாஸ்னாய் அஞ்சனி கரம் சம்பூதா ஷகினி டாகினி டாகினி வித்வான்சான்ய கிளிக்கிளி புபுகரேன் விபீஷணாய ஹனுமத்தேவாயா ஓம் ஹ்ரிங் ஷ்ரிங் ஹாங் ஹா பாத் ஸ்வாஹா "
தொழில் வெற்றிக்கான பிள்ளையார் மந்திரம்
தடைகளை நீக்கி வளங்களை அள்ளி தருபவர் வினை தீர்க்கும் விநாயகர். விநாயகரை வழிபடுவதற்கு மிகசிறந்த நாள் திங்கள் கிழமை ஆகும். அதுமட்டுமின்றி சங்கடஹர சதுர்த்தியன்று பிள்ளையார் மந்திரங்களை கூறி வழிபடுவதும் வெற்றியையும், செல்வத்தையும் பெற்றுத்தரும்.
எவ்வாறு செய்ய வேண்டும்?
திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை தயார் பண்ணவும். சிவப்பு நிற துணி மற்றும் பிள்ளையாருக்கு பிடித்த மலர்களை வைத்து " ஓம் ஷ்ரீம் கம் சவ்பாக்ய கணபதயே வர்வார்த்த சர்வஜன்ம மெய்ன் வஷாமன்ய நமஹ " என்ற மந்திரத்தை 108 முறை கூறவும். விநாயகருக்கு தேங்காய் படைத்து பூஜையின் இறுதியில் அதில் சிறுபகுதியை பிரசாதமாக எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம்.
லட்சுமி மந்திரம்
இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை கூறி வழிபடுவது உங்களுக்கு சிறந்த பலன்களை தரும். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்துவிட்டு இரு வெள்ளித்தட்டில் கொஞ்சம் அரிசிகளை எடுத்து கொள்ளவும். அதில் லக்ஷ்மி படம் அல்லது சிலையை வைத்து அதனுடன் 9 நாணயங்களையும் வைக்கவும்.
எப்படி செய்ய வேண்டும்?
அனைத்து நாணயங்களிலும், லஷ்மி படத்திலும் மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனம் வைக்கவும். ஒரு தேங்காயில் குங்குமத்தால் ஸ்ரீ என்று அதனையும் லக்ஷ்மிக்கு முன்னால் வைக்கவும். மந்திரத்தை 108 முறை கூறி ஆரத்தி காட்டவும். நீங்கள் நினைத்து பார்க்காத உயரத்திற்கு இந்த வழிபாடு உங்களை அழைத்து செல்லும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் " ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம் கமலே கமலாலய ப்ரஸீத் ப்ரஸீத் ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ ".
பாலாஜி மந்திரம்
வெங்கடேஸ்வரா என்று அழைக்கப்படும் பாலாஜி திருமாலின் சக்தி வாய்ந்த அவதாரங்களில் ஒருவர் ஆவார். வியாழக்கிழமையில் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். அதிகாலையில் குளித்து விட்டு வெங்கடேஸ்வரை அலங்கரித்து மந்திரத்தை 108 முறை கூறவும். நீங்கள் கூற வேண்டிய மந்திரம் " வினா வெங்கடேஷம் நனதோ நனதா சதா வெங்கடேஷம் ஸ்மாரமி ஸ்மாரமி - ஹரே வெங்கடேஷ ப்ரசீத ப்ரசீத பிரியம் ப்ரயாச்சா ப்ராயாச்சா ".