Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?
மொத்தமிருக்கும் 18 புராணங்களில் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்ட பத்ம புராணம் மிகவும் முக்கியமானதாகும்.
மொத்தமிருக்கும் 18 புராணங்களில் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்ட பத்ம புராணம் மிகவும் முக்கியமானதாகும். இந்த புராணம் முழுக்க முழுக்க விஷ்ணு-லக்ஷ்மி மற்றும் சிவன்-பார்வதியை பற்றி கூறுவதாகும். பின்னாளில் இது இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும், மற்றொரு பகுதி மேற்கு பகுதிக்கும் உண்டானதாக மாற்றப்பட்டது.

பத்ம புராணத்தில் லக்ஷ்மி தேவியின் அருளை பெறுவது எப்படி என்று பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த புராணத்தில் கூறியுள்ளபடி செல்வத்தின் கடவுளாக லக்ஷ்மி பிர்கு முனிவருக்கும் அவரது மனைவி க்யாதிக்கும் மகளாக பிறந்தவர். இதில் லக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டள்ளது. லக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு என்னென்ன பண்ண வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அரசமரம்
பத்ம புராணத்தின் படி பௌர்ணமி நாளன்று காலை நேரத்தில் லக்ஷ்மி தேவி அரச மரத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது. எனவே லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் பௌர்ணமி நாளன்று அதிகாலையில் அரச மரத்தை வழிபடுவது நல்லது.

வாழை மரம்
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் வாழை மரத்திற்கு கங்கை அல்லது வேறு புனித நதியின் நீரை ஊற்றுவது உங்களுக்கு லக்ஷ்மியின் அருளை பெற்றுத்தரும். மேலும் வாழை மரத்திற்கு முன் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.

நெய் விளக்கு
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்திற்கு பால் ஊற்றி, வெல்லம், இனிப்பு நீர் மற்றும் நெய் விலகற்றி வழிபட வேண்டும். இது உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதுடன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

லக்ஷ்மி சாதனா சடங்கு
மஹலக்ஷ்மி பூஜை எப்பொழுதும் புதன் கிழமை இரவில்தான் செய்ய வேண்டும். புதன் கிழமை லக்ஷ்மி தேவிக்கான சிறப்பு நாளாகும். இந்த நாளில் குளித்து விட்டு எப்பொழுதும் சுத்தமான உடைகளை அணிய வேண்டும்.

பூஜை ஆசனம்
கிழக்கு நோக்கி ஆசனம் அல்லது துணியின் மீது அமரவும். ஒருவேளை உங்களிடம் மரப்பலகை இருந்தால் அதனை மஞ்சள் துணியால் மூடி அதன்மீது அமரவும்.

ஸ்ரீ லக்ஷ்மி எந்திரம்
ஒரு ஸ்டீல் தட்டில், குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து அதன்மீது லக்ஷ்மி எந்திரத்தை வைக்கவும். ஒருவேளை லக்ஷ்மி எந்திரம் கிடைக்கவில்லை என்றால் ஒரு பேப்பரில் லக்ஷ்மி எந்திரத்தை வரைந்து அதனை ஸ்வஸ்திக் சின்னத்தின் மீது வைக்கவும்.

சுற்றுசூழலை சுத்தம் செய்தல்
அதன்பன் நெய், பால், தேன், குங்குமம், வெள்ளை அரிசி மற்றும் மஞ்சள் நிற மலர்களை லட்சுமி எந்திரத்தின் மீது வைக்கவும். நெய் விளக்கேற்றி அதனபின் ஊதுபதிகளை ஏற்றி வைக்கவும்.

வேண்டுதல்
உங்களின் பெயரைக் கூறி எனது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும் லக்ஷ்மி என்று வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும், நல்ல வாழ்வையும் வழங்குமாறு வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை முடிந்த பிறகு பிள்ளையார் மற்றும் சிவபெருமான் மந்திரத்தைக் கூறி பூஜையை முடிக்கவும்.



Click it and Unblock the Notifications