Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்...
உங்களுடைய பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஜோதிட பரிகாரங்கள் பற்றி இந்த பகுதியில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி தான் விரிவாக இந்த கட்டு
யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம்.

அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. ஒரு கைப்பிடி அரிசியில் 5 ரூபாய் நாணயத்தைப் போட்டு அதை துணியிலோ பாத்திரத்திலோ போட்டு பீரோவில் வைத்தால் கஷ்டம் தீருமாம். அது பற்றி விளக்கமாக இந்த பகுதியில் பார்க்கலாம்.

தொழில் பெருக
சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது காலதாமதமோ ஆகிவிடுகிறது. பொதுவாக பரிகாரங்கள் வீடுகளுக்கு வுறாகவும் தொழில் செய்யும் இடத்துக்கு ஒன்றாகவும் செய்வார்கள்.

தன லாபம்
உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம்.

பரிகாரம்
சின்ன சின்ன தெய்வாம்சங்கள் நிறைந்த மாதிரியான, லட்சுமிதேவி உங்களிடம் வந்து வீட்டில் குடி கொள்ளக் கூடிய வகையிலாக பரிகாரங்களசை் செய்து வந்தீர்கள் என்றால், நீங்கள் நினைத்ததை விடவும் அதிகப்படியான செல்வத்தை, உங்களை விட்டுப் போகாமல் இருக்கும்படியாக செய்ய முடியும். ஆனால் இந்த பரிகாரத்தைப் பொறுத்தவரை வீடு, தொழில் செய்யும் இடம் இரண்டுக்குமே இந்த பரிகாரம் பொதுவான ஒன்றாகத் தான் இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?
பரிகாரம் என்றதும் பயந்து விடாதீர்கள். இதற்கென பெரிதாக நீங்கள் மெனக்கெடவே தேவையில்லை. சின்ன சின்ன எளிமையான பரிகாரங்கள் மூலமாகவே நம்முடைய வீட்டின் செல்வ நிலையைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சின்ன பரிகாரத்தை எந்த சிரமமும் இல்லாமல் எளிமையா செய்து முடியுங்கள். இதற்கு பல பேரின் துணையெல்லாம் கூட தேவையில்லை. வீட்டில் உள்ள குடும்பத் தவைனோ தலைவியோ எளிதாக தனியாகவே செய்து முடித்துவிட முடியும்.

பச்சரிசியும் காசும்
ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் முனை உடையாத (கைக்குத்தல்) பச்சரிசி அல்லது நெல்லை கொஞ்சமாக எடுத்துப் போடுங்கள். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை போடுங்கள். அதன் மேல் சிறிது அரிசியைப் போட்டுஇரண்டு ரூபாய் நாணயத்தை போடுங்கள்.
பின் மீண்டும் கொஞ்சம் அரிசி இட்டு ஐந்து ரூபாய் நாணயம், அதன்மேல் கொஞ்சம் அரிசி போட்டு பத்து ரூபாய் நாணயம் ஒன்று போட்டு அதன்பின், அரிசி பாட்டில் நிறையும் வரை அரிசியையோ நெல்லையோ போட்டு நிரப்புங்கள். பின் பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி போட்டு மூடுங்கள். அந்த மூடியில் சிறிது சிறிதாக ஆறு துளைகள் போடுங்கள்.

எங்கே வைக்க வேண்டும்?
இப்படி அரிசியும் ஒரு ரூபாய் காசுகளும் நிரம்பிய அந்த பாட்டிலையோ அல்லது பானையையோ வீட்டின் அலுவலக அறை, பூஜை அறை, வரவேற்பறையில் வைக்கலாம். தொழில் செய்கின்ற வணிக சம்பந்தப்பட்ட இடங்கள் உங்களுக்கு இருந்தால் அங்கேயும் வைக்கலாம். பிரோ பக்கத்தில் வைப்பது இன்னும் சிறப்பு. பீரோவிற்கு உள்ளே கூட இதை ஒரு ஓரமாக வைத்துவிடலாம். உள்ளே வைப்பதை விட வெளியில் வைப்பது தான் சிறந்தது. ஏனென்றால்,

கண் பார்வை
நீங்கள் வைக்கும் இடம் மட்டுமே இதற்கு முக்கியம் அல்ல. அந்த பாட்டில் தினமும் உங்களுடைய கண்களில் படும்படியாக இருப்பது மிகமிக அவசியம். இதன் மூலம் உங்களுடைய இருப்பிடத்தை தன ஆகர்ஷணம் மிக்க இடமாக மாற்ற முடியும். நம்முடைய கண் பார்வை படும்படி இருப்பது தான் இந்த பரிகாரத்தின் வெற்றியே.

எவ்வளவு நாள்
இப்படி ஒரு மாதங்கள் வரை வைத்திருக்கலாம். அதன்பின் ஒவ்வொரு மாதமும் அந்த பாட்டிலுக்குள் இருக்கும் அரிசியை பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு, மீண்டும் அதே பாட்டிலில் முன்பு குறிப்பிட்ட படியே அதே நாணயங்களைக் கொண்டு, மீண்டும் அரிசியால் நிரப்பி வையுங்கள். பிறகு பாருங்கள். லட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துவிடுவாள்.
மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது. அப்புறம் பாருங்க... லட்சுமிதேவிக்கே நீங்க கடன் கொடுக்க ஆரம்பிச்சிடுவீங்க.



Click it and Unblock the Notifications