Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
இராவணனை வீழ்த்துவதற்கு இராமருக்கு சூரிய பகவான் எப்படி உதவினார் தெரியுமா?
சூரிய பகவான் அனைத்து முக்கிய கடவுள்களின் ஒற்றை வடிவமாகவும், பிரதிநிதியாகவும் இருக்கிறார்.
அகத்திய முனிவர் எழுதிய ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இராமாயணத்தில் இராமர் இறுதி போரின் போது இராவணனுக்கு எதிராக போராடிய போது இராமரின் ஆற்றல் குறைந்த போது இதனை இயற்றியதாக கூறப்படுகிறது.

இந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் இருந்தாலும் குறிப்பிட்ட கடவுள்கள் மட்டுமே அனைவராலும் வணங்கப்படுகிறார்கள். அதற்கு காரணம் பல கடவுள்களின் மகிமையும், ஆற்றலும் நமக்கு தெரியாமல் இருப்பதுதான். அப்படி நாம் அதிகம் வழிபடாத ஆனால் அதிக ஆற்றலுடன் அருள்பாலிக்கும் கடவுள்தான் சூரிய பகவான். இந்த பதிவில் சூரிய பகவானை வழிபடுவது எப்படி உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் என்று பார்க்கலாம்.

இராமருக்கு அருள்
இராமர் விஷ்ணுவின் அவதாராமாகவே இருந்த போதிலும் மனித உருவத்தில் இருந்தபோது இராவணனுக்கு எதிரான போரில் அவர் சோர்வடைவதை பார்த்த அகத்தியர் சூர்ய பகவானின் அற்புத சக்திகளை நியாபகப்படுத்தி அவரை வழிபட அறிவுறுத்தினார். சூரியபகவானுக்கு ஆதித்யர் என்ற பெயரும் உள்ளது.

பிரபஞ்சம்
இராமருக்கு முன்பு அகத்தியர் முழு பிரபஞ்சம், உயிரினங்கள், மலைகள் மற்றும் அனைத்து பொருட்களையும் வரைந்து காண்பித்தார். பிரபஞ்சத்தில் எந்தவொரு உயிரினத்தின் உயிர்வாழ்விற்கும் சூரியனின் ஆற்றல் இன்றியமையாதது என்று அவர் ராமரிடம் கூறினார்.

இருளை நீக்கும்
இந்த ஆதித்ய ஸ்தோத்திரத்தில் சூரிய பகவான் பல வடிவங்களில் உருவகப்படுத்தப்படுகிறார். தீமைகளை அழிப்பவர், அனைத்து தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் வாழ்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குபவர் என கூறப்படுகிறார்.

அறியாமை
இந்த ஸ்தோத்திரத்தின் படி நமக்குள் இருக்கும் இருள்தான் நம்மை வஞ்சகத்திற்கும், கோபத்திற்கும் ஆளாக்குகிறது. அந்த இருளை போக்கிவிட்டால் நாம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த இருளை போக்க சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.

ஒற்றை வடிவம்
அகத்தியர் இராமரிடம் சூரிய பகவான் அனைத்து முக்கிய கடவுள்களின் ஒற்றை வடிவமாகவும், பிரதிநிதியாகவும் இருக்கிறார். வெற்றிக்காக எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று குழப்பத்தில் இருந்த இராமருக்கு அகத்தியர் சூரியனை வழிபட வேண்டும் என்று கூறினார். சூரியனை வழிபடுவது நமது வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்கும் என்று அகத்தியர் கூறுகிறார்.

தெரிந்த கடவுள்
சூரிய பகவான் அனைவரின் கண்களுக்கும் தெரிந்த கடவுளாக இருக்கிறார். அனைத்து பரிமாணங்களின் ஒருங்கிணைந்த கடவுளாக இருப்பதால் சூரிய பகவானை வழிபடுவது அனைத்து கடவுள்களையும் வணங்குவதற்கு சமமாகும்.

சூரியனிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
இன்றைய உலகில் அனைவரும் நேரமின்றி விரைந்து கொண்டிருக்கிறோம். அமைதியாக அமர்ந்து நம்மை பற்றி சிந்தித்து மூச்சு விடுவதற்கு கூட யாருக்கும் நேரமில்லை. நமக்கான முக்கியத்துவத்தை நாமே இழந்து கொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் பன்முகத்தன்மை கொண்ட சூரியனிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக ஒருங்கிணைப்பு மற்றும் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது எப்படி என்று சூரியனிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

ஒழுங்கமைப்பு
இந்த ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் கூறுவது உங்களின் உள் அமைப்பை ஒழுங்கமைப்பதோடு, உங்களுள் அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கிறது.

இராமரின் வெற்றி
அகத்தியர் கூறிய இந்த ஸ்தோத்திரத்தை கேட்ட பிறகு இராமர் புது ஆற்றலால் தூண்டப்பட்டு இராவணனுடன் போர் புரிந்தார். மேலும் சூரிய பகவான் தனது அருள் மூலம் இராமருக்கு வெற்றி கிடைக்குமென ஆசீர்வதித்தார்.

குணப்படுத்தும் பண்புகள்
மனிதர்களை பொறுத்தவரை சூரியனின் ஒளிக்கதிர்கள் பல நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக கண்கள் மற்றும் சருமத்திற்க்கு இது பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்து மதத்தில் சூரியபகவான் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார்.



Click it and Unblock the Notifications











