For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கமாட்டேங்கிதா?அதுக்கு காரணம் வீட்டுல இருக்குற இந்த பொருள்தான்

வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு சிரமமான காரியம் பணத்தை சேமிப்பதாகும். பணம் சேமிப்பது என்பதை விட கடன் பிரச்சினையும் அவர்களை துரத்தும்.

|

வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு சிரமமான காரியம் பணத்தை சேமிப்பதாகும். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் பணத்தை சேமிக்கவே விரும்புவார்கள். பணக்காரார்களே விரும்பும்போது ஏழைகள் விரும்ப மாட்டார்களா? ஆனால் அவர்களால் பணத்தை சேமிக்க முடியாது. பணம் சேமிப்பது என்பதை விட கடன் பிரச்சினையும் அவர்களை துரத்தும்.

Hardworking, Still No Money? Avoid Keeping These Things at Home

வருமானம் குறைவாக உள்ளவர்கள் பணத்தை சேமிக்க சிரமப்படுவதில் ஆச்சரியமில்லை, ஆனால் போதுமான அளவு சம்பாதிப்பவர்கள் கூட பணத்தை சேமிக்க முடியாமல் கடனாளியாவதை நம் அன்றாட வாழ்வில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு உங்கள் அலட்சியம் ஒரு காரணமாக இருந்தாலும் நீங்கள் வீட்டில் வைத்துள்ள சில பொருட்களும் காரணமாக இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் வீட்டில் வைக்கக்கூடாது பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூக்கள்

பூக்கள்

பூக்கள் பொதுவாக கடவுள்களுக்கு பிடித்தவையாகும். தினமும் காலையில் கடவுள்களுக்கு பூக்கள் வைத்து வழிபடுவது நல்லதாகும். ஆனால் அந்த மலர்களை மாலை நேரத்தில் எடுத்துவிட வேண்டும். ஏனெனில் வாடிய மலர்கள்கடவுள் அருகில் இருக்கும் போது அது உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகளை பரப்பும்.

சுத்தமின்மை

சுத்தமின்மை

வீட்டில் அதிக பொருட்களை வைத்து கொள்ளாதீர்கள். அடிக்கடி வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள். தேவையற்ற பொருட்கள் வீட்டில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

பால்

பால்

பால் தொடர்பான எந்த பொருளும் வீட்டில் திறந்த நிலையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பால் சூடாக இருந்தால் கூட பிரிட்ஜில் வைப்பதற்கு முன் மெல்லிய மூடியிட்டு அதன் பின் உள்ளே வையுங்கள்.

MOST READ:உங்களுக்கு வரும் கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஷூ வைக்குமிடம்

ஷூ வைக்குமிடம்

காலணிகள் மற்றும் சாக்ஸுகள் பூஜையறை அருகில் இல்லாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். அதேசமயம் வீட்டிற்குள் ஷூ அணிந்து செல்வதை தவிருங்கள். வீட்டிற்க்கு வெளியே காலணிகள் வைப்பதற்கென ஒரு இடத்தை ஒதுக்கி வைத்துவிடுங்கள்.

வீட்டிற்குள் வைக்கும் செடிகள்

வீட்டிற்குள் வைக்கும் செடிகள்

நீங்கள் வீட்டிற்குள் வைக்கும் செடிகள் உங்களுக்கு ஆக்சிஜனை மட்டும் வழங்குவதில்லை. அவை நேர்மறை சக்திகளை உங்கள் வீட்டிற்குள் பரவச்செய்து செல்வத்தின் வரவை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தரும் சில உட்புற செடிகளை வாங்கி உங்கள் வீட்டிற்குள் வைக்கவும்.

முள்தாவரங்கள்

முள்தாவரங்கள்

முட்களுடைய தாவரங்களை உங்கள் வீட்டிற்குள் ஒருபோதும் வைக்காதீர்கள். ஏனெனில் இவை உங்கள் வீட்டில் குழப்பத்தையும், வறுமையையும் ஏற்படுத்தும். ஒருவேளை அவசியப்பட்டால் இதனை உங்கள் வீட்டிற்கு வெளியில் மட்டும் வைத்து கொள்ளுங்கள்.

துளசி

துளசி

துளசி செடி எவ்வளவு புனிதமானது என்று நாம் நன்கு அறிவோம். இதனை தொடர்ந்து வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், செழிப்பையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் வீட்டில் தெற்கு மூலையில் துளசி இருந்தால் அது உங்கள் குடும்பத்தின் நிம்மதியை குலைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? எனவே தெற்கு மூலையில் துளசி வைப்பதையும், தெற்கில் இருக்கும் துளசி செடியை வணகுவதையும் தவிருங்கள்.

MOST READ:இந்த தேதிகளில் பிறந்தவங்கள கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்... வாழ்க்கை அழகா இருக்கும்..!

அரசமரம்

அரசமரம்

அரசமரம் அது வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும், அதன் புனித்துவத்திற்கும் மிகவும் புகழ்பெற்றது, ஆனால் அது சில இடங்களில் இருப்பது உங்கள் வாழ்க்கையில் பல தீமைகளை உண்டாக்கும். கிழக்கு மூலையில் இருக்கும் அரசமரத்தை வணங்குவது உங்கள் வாழ்க்கையில் பயத்தையும், பதட்டத்தையும் அதிகரிக்கும்.

வாஸ்து தோஷம்

வாஸ்து தோஷம்

உங்கள் இல்லத்தில் இருக்கும் வாஸ்து தோஷத்தால் கூட உங்களால் பணத்தை சேமிக்க இயலாமல் போகலாம். எனவே வீட்டிற்கு குடிபோகும் முன் கணபதி பூஜை செய்வது நல்லது. மற்றொரு எளிய வழி கொஞ்சம் சிவப்பு சந்தனம், முந்திரி மற்றும் ஒரு சிறிய கல்லை எடுத்துக்கொண்டு அதனை ஒரு சிவப்பு துணியில் கட்டிக்கொள்ளவும். இதனை வீட்டின் வடக்கு மூலையில் வைத்துவிட்டு செவ்வாய் கிழமையில் வழிபட்டால் உங்கள் இல்லத்தில் இருக்கும் எதிற்மறை சக்திகள் அனைத்தும் விலகிவிடும்.

பழைய பொருட்கள்

பழைய பொருட்கள்

புது வீடு கட்டும்போது அதற்கு நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும் புதியதாக இருக்க வேண்டும். செலவை குறைக்க பழைய வீடுகளில் இருக்கும் கதவுகள் ஜன்னல்கள் போன்றவற்றை உபயோகிப்பது உங்களுக்கு வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் உபயோகிக்கும் பூட்டு புதியதாக இருக்க வேண்டும்.

முன்கதவு

முன்கதவு

வீட்டிற்குள் நுழையும்போது எப்பொழுதும் உங்கள் பத்தாம் கதவில் இடிக்காத படி பார்த்து கொள்ளுங்கள். அதேபோல முன்கதவில் ஸ்வஸ்திக் சின்னத்தை தொங்க விடுவது உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை அழைத்துவரும்.

MOST READ:பணக்காரன் ஆவதற்காக தன்னுடைய விந்துப்பையை விற்கும் இளைஞன்... இப்படியும் நாட்ல நடக்குமா?

விநாயகர்

விநாயகர்

அனைத்து வீடுகளிலும் விநாயகரின் சிலை இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் வினை தீர்க்கும் விநாயகன் உங்களுக்கு வரும் பிரச்சினைகளை பார்த்துக்கொள்வார். விநாயகரை அடிக்கடி சுத்தப்படுத்தி தினமும் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுங்கள். மீதியை அவர் பார்த்து கொள்வார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: vastu money வாஸ்து
English summary

Hardworking, Still No Money? Avoid Keeping These Things at Home

Are you hardworking, yet have not been able to save some money? Then avoid keeping these things at home.
Desktop Bottom Promotion