Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
காதுக்குள் இருந்து உயிருடன் பல்லியை வெளியே எடுத்த டாக்டர்... அப்புறம் என்ன ஆச்சுனு தெரியுமா?
காதுக்குள் உயிருடன் பல்லி இருந்ததை கண்டுபிடித்து டாக்டர் வெளியேற்றிய விசித்திர கதை தான் இது. என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க. புரியும்.
சில நேரங்களில் கண்களில் தூசி விழுவதும், காதுகளில் சிறிய பூச்சி அல்லது எறும்பு அல்லது வண்டு போன்றவை நுழைவதும் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கண்ணுக்குள் தூசி விழுந்தால் அதனை உடனடியாக நீர் விட்டு கழுவி எடுத்து விடலாம்.

காதுக்குள் பூச்சி நுழைந்தால், கேட்கவே கொஞ்சம் பயமாக உள்ளதா? இன்னும் கொஞ்சம் கேளுங்கள். அந்தப் பூச்சி ஒரு பல்லியாக இருந்தால்,? அய்யய்யோ.. அலறி ஓட்டம் பிடிக்கத் தோன்றுகிறதா? இந்த முழு பதிவையும் படித்து உங்கள் உணர்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மருத்துவர்
தாய்லாந்தில் ஒரு மருத்துவர் ஒரு மருத்துவமனையில் தன்னுடைய முதல் நாள் வேலை அனுபவத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அந்த மருத்துவர் பெயர் வரண்யா. தன்னுடைய முதல் நாள் பணியில் இப்படி ஒரு அச்சுறுத்தும் சம்பவம் நிகழும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

காது வலி
தற்போது அவர் பதிவிட்ட பேஸ்புக் பதிவை நீக்கி இருந்தாலும், அந்தப் பதிவில் அவர் தன்னைக் காண வந்த நோயாளியுடனான தன்னுடைய அனுபவம் குறித்து பதிவிட்டிருந்தார். ஒரு நோயாளி தீவிர காது வலியுடன் தன் மருத்துவமனைக்கு வந்ததாக அவர் கூறியிருந்தார்.

உயிருடன் பல்லி
வரண்யா ஒடோஸ்கோப் பயன்படுத்தி நோயாளியின் காதை பரிசோதனை செய்தார். அப்போது அவருடைய காதுக்குள் எதோ ஒன்று தவழ்ந்துக் கொண்டிருப்பதை வரண்யாவால் காண முடிந்தது. கூர்ந்து பரிசோதிக்கும்போது அது ஒரு பல்லி என்பதை அவர் கண்டறிந்தார். அதுவும் அந்தப் பல்லி உயிருடன் இருந்தது.
காதின் சிறிய ஓட்டை வழியாக இவ்வளவு பெரிய பல்லி எப்படி நுழைய முடியும் என்று அவருக்கு குழப்பமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

வெளியே எடுத்தார்
காதுக்குள் அன்டிபயோடிக் மருந்து விட்டு பல்லியை வெளியில் எடுத்து விடலாம் என்று தொடக்கத்தில் மருத்துவர் முயற்சித்திருக்கிறார். எனவே மருந்தை காதுக்குள் விட்டு, தலையை சாய்த்துக் கொள்ளும்படி நோயாளியிடம் கூறினார். ஆனால் பல்லியை வெளியில் எடுக்க முடியவில்லை. பின்னர், நர்ஸின் துணைக் கொண்டு, ஒரு ட்வீசரை காதுக்குள் விட்டு மருத்துவரே பல்லியை வெளியில் எடுத்து விட்டார்.

காத்திருந்த அதிர்ச்சி
அதிர்ச்சி ஊட்டும் செய்தி என்னவென்றால் இவ்வளவு முயற்சிக்கு பிறகு வெளியில் எடுக்கப்பட்ட பல்லி இன்னும் உயிருடன் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த பல்லி காதுக்குள் உயிருடன் இருந்தது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாகும்.

கொஞ்சம் ஆறுதல்
பல்லி வெளியில் வந்த பிறகு, அந்த நோயாளியை ஒரு ENT நிபுணரிடம் அனுப்பி முற்றிலும் பரிசோதித்து பல்லியின் மற்ற பாகங்களான வால் போன்ற பகுதி இன்னும் காதுக்குள் இருக்கிறதா என்று முற்றிலும் பரிசோதனை செய்து உறுதி செய்து கொண்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நிகழவில்லை.
ஆனால், இந்த நிகழ்வை பற்றிய தனது பதிவை பேஸ்புக்கில் இருந்து ஏன் நீக்கினார் மருத்துவர் என்பது விளங்கவில்லை. அந்த நோயாளிக்கு வலி தீர்ந்து வேறு ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும்.



Click it and Unblock the Notifications











