Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
காதுக்குள் இருந்து உயிருடன் பல்லியை வெளியே எடுத்த டாக்டர்... அப்புறம் என்ன ஆச்சுனு தெரியுமா?
காதுக்குள் உயிருடன் பல்லி இருந்ததை கண்டுபிடித்து டாக்டர் வெளியேற்றிய விசித்திர கதை தான் இது. என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க. புரியும்.
சில நேரங்களில் கண்களில் தூசி விழுவதும், காதுகளில் சிறிய பூச்சி அல்லது எறும்பு அல்லது வண்டு போன்றவை நுழைவதும் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கண்ணுக்குள் தூசி விழுந்தால் அதனை உடனடியாக நீர் விட்டு கழுவி எடுத்து விடலாம்.

காதுக்குள் பூச்சி நுழைந்தால், கேட்கவே கொஞ்சம் பயமாக உள்ளதா? இன்னும் கொஞ்சம் கேளுங்கள். அந்தப் பூச்சி ஒரு பல்லியாக இருந்தால்,? அய்யய்யோ.. அலறி ஓட்டம் பிடிக்கத் தோன்றுகிறதா? இந்த முழு பதிவையும் படித்து உங்கள் உணர்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மருத்துவர்
தாய்லாந்தில் ஒரு மருத்துவர் ஒரு மருத்துவமனையில் தன்னுடைய முதல் நாள் வேலை அனுபவத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அந்த மருத்துவர் பெயர் வரண்யா. தன்னுடைய முதல் நாள் பணியில் இப்படி ஒரு அச்சுறுத்தும் சம்பவம் நிகழும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

காது வலி
தற்போது அவர் பதிவிட்ட பேஸ்புக் பதிவை நீக்கி இருந்தாலும், அந்தப் பதிவில் அவர் தன்னைக் காண வந்த நோயாளியுடனான தன்னுடைய அனுபவம் குறித்து பதிவிட்டிருந்தார். ஒரு நோயாளி தீவிர காது வலியுடன் தன் மருத்துவமனைக்கு வந்ததாக அவர் கூறியிருந்தார்.

உயிருடன் பல்லி
வரண்யா ஒடோஸ்கோப் பயன்படுத்தி நோயாளியின் காதை பரிசோதனை செய்தார். அப்போது அவருடைய காதுக்குள் எதோ ஒன்று தவழ்ந்துக் கொண்டிருப்பதை வரண்யாவால் காண முடிந்தது. கூர்ந்து பரிசோதிக்கும்போது அது ஒரு பல்லி என்பதை அவர் கண்டறிந்தார். அதுவும் அந்தப் பல்லி உயிருடன் இருந்தது.
காதின் சிறிய ஓட்டை வழியாக இவ்வளவு பெரிய பல்லி எப்படி நுழைய முடியும் என்று அவருக்கு குழப்பமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

வெளியே எடுத்தார்
காதுக்குள் அன்டிபயோடிக் மருந்து விட்டு பல்லியை வெளியில் எடுத்து விடலாம் என்று தொடக்கத்தில் மருத்துவர் முயற்சித்திருக்கிறார். எனவே மருந்தை காதுக்குள் விட்டு, தலையை சாய்த்துக் கொள்ளும்படி நோயாளியிடம் கூறினார். ஆனால் பல்லியை வெளியில் எடுக்க முடியவில்லை. பின்னர், நர்ஸின் துணைக் கொண்டு, ஒரு ட்வீசரை காதுக்குள் விட்டு மருத்துவரே பல்லியை வெளியில் எடுத்து விட்டார்.

காத்திருந்த அதிர்ச்சி
அதிர்ச்சி ஊட்டும் செய்தி என்னவென்றால் இவ்வளவு முயற்சிக்கு பிறகு வெளியில் எடுக்கப்பட்ட பல்லி இன்னும் உயிருடன் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த பல்லி காதுக்குள் உயிருடன் இருந்தது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாகும்.

கொஞ்சம் ஆறுதல்
பல்லி வெளியில் வந்த பிறகு, அந்த நோயாளியை ஒரு ENT நிபுணரிடம் அனுப்பி முற்றிலும் பரிசோதித்து பல்லியின் மற்ற பாகங்களான வால் போன்ற பகுதி இன்னும் காதுக்குள் இருக்கிறதா என்று முற்றிலும் பரிசோதனை செய்து உறுதி செய்து கொண்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நிகழவில்லை.
ஆனால், இந்த நிகழ்வை பற்றிய தனது பதிவை பேஸ்புக்கில் இருந்து ஏன் நீக்கினார் மருத்துவர் என்பது விளங்கவில்லை. அந்த நோயாளிக்கு வலி தீர்ந்து வேறு ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும்.



Click it and Unblock the Notifications