Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஓனர் திட்டினதால கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியபோன பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?
ஓனர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியே போன பூனைக்குட்டியின் கதையைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய அழகான கதை தான் இது.
இந்தோனேஷியாவை சேர்ந்த ஹர்யந்தோ பேர்விர்ரா ரமாதானி என்பவர் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பதிவை 6,600 க்கும் மேலான எண்ணிக்கையிலான பயனர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். வைரலான அந்தப் பதிவில் அவர் எப்படி எழுதியிருந்தார் தெரியுமா?

அந்த வீடியோ பதிவுகளும் புகைப்படங்களும் பயங்கர வைரலாகிவிட்டது. அதைப் பார்ப்பவர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு அதை தங்களுடைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஓனரின் பகிர்வு
அவரது வீட்டில் வளர்க்கும் செல்ல பூனை ஒன்றின் குறும்புத்தனத்தை பற்றி ஹர்யந்தோ தமது Kami Pecinta Kucing என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

நடந்தது என்ன?
இன்று காலை, எனது படுக்கையில் பூனை என் இயர்போன்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடித்து விளையாடியபோது, ஏதேச்சையாக இயர்போன் துண்டிக்கப்பட்டு இரு துண்டுகளாகி விட்டது. நான் அதைப் பார்த்ததும், பூனையை திட்டினேன்.
நான் திட்டியதும் பூனை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது. ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த அது, எனக்கு ஒரு வெகுமதியை கொண்டு வந்தது.

வச்சுக்கோ... மன்னிச்சுக்கோ
இயர்போனை கடித்ததற்காக வருத்தம் தெரிவிக்கும் பாவனையோடு இருந்த அந்தக் குட்டிப்பூனை சிறிய பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து ஹர்யந்தோவின் முன்பு போட்டுள்ள விவரத்தை பதிவில் படித்த நெட்டிசன்கள், மன்னிப்பு கேட்டு வெகுமதியை பூனை கொண்டு வந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணிகள்
செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்புதான். அவற்றின் சேட்டைகள் பல நேரங்களில் நம்மை சிரிப்பில் ஆழ்த்திவிடும். உண்மையிலேயே வீட்டி்ல வளர்க்கும் செல்லப் பிராணிகள் மனிதர்களை விடவும் அதிகமாக உணர்வுப்பூர்வமாக நம்முடன் வாழ்கிறார்கள்.



Click it and Unblock the Notifications