Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ஓனர் திட்டினதால கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியபோன பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?
ஓனர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியே போன பூனைக்குட்டியின் கதையைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய அழகான கதை தான் இது.
இந்தோனேஷியாவை சேர்ந்த ஹர்யந்தோ பேர்விர்ரா ரமாதானி என்பவர் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பதிவை 6,600 க்கும் மேலான எண்ணிக்கையிலான பயனர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். வைரலான அந்தப் பதிவில் அவர் எப்படி எழுதியிருந்தார் தெரியுமா?

அந்த வீடியோ பதிவுகளும் புகைப்படங்களும் பயங்கர வைரலாகிவிட்டது. அதைப் பார்ப்பவர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு அதை தங்களுடைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஓனரின் பகிர்வு
அவரது வீட்டில் வளர்க்கும் செல்ல பூனை ஒன்றின் குறும்புத்தனத்தை பற்றி ஹர்யந்தோ தமது Kami Pecinta Kucing என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

நடந்தது என்ன?
இன்று காலை, எனது படுக்கையில் பூனை என் இயர்போன்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடித்து விளையாடியபோது, ஏதேச்சையாக இயர்போன் துண்டிக்கப்பட்டு இரு துண்டுகளாகி விட்டது. நான் அதைப் பார்த்ததும், பூனையை திட்டினேன்.
நான் திட்டியதும் பூனை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது. ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த அது, எனக்கு ஒரு வெகுமதியை கொண்டு வந்தது.

வச்சுக்கோ... மன்னிச்சுக்கோ
இயர்போனை கடித்ததற்காக வருத்தம் தெரிவிக்கும் பாவனையோடு இருந்த அந்தக் குட்டிப்பூனை சிறிய பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து ஹர்யந்தோவின் முன்பு போட்டுள்ள விவரத்தை பதிவில் படித்த நெட்டிசன்கள், மன்னிப்பு கேட்டு வெகுமதியை பூனை கொண்டு வந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணிகள்
செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்புதான். அவற்றின் சேட்டைகள் பல நேரங்களில் நம்மை சிரிப்பில் ஆழ்த்திவிடும். உண்மையிலேயே வீட்டி்ல வளர்க்கும் செல்லப் பிராணிகள் மனிதர்களை விடவும் அதிகமாக உணர்வுப்பூர்வமாக நம்முடன் வாழ்கிறார்கள்.



Click it and Unblock the Notifications