Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஓனர் திட்டினதால கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியபோன பூனை... என்ன கொண்டு வந்துச்சு தெரியுமா?
ஓனர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியே போன பூனைக்குட்டியின் கதையைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய அழகான கதை தான் இது.
இந்தோனேஷியாவை சேர்ந்த ஹர்யந்தோ பேர்விர்ரா ரமாதானி என்பவர் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பதிவை 6,600 க்கும் மேலான எண்ணிக்கையிலான பயனர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். வைரலான அந்தப் பதிவில் அவர் எப்படி எழுதியிருந்தார் தெரியுமா?

அந்த வீடியோ பதிவுகளும் புகைப்படங்களும் பயங்கர வைரலாகிவிட்டது. அதைப் பார்ப்பவர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு அதை தங்களுடைய பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஓனரின் பகிர்வு
அவரது வீட்டில் வளர்க்கும் செல்ல பூனை ஒன்றின் குறும்புத்தனத்தை பற்றி ஹர்யந்தோ தமது Kami Pecinta Kucing என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

நடந்தது என்ன?
இன்று காலை, எனது படுக்கையில் பூனை என் இயர்போன்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடித்து விளையாடியபோது, ஏதேச்சையாக இயர்போன் துண்டிக்கப்பட்டு இரு துண்டுகளாகி விட்டது. நான் அதைப் பார்த்ததும், பூனையை திட்டினேன்.
நான் திட்டியதும் பூனை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது. ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த அது, எனக்கு ஒரு வெகுமதியை கொண்டு வந்தது.

வச்சுக்கோ... மன்னிச்சுக்கோ
இயர்போனை கடித்ததற்காக வருத்தம் தெரிவிக்கும் பாவனையோடு இருந்த அந்தக் குட்டிப்பூனை சிறிய பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து ஹர்யந்தோவின் முன்பு போட்டுள்ள விவரத்தை பதிவில் படித்த நெட்டிசன்கள், மன்னிப்பு கேட்டு வெகுமதியை பூனை கொண்டு வந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணிகள்
செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகப்பெரிய பொறுப்புதான். அவற்றின் சேட்டைகள் பல நேரங்களில் நம்மை சிரிப்பில் ஆழ்த்திவிடும். உண்மையிலேயே வீட்டி்ல வளர்க்கும் செல்லப் பிராணிகள் மனிதர்களை விடவும் அதிகமாக உணர்வுப்பூர்வமாக நம்முடன் வாழ்கிறார்கள்.



Click it and Unblock the Notifications