Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
உடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பறவைகளுக்கு உணவாக்கும் புத்த மதத்தினர் காரணம் என்ன தெரியுமா?
பண்டைய காலத்தில் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் கூட வெவ்வேறு முறைகள் இருந்தது.
ஆன்மாவானது உடலை விட்டு பிரியும் நிகழ்வுதான் மரணம் என்று அழைக்கப்படுகிறது. இறந்தவுடன் உடலுக்கு செய்யப்படும் இறுதி மரியாதைகளும், சடங்குகளும் அவர்கள் மறுவுலகைள மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதாகும். இறப்பிற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

இன்று உலகம் முழுவதும் பிணங்களை தகனம் செய்ய ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு முறை உள்ளது. ஆனால் பண்டைய காலத்தில் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் கூட வெவ்வேறு முறைகள் இருந்தது. அதில் சில முறைகள் நம்மை அதிர்ச்சியடைய வைப்பவையாகவும் இருந்தன. இந்த பதிவில் பண்டைய காலகட்டத்தில் பிணங்களை தகனம் செய்ய பின்பற்றிய வித்தியாசமான வழிமுறைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

மம்மி
இந்த முறை உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த முறை தகனத்தில் உயர்குடி வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு என்று தனியிடம் ஒதுக்கப்படும். பதப்படுத்துவதை தொடங்குவதற்கு முன் அவர்கள் உடலில் இருக்கும் அனைத்து பாகங்களும் எடுக்கப்பட்டுவிடும் மூளை உட்பட. அதன்பின் உலர்ந்த பொருட்களால் உடல் நிரப்பப்படும் பின்னர் கயிறு கொண்டு சுற்றப்படும். ஐந்தாம் முறையில் அடக்கம் செய்வது அவர்களின் ஆன்மாவை மறுவுலக பயணத்திற்கு பாதுகாக்கும் என்று நம்பினார்கள். இதுவரை கண்டுபிடிக்க பட்டத்திலேயே மிகவும் பழமையான மம்மி என்றால் அது 6000 BC தான்.

கிரயோனிக்ஸ்
கிரயோனிக்ஸ் என்பது மிகவும் குறைந்த வெப்பநிலையில் மனிதர்களையும், விலங்குகளையும் பதப்படுத்தும் ஒரு முறையாகும். இதை இப்போதிருக்கும் மருந்துகளால் கூட சாதிக்க முடியாது. இவ்வாறு பதப்படுத்த காரணம் எதிர்காலத்தில் மீண்டும் மறுபிறப்பு எடுக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில்தான்.

பிளாஸ்டினேஷன்
அழிவில்லா வாழ்க்கை மீதிருந்த நம்பிக்கையால் இந்த முறையில் உடலும், உடல் உறுப்புகளும் பதப்படுத்தப்பட்து வந்தது. உடலில் இருக்கும் தண்ணீரும், கொழுப்பும் சில பிளாஸ்டிக் பொருட்கள், வாசனையில்லாத, கெட்டுப்போகாத நெகிழ்வான பொருட்கள் கொண்டு மாற்றியமைக்கப்படும்.

கப்பல் தகனம்
மரணத்திற்கு பிறகு அதிக செல்வம் உள்ளவர்கள் கப்பலில் வைக்கப்பட்டு உணவு, நகை, ஆயுதம் சிலசமயம் வேலைக்கார்கள், செல்லப்பிராணிகளுடன் சேர்த்து கரையில் வைத்து தீயிட்டு தண்ணீருக்குள் அனுப்பி விடுவார்கள். இந்த பழக்கம் பண்டைய கால இந்தியாவிலும் இருந்தது.

மர தகனம்
ஆஸ்திரேலியா, பிரிட்டிஷ் கொலம்பியா, தென்மேற்கு அமெரிக்கா மற்றும் சைபீரியா போன்ற நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. உடலை இறுக்கமாக துணியால் சுற்றி மரத்தில் சிதைவடையும்படி தொங்க விடுவார்கள்.

டவர் ஆப் சைலன்ஸ
ஜெரோஸ்ட்ரியன்ஸ் மக்கள் இறந்தவர்களின் உடல் தரை, மக்கள் என எதையும் தொடக்கூடாது என்று கூறுவார்கள், நெருப்பை கூட தீண்டக்கூடாது என்று நினைத்தார்கள். அதனால்தான் அவர்கள் டவர் ஆப் சைலன்ஸ என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். பொதுவாக மலைப்பகுதிகளில் கோபுரம் போன்ற அமைப்பில் விலங்குகள் வரக்கூடிய இடத்தில் இதஅமைத்துவிடுவார்கள். எலும்புகள் காய்ந்து போனவுடன் அதனை எடுத்து அப்புறப்படுத்தி விடுவார்கள்.

நரமாமிசம்
சிலகலாச்சாரங்களில் இறந்தவர்களை கௌரவப்படுத்தும் சிறந்த வழியாக இருப்பது அவர்களை உண்பதுதான். இதனை நரமாமிசம் உண்பது என்று கூறுவார்கள். இந்த மாதிரி உண்பது இறந்தவர்களுக்கும், உயிரோடு இருபவர்களுக்கும் இருக்கும் உறவை ஒன்றிணைக்கும் என்று நம்பப்பட்டது. மரணம் மற்றும் அதன் துன்பகரமான பின்விளைவுகளுடன் தொடர்புடைய வெறுப்பு மற்றும் அச்சத்தை வெளிப்படுத்த இது ஒரு முரட்டுத்தனமான வழியாகும்.

வான் தகனம்
ஒரு இறந்த உடலை காப்பாற்றவோ அல்லது நினைவுகூறவோ பௌத்தர்களுக்கு விருப்பமில்லை, அவர்களை பொறுத்தவரை ஒரு காலிபாத்திரம் ஆகும். வான் தகனம் என்பது உடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி அதனை பறவைகளுக்கு கொடுத்து விடுவார்கள் மிஞ்சுவதை மிருகங்களுக்கு கொடுத்து விடுவார்கள். திபெத் புத்த மதத்தினர் வான் தகன முறையை பின்பற்றினார்கள், 1000 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட இதனை பின்பற்றினார்கள்.

விரலை நீக்கும் சடங்கு
ஒருவேளை பிடித்தவர்களின் இறப்பானது அதிர்ச்சிகரமானதாக இருந்தால் டானி மக்கள் இறந்தவர்களின் விரலை எடுத்து வைத்துக்கொள்வார்கள். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இந்த சடங்கு மிகவும் கொடூரமனதாக இருக்கும். இந்த சடங்கானது ஆவிகளை விரட்டவும், இறந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் உதவுகிறது.

புதைப்பது
இது சுற்றுசூழலுக்கு மிகவும் ஏற்ற பிணங்களை அப்புறப்படுத்தும் முறையாகும். இந்த செயல்முறையில் மனித உடல் சிதைந்து மண்ணிற்கு சிறந்த உரமாக மாறுகிறது, இதனை அகுவாமேஷன் என்றும் கூறுவார்கள்.



Click it and Unblock the Notifications











