Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
இந்த எளிய பொருட்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் தெரியுமா?
சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கெனவே சரஸ்வதி பூஜை நமது மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆதிசக்தியின் ஒரு பரிமாணமான சரஸ்வதியின் அருள் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும்.
இந்து மதத்தின் முக்கியமான பெண் தெய்வங்களில் ஒருவர் சரஸ்வதி ஆவார். ஞானத்தின் கடவுளாக வணங்கப்படும் சரஸ்வதிதான் அனைவர்க்கும் நல்ல படிப்பை கொடுப்பவர் என்று கூறப்படுகிறது. பிரம்மாவின் மனைவியான இவர் அவரின் ஆற்றலின் பெண் பிரதிபலிப்பு என்று கூட கூறலாம்.

சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கெனவே சரஸ்வதி பூஜை நமது மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆதிசக்தியின் ஒரு பரிமாணமான சரஸ்வதியின் அருள் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த பதிவில் சரஸ்வதி தேவிக்கு மிகவும் பிடித்தவழிபாட்டு பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

மஞ்சள் நிற மலர்கள்
சரஸ்வதி தேவிக்கு தன்னை மஞ்சள் நிற மலர்கள் கொண்டு அலங்கரித்து கொள்ள மிகவும் பிடிக்கும். இவை வசந்தகாலங்களில் அதிகமாக கிடைக்கும். உங்களுக்கு சரஸ்வதி தேவியின் அருள் வேண்டுமென்றால் நீங்கள் அவரின் சிலைக்கு மஞ்சள் நிற மலர்களை வைத்து வழிபட வேண்டும்.

பூந்தி
சரஸ்வதி தேவிக்கு மிகவும் பிடித்த நைவேத்தியம் பூந்தி ஆகும். பூந்தியை வைத்து சரஸ்வதி தேவியை வழிபட்டு விட்டு பின்னர் அதனை அனைவர்க்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மஞ்சள் நிறம் குருவுடன் தொடர்புடையது. இது அறிவின் நிறமாகும். சரஸ்வதிக்கு பூந்தி வைத்து வழிபடுவது உங்கள் ஜாதகத்தில் குருவின் பார்வையை அதிகரிக்கும்.

வெள்ளை மற்றும் மஞ்சள் துணி
சரஸ்வதி தேவி தூய்மையைக் குறிக்கும் வெள்ளை ஆடைகளை தன்னை அலங்கரிக்கத் தேர்வு செய்து கொள்கிறார். பொதுவாக சரஸ்வதியை வழிபடும் போது அவரின் சிலையை வெள்ளைத்துணி கொண்டு சுற்றிவையுங்கள். ஆனால் பசந்த பஞ்சமி அன்று சரஸ்வதிக்கு மஞ்சள் நிற துணி வைத்து வழிபடுவது சிறந்ததாகும். மஞ்சள் நிற துணி கிடைக்கவில்லை எனில் வெள்ளை நிற துணியை உபயோகிக்கலாம் ஆனால் மஞ்சள் நிறம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும்.

புத்தகம் மற்றும் பேனா
சரஸ்வதி பூஜையின் போது புத்தகம், பேனா என படிப்புடன் தொடர்புடைய எதையாவது வைத்து சரஸ்வதி டீ தேவியை வழிபடலாம். பூஜை முடிந்த பிறகு இதனை தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுத்துவிடவும். இவ்வாறு வழிபடுவது உங்கள் ஜாதகத்தில் புதனின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். இது உங்களுக்கு நல்ல படிப்பையும், நினைவாற்றலையும் வழங்கும்.

சந்தனம்
சரஸ்வதி பூஜையின் போது சந்தனம் அல்லது குங்குமப்பூவை வைத்து சரஸ்வதியை வழிபடவும். அதன்பின்னர் அதனை உங்கள் குடுபத்தினர் நெற்றியில் திலகமாக வைக்கவும். வேதஜோதிடத்தின் படி சந்தனமும், குங்குமப்பூவும் பிரஜாபதியுடன் தொடர்புடையவை. இதனை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவது உங்களுக்கு பல ஆதாயங்களை வழங்கும்.



Click it and Unblock the Notifications