Just In
- 59 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் வயசு 28 தான்; ஆனா 70 பொண்ணுங்கள அனுபவிச்சிருக்கேன்... இப்ப சொந்த வாயால சூன்யம் வெச்சுக்கிட்டேன்
திருடப் போன இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி 70 பெண்களை கற்பழித்த ஒரு திருடனின் கதைதான் இது. படித்துப் பாருங்கள். நாட்டில் எவ்வளவு பேர் ஏமாற்றப்படுகிறார்கள் என்று.
தமிழ்நாட்டில் தலைநகரமான சிங்காரச் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவன் தான் அந்த விசித்திர கொள்ளைக்காரன். அவ்வப்போது தான் போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக தான் வசிக்கும் இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பான். ஜகஜால கில்லாடி என்று கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் உண்மையிலேயே இவன் ஜெகஜால கில்லாடி தான். இவன் செய்த நூதன காரியம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். திருடப் போன இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி 70 பெண்களை கற்பழித்த ஒரு திருடனின் கதைதான் இது. படித்துப் பாருங்கள். நாட்டில் எவ்வளவு பேர் ஏமாற்றப்படுகிறார்கள், பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்று.
திருடப்போன இடத்தில்
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கற்பழித்து, வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகையைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறான் ஒரு திருடன். சென்னையை ஒட்டிய மற்றொரு மாவட்டத்தைச் சேர்ந்த இவன் கிட்டதட்ட சென்னை உள்பட இரண்டு மாவட்டங்களிலும் தன்னுடைய கைவரிசையைக் காட்டியிருக்கிறான்.
ஜகஜால வித்தை
இரவு நேரங்களில் உள்பக்கம் பூட்டியிருக்கும் பெரிய வீடுகளைக் குறிவைத்து, பூட்டை உடைத்து நகை, பணத்தைக் கொள்ளையடிக்கும் தொடர் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருந்தன. இதனால் அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் காவல்துறையிலும் கூட புகார் கொடுத்திருக்கிறார்கள். போலீசின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய அந்த திருட்டுப் பயலை போலீஸ் ஒருவழியாகக் கண்டுபிடித்து விட்டது. அவனை கைது செய்து விசாரணை செய்த போது, அவன் திருடன் மட்டுமல்ல, வேறு விஷயத்திலும் இவன் கில்லாடி என்று. அவனைப் பற்றி அவனே சொல்வதைக் கேளுங்கள்.
எப்படி மாட்டினான்?
திருடுவதற்காக டூவீலரில் சென்று சில ஏரியாக்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது திடீரென டூவீலரை படு ஸ்பீடாக ஓட்டிச் சென்றேன். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸைப் பார்த்ததும் திருட்டு முழி முழித்தேன்.இவன் எதற்காக சம்பந்தமே இல்லாமல் முழிக்கிறான். நம்மைப் பார்த்ததும் வண்டியை வேகமாக ஓட்டுகிறான் என்று சந்தேகப்பட்டு என் பின்னாலேயே ஜீப்பில் விரட்டிக் கொண்டு வந்தார். ஒரு தெருமுனையில் வளைகிற குறுக்குச் சந்தில் வைத்து என்னை மடக்கிப் பிடிச்சுட்டாங்க. என்னடா எதுக்கு எங்கள பார்த்ததும் ஓடுற என்று கேட்டு அடித்தார்கள். மரண அடி விழுந்தது. என்னோட கணுக்காலுக்கு மேல இருக்கிற சதை கண்ணிப்போயிடுச்சு. அதுக்கு மேல என்னால வலி தாங்க முடியல. உண்மை எல்லாத்தையும் உளற ஆரம்பிச்சுட்டேன்.
MOST READ: 10 வருஷமா பொம்பளங்க ஓட்ற ஸ்கூட்டி மட்டும் திருடிய விநோத திருடன்... ஏன்னு தெரியுமா?
70 பெண்கள்
ராத்திரியில திருடலாம்னு சில சமயம் பூட்டியிருக்கிற வீட்டை உடைக்கறதும் உண்டு. சில முக்கியமான பிசினஸ் மேன்கள் இருக்கிற தெருக்களை நோட்டம் விட்றது. அவங்க வெளியூருக்கு போற நேரம் பார்த்து, ராத்திரியில வீட்டுக்குள்ள போயி, கத்திய காட்டி மிரட்டி காசு பணம் மட்டுமில்ல, என்னோட உடம்பு ஆசையையும் தீர்த்துகிட்டு வந்திருக்கிறேன். இதுவரைக்கும் கொறஞ்சது ஒரு 70 பொண்ணுங்களையாவது கற்பழிச்சிருப்பேன் என்று உண்மையை ஒத்துக் கொண்டான்.
கத்தி முனை மிரட்டல்
சத்தம் போட்டாலோ நான் வெளியே போவதற்குள் கத்தி, கூச்சல் போடுவது காட்டிக் கொடுக்க முயற்சிப்பது என்று ஏதாவது செய்தால் கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று சொல்லி மிரட்டி அடி பணிய வைத்து விடுவேன். பின்பு நன்றாக அனுபவித்து விட்டு வருவேன். ஒரு சில வீடுகளில் இருக்கிற ஆண்டிகளின் மீதான ஆசையால் அடுத்த முறை அங்கு போகலாம் என்று யோசிப்பேன். ஆனால் அப்படி போனால் யார் கண்ணிலாவது பட்டு மாட்டிக் கொள்வோம். நம்ம தொழிலுக்கும் நம்மளே ஆப்பு வெச்ச மாதிரி ஆயிடும்னு திரும்ப ஒரே வீட்டுக்குப் போறதில்ல என்று சொல்கிறான் அந்த திருட்டு காமப்பிசாசு.
MOST READ: பாலில் தண்ணிய தவிர வேற என்ன கலப்படம் இருக்குனு எப்படி வீட்லயே கண்டுபிடிக்கலாம்?
சாஃப்ட்வேர் ஊழியர்
இதெல்லாம் விட இந்த கதையில ஒரு டுவிஸ்ட் என்ன தெரியுமா? இவன் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த ஆறு மாசமா தமிழ்நாட்டுலயே இல்ல. பெங்களூருல சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கறான். லீவுக்காக வந்த போது, வீட்ல சும்மா இருக்க போர் அடிக்குது. கையும் பரபரனு இருக்கு. பழைய படி தொழிலுக்குப் போனா கொஞ்சம் காசு பார்க்கலாம்னு பயபுள்ள கௌம்பியிருக்கான். சிக்கிட்டான். இதுதான் பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்ங்கறது போல.
இந்த திருட்டுப்பயலுக்கு வயசு என்ன தெரியுமா? வெறும் 28 வயசு தான் ஆகுது. 28 வயசுக்குள்ள 70 பொண்ணுங்கள கற்பழிச்சிருக்கான் படுபாவி.