Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
விஷ்ணுவை ஏன் வியாழக்கிழமை நாளில் வழிபட வேண்டும்?... எப்படி வழிபடணும்?
வியாழக் கிழமைகளில் விஷ்ணுவை ஏன் வழிபட வேண்டும், எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
வியாழக்கிழமை என்பது கடவுள் விஷ்ணு, பிரகஸ்பதி, குருபகவான் ஆகியோரை வழிபடுவதற்கான சிறப்பு திறமாகும். அதோடு இந்த நாள் ரிகஸ்பதிவார் என்று அழைக்கப்படும். வியாழக்கிழமையை குருவாரம் என்ற சிறப்பையும் பெற்றிருப்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான்.

இந்த வியாழக்கிழமை நாளில் பக்தர்கள் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே என்ற பாடலைக் கேட்டும் துதித்தும் விஷ்ணுவை வணங்குவதுண்டு.

சடங்குகள்
பக்தர்கள் வியாழக்கிழமை நாளில் மஞ்சள் நிற ஆடை அணிவார்கள். கடவுள் விஷ்ணுவுக்கும் பிரகஸ்பதிக்கும் மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு பூஜைகள் செய்யப்படும்.

விரதம்
அன்றைய நாள் முழுக்க சாப்பிடாமல் விரதம் இருந்து ஒரே ஒருமுறை மட்டும் நெய்யுடன் கடலைப்பருப்பு சேர்த்து உணவாக உட்கொள்வார்கள். அதாவது மஞ்சள் நிற உணவை உண்ண வேண்டும் என்பதற்கான கடலைப்பருப்பும் நெய்யும் தேர்வு செய்யப்படுகிறது.

வாழைக்கன்று
நிறைய பேர் வியாழக்கிழமையில் விஷ்ணுவுக்கு பூஜை செய்கின்ற பொழுது, கடவுளுக்கு வாழைப்பழமும் சிலர் சிறிய வாழைக்கன்றையும் வைத்து வழிபடுவதுண்டு.

லட்சுமியும் ஹனுமனும்
வங்காளத்தில் வியாழக்கிழமை நாட்களில் மக்கள் லட்சுமி தேவியை வழிபாடு செய்வதுண்டு. அதேபோல் ஹனுமன் கோவிலுக்கு வியாழக்கிழமைகளில் செல்வதுண்டு.

நம்பிக்கை
கடவுள் விஷ்ணு தன்னை உண்மையாக நினைத்து வழிபடுகிற பக்தர்களுக்கு வியாழக்கிழமை நாட்களில் தான் காட்சி தருவாராம். சிலர் அன்று பிகஸ்பதி வடிவில் வருவார் என்று சொல்லப்படுகிறது. வியாழக்கிழமை நாட்களில் தங்களுடைய கடமையை ஒதுக்கி விட்டு பூஜை செய்கிறேன் என்பவர்களையும் விஷ்ணு கண்டுகொள்வதில்லை என்ற நம்பப்படுகிறது. தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்பு குட்டுவிரதம் இருந்து வுணடுபவர்களை விஷ்ணு ஏற்றுக் கொள்வாராம்

நிறமும் அதிர்ஷ்ட கல்லும்
விஷ்ணுவுக்கும் வியாழக்கிழமைக்கும் உகந்த நிறம் என்றால் அது மஞ்சள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதேபோல் புஷ்பராகம் மற்றும் மஞ்சள் நிற கனக புஷ்பராகக் கல் தான் விஷ்ணுவுக்கு இஷ்டமான அதிர்ஷ்டக் கற்கள் ஆகும்.

கோள்
கடவுள் விஷ்ணுக்கு உகந்த விருப்பமான அதிர்ஷ்ட கிரகம் என்றால் அது வியாழன் தான்.
இப்படி வியாழக்கிழமைக்கும் மஞ்சள் நிறத்துக்கும் கடவுள் விஷ்ணுவுக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதைப் புரிந்து நாம் வழிபட்டால் கடவுள் நமக்கு சகலவித நன்மைகளை அள்ளித் தந்து அருள் பாலிப்பார்.

புரட்டாசியும் மார்கழியும்
புரட்டாசி மாதமும் மார்கழி மாதமும் தான் மாதங்களிலேயே புனிதத்துக்கு உரியவையாக கருதப்படுகின்றன. அதனால் தான் இந்த இரண்டு மாதங்களிலும் பெருமாள் வழிபாட்டுக்கு உரிய கடவுளாகப் போற்றப்படுகிறார். இவைற்றில் குறிப்பாக மார்கழி மாதம் மோட்சத்துக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications