Just In
- 1 hr ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 1 hr ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 2 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 3 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- News குரங்கு சேட்டை பண்ண முடியாது..பெற்றோர் வயிற்றில் பால் வார்த்த கோர்ட்..! பஸ்களில் இனி தானியங்கி கதவு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
வார ராசிபலன்கள் 25.6.18 to 1.7.18 இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 28.5.18 to 3.6.18 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
செய்கின்ற தொழிலை விரிவுபடுத்துவுதற்கான புதிய புதிய வாய்பபுகள் உண்டாகும். பெற்றோருடைய சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். வீட்டில் உடன் பிறந்த சகோதரர்களால் சாதகமான சூழல்கள் உண்டாகும். நண்பர்களின் உதவிகளின் மூலம் உங்களுடைய பொருளாதாரம் அதிகரிக்கும். அரசாங்கப் பணிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும். எதையும் துணிவோடு அணுகும் ஆற்றல் பெருகும். பொது இடங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். முன்னோர்கள், மகான்களுடைய தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கும். ஆ்னமீக வழிபாட்டை மனம் நாடிச் செல்லும். வீட்டில் உள்ளவர்களிடம் கொ்ஞசம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பணியில் உள்ளவர்களுக்கு வேலை சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். மனதில் சிறுசிறு தேவையற்ற குழப்பங்கள் வந்து போகும். அதனால் மனச்சோர்வு ஏற்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ பெருமானை வழிபாடு செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.
ரிஷபம்
பொது காரியங்களில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் அமைதி காத்திருப்பது நல்லது. தொழிலிலோ அல்லது வீட்டிலோ புதிதாக ஏதேனும் முடிவெடுக்க நினைத்தால் வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டுக்கொண்டு பின் முடிவெடுங்கள். வாகனங்களில் பயணம் செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் முழு கவனத்துடன் கொஞ்சம் நிதானமாகவே செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். பேச்சுக்களின் மூலம் தன லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நிர்வாகம் தொடர்புடைய முடிவுகளில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் மூலம் வருமானம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். பண வரவு அதிகரிக்கும்.
மிதுனம்
உறவினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. எதிர்பாராத சில வீண் செலவுகள் வந்து சில நெருக்கடியான சூழல் உண்டாகும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் எந்த வம்பு, வீண் விவாதங்களிலும் ஈடுபடாதீர்கள். வீட்டில் கால்நடைகள் ஏதேனும் இருந்தால், அதன் மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வங்கிக் கடன்கள் வந்து சேரும். புண்ணிய காரியங்கள் மேற்கொள்வீர்கள். கோவில்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்க்ள. வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். செவ்வாய்க் கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கடன் தொல்லை தீரும்.
கடகம்
கோர்ட் சம்பந்தப்பட்ட இதுவரை இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அது உங்களுக்குச் சாதகமாகவும் வரும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கடன் தொல்லை உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உறவினர்களுக்கு இடையே சிறுசிறு மனக்கசப்புகள் வந்து போகும். தொழிலில் அலைச்சல்கள் இருந்தாலும் பிறகு அனுகூலங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிக்க சிறிது கால தாமதம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்னைகள் விலகி, உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். துன்பங்கள் நீங்கி, தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும்.
சிம்மம்
தாயின் சகோரதரர்கள் வழியில், உங்களுடைய தொழிலுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருங்கள். வீட்டுக்கு உறவினர்களின் வருகை உண்டாகும். அதனால் வீட்டில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதையும் பாராட்டுக்களும் புகழும் வந்து குவியும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். நீங்கள் செய்யுமு் முக்கிய வேலையால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் வந்து சேரும். நினைத்த காரியங்கைளச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும். புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்யுங்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் பெருகும்.
கன்னி
பொது இடங்களில் மற்றவர்குள் முன் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் வந்து சேரும். பயணங்களில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு தடைகள் விலகும். புதிய முயற்சிகளை செய்து பார்க்க ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் தெளிவான சிந்தனைகளை சிந்தனைகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கத் துணிவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். தொழிலை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீகத்தில் உங்கள் மனம் ஈடுபடும். சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வாருங்கள். நினைத்த காரியங்கள் சுபமாக முடிவடையும்.
துலாம்
தொழிலில் உங்களுடைய திறமைக்கு தக்க மரியாதை கிடைக்கும். வெளியிடங்களில் மதிப்புகள் உயரும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் உண்டாகும். சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும் சிறிது கவனத்துடன் செயல்படுங்கள். வாகனங்களில் செல்லும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளால் கொஞ்சம் சாதகமான சூழல் ஏற்படும். தனலாபம் உண்டாகும். அதனால் உங்களுடைய சேமிப்பு உயரும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வாருங்கள். இன்னல்கள் தீரும்.
விருச்சிகம்
கலைஞர்களுக்கு திறமைக்குற்ற முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த சூழல் டைகள் நீங்கி, பல புதிய வாய்ப்புகள் உருவாகும். மக்கள் தொடர்புத் துறையில் இருப்பவர்குள் சிறிது கவனத்துடன் செயல்படுங்கள். நண்பர்களுடைய ஆதரவினால் இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் விலகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் சிறிது கவனம் செலுத்துங்கள். மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு வெளியிடங்களில் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். எந்த விலை மதிப்புமிக்க பொருள்களைக் கையாண்டாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிர் பாலினத்தவர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையை அனுசரித்துச் செல்லுங்கள். விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வினைகள் தீரும்.
தனுசு
உங்களுடைய பேச்சுத் திறமையினாலும் வாக்கு வன்மையாலும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லாபம் பல மடங்காக உயரும். புதிய நண்பர்களுடைய ஆதரவினால் வீட்டில் சுபிட்சம் உண்டகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்கத் தரப்பிடமிருந்து எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதற்கு கொஞ்சம் கால தாமதமாகும். எதையும் கொஞ்சம் நிதானமாகவே செயல்படுங்கள். உங்களுடைய நிதானமான செயல்பாடுகள் தான் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். கால பைரவரை வழிபட்டு வந்தால், நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
மகரம்
தொழில் தொடர்பான பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உங்களுடைய எண்ணங்களால், சிறு சிறு எண்ண மாற்றங்கள் ஏற்படும். ஞாபக மறதி வந்து போகும். நினைவாற்றலில் கொஞ்சம் மந்தத்தன்மை உண்டாகும். வீட்டில் பொன் சேர்க்கையும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். தேவையில்லாதவர்களிடம் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். வீண் விவாதங்கள் மனக் கசப்புகளை ஏற்படுத்தும். பெற்றோர்கள் பற்றிய, அவர்களுடைய உடல் நலம் குறித்த அக்கறையும் கவலைகளும் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேற கொஞ்சம் கால தாமதமாகும். வீட்டில் நடக்கும் சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சனீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். மனக்கவலைகள் தீரும்.
கும்பம்
தொழிலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழிலைப் பொருத்தவரை புதுிய முதலீடுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. கால்நடைகள் பற்றிய விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. உறவினர்களுடைய புரிதல் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. உறவுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல்களால் விரயச் செலவுகள் உண்டாகும். பொதுக்கூட்டங்கள் மற்றும் புதிய நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேற்படிப்புக்கான செலவுகள் அதிகரிக்கும். புதுபுது ஆராய்ச்சி எண்ணங்கள் வந்து போகும். பதவி உயர்வுக்கான முயற்சிகள் உண்டாகும். அஷ்ட லட்சுமியை வழிபடுங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.
மீனம்
நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.விவசாயம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவு லாபம் உண்டாகும். உங்களுடைய வேலை திறமையால் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பிறருக்கு அழகாக எடுத்துரைக்கும் ஆற்றலால், நல்ல மதிப்பை பெறுவீர்கள். மனதில் இருந்து வந்த சிறுசிறு கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.பொருள் சேர்க்கை உண்டாகும். பயணங்களின் 5லம் மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுவோருக்கு சாதகமான பலனகள் உண்டாகும். பெற்றோர்கள் உடல் நலம் பற்றிய கவலைகள் அதிகமாகும். குரு பகவானை வழிபட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.