Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வெளியில் கிளம்பும்போது பூனை தவிர வேறு எந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுனம் உண்டாகும்?
நாம் எங்காவது வெளியில் கிளம்புகிற பொழுது, எந்தெந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுணம் என்பது பற்றி இங்கே விரிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மக்களின் நம்பிக்கை படி சில விலங்குகளை பார்ப்பது இயற்கையிலேயே துஷ்ட சகுணம் என்கிறார்கள். அப்படி பார்க்கையில் பூனை குறுக்கே போவது கெட்ட சகுணமாகக் கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் மற்றொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெறுமனே நாம் வெளியில் கிளம்புகிற பொழுது வரும் பூனை மட்டும் அபசகுனம் அல்ல. அதுபோன்று இன்னும் சில விலங்குகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொண்டு நடப்பது அவற்றின் கெட்ட அதிர்வுகளில் இருந்து தப்பிக்க முடியும். அதுதான் நமக்கும் நல்லது.

அபசகுனம்
நாம் எதாவது ஒரு வேலையைச் செய்ய புறப்படும் போது இப்படி பூனை குறுக்கே போவதால் அந்த காரியம் விலங்காது என்றும் அதில் வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் கூறப்படுகிறது. எனவே சில நிமிடங்கள் நின்று பூனை சென்ற பின் செல்வது நல்லது என்று மக்கள் கூறுகின்றனர். இதே போல் சில கெட்ட சகுணங்களைக் காட்டும் விலங்குகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பல்லி
பல்லி ஒரு அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் புனிதமான உயிரினமாகவும் கருதப்படுகிறது. இது நீங்கள் செல்லும் வழியில் கடந்து சென்றால் உங்களுக்கு நல்ல நேரம் வருகிறது என்கிறது. அதாவது உங்களுக்காக ஒரு முக்கியமான வேலை காத்திருக்கிறது என்றும் அதில் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆந்தை
நீங்கள் வெளியே செல்லும் போது ஆந்தை உங்களை கடந்து சென்றாலோ அல்லது அதை நீங்கள் பார்த்தாலோ இயற்கை நம்மிடம் ஏதோ சொல்ல வருகிறது. ஆந்தை நமது அறிவை காட்டுகிறது. அதாவது உங்களுக்கு எதாவது குழப்பம் நேரப் போவதையும் உங்கள் முழு நம்பிக்கையோடு போக வேண்டிய காரியத்தை செய்ய வேண்டும் என்று இது காட்டுகிறது.

கிளி
கிளி உங்களை கடந்து சென்றாலோ அதை பார்த்தாலோ நல்ல சகுணமாக சொல்லப்படுகிறது. அதாவது பறவைகள் இப்படி குறுக்கே வருவது அல்லது பார்ப்பது முன்னோர்களின் ஆசிர்வாதம் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் நம்பிக்கையுடன் சென்றால் நினைச்ச காரியம் நிறைவேறும்.

கழுகு
கழுகின் பெரிய கண்கள் நமக்கு ஆர்வத்தை தருகிறது. கழுகு நம் பாதையை கடக்கும் போது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள மிகப் பெரிய பாடம் நமக்கு வரப் போகிறது என்பதை காட்டுகிறது.

பச்சோந்தி
சில சமயங்களில் நாம் விரும்பிய இலக்கை நாம் அடையாவிட்டால் இலக்கை மாற்றிக் கொள்ள முயலுவோம். ஆனால் நீங்கள் பச்சோந்தியை பார்த்தாலோ அல்லது பச்சோந்தி கடந்து சென்றாலோ உங்கள் இலக்கை மாற்றாமல் அதிலேயே உங்கள் கவனத்தை செலுத்துங்கள். வெற்றி நிச்சயம் என்பதை காட்டுகிறது.



Click it and Unblock the Notifications











