Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
வெளியில் கிளம்பும்போது பூனை தவிர வேறு எந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுனம் உண்டாகும்?
நாம் எங்காவது வெளியில் கிளம்புகிற பொழுது, எந்தெந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுணம் என்பது பற்றி இங்கே விரிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மக்களின் நம்பிக்கை படி சில விலங்குகளை பார்ப்பது இயற்கையிலேயே துஷ்ட சகுணம் என்கிறார்கள். அப்படி பார்க்கையில் பூனை குறுக்கே போவது கெட்ட சகுணமாகக் கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் மற்றொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெறுமனே நாம் வெளியில் கிளம்புகிற பொழுது வரும் பூனை மட்டும் அபசகுனம் அல்ல. அதுபோன்று இன்னும் சில விலங்குகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொண்டு நடப்பது அவற்றின் கெட்ட அதிர்வுகளில் இருந்து தப்பிக்க முடியும். அதுதான் நமக்கும் நல்லது.

அபசகுனம்
நாம் எதாவது ஒரு வேலையைச் செய்ய புறப்படும் போது இப்படி பூனை குறுக்கே போவதால் அந்த காரியம் விலங்காது என்றும் அதில் வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் கூறப்படுகிறது. எனவே சில நிமிடங்கள் நின்று பூனை சென்ற பின் செல்வது நல்லது என்று மக்கள் கூறுகின்றனர். இதே போல் சில கெட்ட சகுணங்களைக் காட்டும் விலங்குகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பல்லி
பல்லி ஒரு அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் புனிதமான உயிரினமாகவும் கருதப்படுகிறது. இது நீங்கள் செல்லும் வழியில் கடந்து சென்றால் உங்களுக்கு நல்ல நேரம் வருகிறது என்கிறது. அதாவது உங்களுக்காக ஒரு முக்கியமான வேலை காத்திருக்கிறது என்றும் அதில் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆந்தை
நீங்கள் வெளியே செல்லும் போது ஆந்தை உங்களை கடந்து சென்றாலோ அல்லது அதை நீங்கள் பார்த்தாலோ இயற்கை நம்மிடம் ஏதோ சொல்ல வருகிறது. ஆந்தை நமது அறிவை காட்டுகிறது. அதாவது உங்களுக்கு எதாவது குழப்பம் நேரப் போவதையும் உங்கள் முழு நம்பிக்கையோடு போக வேண்டிய காரியத்தை செய்ய வேண்டும் என்று இது காட்டுகிறது.

கிளி
கிளி உங்களை கடந்து சென்றாலோ அதை பார்த்தாலோ நல்ல சகுணமாக சொல்லப்படுகிறது. அதாவது பறவைகள் இப்படி குறுக்கே வருவது அல்லது பார்ப்பது முன்னோர்களின் ஆசிர்வாதம் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் நம்பிக்கையுடன் சென்றால் நினைச்ச காரியம் நிறைவேறும்.

கழுகு
கழுகின் பெரிய கண்கள் நமக்கு ஆர்வத்தை தருகிறது. கழுகு நம் பாதையை கடக்கும் போது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள மிகப் பெரிய பாடம் நமக்கு வரப் போகிறது என்பதை காட்டுகிறது.

பச்சோந்தி
சில சமயங்களில் நாம் விரும்பிய இலக்கை நாம் அடையாவிட்டால் இலக்கை மாற்றிக் கொள்ள முயலுவோம். ஆனால் நீங்கள் பச்சோந்தியை பார்த்தாலோ அல்லது பச்சோந்தி கடந்து சென்றாலோ உங்கள் இலக்கை மாற்றாமல் அதிலேயே உங்கள் கவனத்தை செலுத்துங்கள். வெற்றி நிச்சயம் என்பதை காட்டுகிறது.



Click it and Unblock the Notifications











