For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடு ரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

பெண்களை சூனியக்காரிகள் என்று பட்டம் கட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை அடித்தே கொலை செய்யும் கொடூர மக்களைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்.

|

பெண்களை இன்னும் எப்படியெல்லாம் இழிவுபடுத்தலாம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும், இந்த நூற்றாண்டிலும் பெண்கள் இந்த பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.

தவறு செய்து தண்டனை வாங்குவதை விட நீங்கள் தவறே செய்யாமல் பிறர் நீங்கள் தவறு செய்திருக்கக்கூடும் என்று உத்தேசித்து தண்டனை நிறைவேற்றினால்? அந்த தண்டனையினால் ஏரளமான உயிர்கள் பறிபோனால் என்ன நடக்கும்....

கிராமங்களில் சில இனத்தைச் சேர்ந்த அல்லது குறிப்பிட்ட பெண்கள் இவள் சூனியக்காரி என்று பட்டம் கட்டி பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நாற்பது வயது பெண்ணான பஹுரா பாய் மார்க்கெட்டில் தன் மைத்துனரை சந்திக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் கையை பிடித்துக் கொண்டு நலம் விசாரிக்கிறார். வீட்டிற்கு வர வேண்டும் என்று அன்பு கட்டளையிடுகிறார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த அன்றைய இரவே அந்த மைத்துனருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அண்ணி என்னைத் தொட்டதால் தான் இப்படி ஆகிவிட்டது, அவள் சூனியக்காரி என்று கிளப்பிவிட ஊரெங்கும் பரவியது.

Image Courtesy

#2

#2

அவ்வூரின் தலைவரும் 40 வயதுடைய பஹூரா பாய் சூனியக்காரி அவரிடம் மக்கள் இனி யாரும் பழக வேண்டாம், அவரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் சற்று ஜாக்கிறதையாக இருக்கவும் என்று கட்டளையிட்டார். அன்றிலிருந்து இந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்திற்கு எண்ணற்ற தொந்தரவுகளை கொடுத்திருக்கிறார்கள் மக்கள்.

அவர்கள் நான் சூனியக்காரி என்று சொல்கிறார்கள் உண்மையில் நான் அப்படியா என்று தினமும் நான் வணங்கும் தேவியிடம் கேட்டுக் கொள்வேன். அவர்கள் என்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்கிறார் அந்தப் பெண்.

Image courtesy

 #3

#3

இவரைப் போலவே ஐம்பத்தைந்து வயதுடைய பெண்மணி அதே சட்டீஸ்கர் மாநிலம் பீமெடாரா மாவட்டத்தில் மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். காரணம், அவர் மாந்திரீக பூஜைகளை செய்தார் என்பது. வீட்டிலிருந்தவரை அடித்து,தலையைப் பிடித்து இழுத்து உடைகளை எல்லாம் கிழித்தெரிந்து நிர்வாணமாக அவரை சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள்.

2000 ஆம் ஆண்டும முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சூனியக்காரி என்று சந்தேகப்பட்டு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை கொன்றிருக்கிறார்கள். ஊருக்கு பயந்து கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் புகார் கொடுக்காமல் தவிர்த்ததும் ஏராளம்.

Image Courtesy

#4

#4

அந்த மாதம் விளைச்சல் சரியாக இல்லை, மழை பொழியவில்லை வீட்டில் யாருக்கேனும் உடல் நலம் சரியில்லை இப்படி எந்த சம்பவங்கள் நிகழ்ந்தாலும் பெண்ணை பழித்து உன்னால் தான் இப்படி நீ சூனியம் வைத்துவிட்டாய் என்று பட்டம் கட்டி விடுகிறார்கள்.

குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், திருமணமாகியும் நீண்ட காலமாக குழந்தை இல்லாத பெண்கள்,வயதான பெண்கள் தான் இதில் அதிகமாக சிக்குகிறார்கள்.

Image Courtesy

#5

#5

யார் சூனியக்காரி என்று கண்டுபிடிக்க இவர்கள் ஒரு முறையை பின்பற்றுகிறார்கள். சிறிய பைகளில் தானியங்களை கட்டி அவ்வூரில் அதிகம் இருக்கிற வெள்ளை நிற எறும்புகள் வருகிற பக்கம் வைக்கிறார்கள்.

கட்டி வைக்கப்பட்ட ஒவ்வொரு பையிலும் அவர்கள் சூனியக்காரி என்று நம்பும் பெண்ணின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த பையை திறந்து பார்த்தால் எதில் அதிக தானியம் குறைந்திருக்கிறதோ அந்த பையில் எழுதப்பட்டிருக்கும் பெண் தான் சூனிய்க்காரி என்று தீர்மானிக்கிறார்கள்.

Image Courtesy

#6

#6

இந்த சூனியம், மாந்திரீகம் ஆகியவை செய்வதாக தாக்கப்படுவது எல்லாமே பெண்கள் தான். இவ்வூர்களில் குழந்தை பிறப்பிலிருந்தே ஆண் பெண் பேதங்கள் அதிகமாக பார்க்கப்படுகிறது. அதோடு முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் இதற்கு காரணம் என்றும் தீவிரமாக நம்புகிறார்கள்.

Image Courtesy

#7

#7

இவர்களாக கட்டுக்கதைகளை நம்பி சூனியக்காரி என்றால் மனித மாமிசம் சாப்பிடுவாள், நம் ரத்தத்தை எல்லாம் உறிந்து கொள்வாள் என்று அச்சப்படுகிறார்கள். இயற்கையாக நிகழக்கூடிய நிகழ்வுகளை கூட சூனியக்காரி கைவைத்ததால் தான் ஆனது என்று நினைக்கிறார்கள்.

Image Courtesy

#8

#8

இப்படி சூனியக்காரி என்று பாதிக்கப்பட்ட தீரத் சாஹூ என்ற பெண் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஒரு நாள் திடீரென்று என் வீட்டிற்குள் சிலர் நுழைந்தார்கள். உள்ளறையில் இருந்த என்னை இழுத்துக் கொண்டு சென்றார்கள் என்ன நடக்கிறது எதற்காக? என்னை கொண்டு செல்கிறார்கள் என்று எதுவும் எனக்குத் தெரியாது.

அங்கே போனால் ஊரே கூடி நிற்கிறது. என்னோடு சேர்த்து இன்னும் இரண்டு பெண்களும் அங்கே தனியாக நிற்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர் பிஷைன் பாய் மற்றும் ஷியாமா பாய்.

Image Courtesy

#9

#9

எதற்காக இந்த கூட்டம் என்று நாங்கள் உணர்வதற்குள்ளேயே இவர்கள் மூன்று பேரும் சூனியக்காரிகள் என்று தீர்பளித்துவிட்டார் எங்கள் ஊர் தலைவர். அவ்வளவு தான் மக்கள் பிரம்பை எடுத்துக் கொண்டு எங்களை அடிக்கப் பாய்ந்தார்கள். அடித்து முடியை வெட்டி, சேலையைக் கிழித்து நிர்வாணமாக தெருத்தெருவாக ஓடவிட்டார்கள் அவர்களின் சிறுநீரை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். இதை விட கொடுமையாக எங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது.

சூனியக்காரிகள் கரண்ட் ஷாக் அடித்தாலும் பிழைத்துக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பியதால் நாங்கள் சூனியக்காரிகள் தான் என்பதை மக்களுக்கு நீருபிக்க எங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது.

Image Courtesy

#10

#10

இந்த சம்பவம் நடக்கும் போது ஊரிலிருக்கும் மற்ற பெண்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். நாங்கள் மயங்கி விழும் வரை எங்களை அடித்தார்கள். அதோடு எங்கள் மானம் கௌரவம் எல்லாம் போய்விட்டது. இந்த சம்பவம் இன்று வரையில் விவாதிகக்ப்படுகிறது 20 பேர் வரை இதில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டார்கள்.

உண்மை எனக்குள்ளே உறங்கிக் கிடக்கிறது. பெண்கள் சூனியக்காரிகள் இல்லை என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொண்டால் ஏன் அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை

Image Courtesy

#11

#11

இது இன்னொரு பெண்ணின் கதை. நான் நடந்து சென்று கொண்டிருந்த போது புதிதாக சைக்கிள் ஓட்டப் பழகிய சிறுமி தடுமாறி விழப் போனால் அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நான் சட்டென்று பிடித்துக் கொண்டேன். பின்னர் அவளை இறங்கச் சொல்லி சைக்கிளை திருப்பி பத்திரமாக வீட்டிற்கு போ என்று அனுப்பி வைத்தேன்.

அவளுக்கு என்ன ஆனதோ, வீட்டிற்கு செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்திருக்கிறாள். அவ்வளவு தான் இந்த பெண்மணி என் மகளுக்கு சூனியம் வைத்துவிட்டாள் என்று கத்தி கூச்சலிட்டார்கள் அந்த சிறுமியின் உறவினர்கள்

Image Courtesy

#12

#12

இந்தப் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கும் போதே என் மாமியாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது மீண்டும் உன்னால் தான் இப்படி ஆகிறது என்று சொல்லி என் குடும்பமே என்னை வெறுத்து ஒதுக்கியது. என் குடும்பத்திலும் சரி ஊரிலும் சரி தீண்டத்தாகதவளாகவே நடத்தப்படுகிறேன். இது கூட பராவாயில்லை என் அண்டை வீட்டில் வசித்த ஒரு பெண்ணும் சூனியக்காரி என்று குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்கிறவர் அந்த கதையையும் பகிர்ந்து கொண்டார்.

ஒரு இரவில் திடீரென்று ஒரு பெண் கத்தும் சத்தம் கேட்டது எழுந்து வெளியே போனால் என் பக்கத்து வீட்டிலிருந்து தான் அந்த சத்தம் வருவது கேட்டது உள்ளே சென்று என்னாயிற்று என்று பார்க்கப் போனேன்.... நான் சென்ற சிறிது நேரத்தில் ஏற்கனவே மயங்கி கிடந்த அந்த நபருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. அவ்வளவு தான் உன்னால் தான் இது நீ சூனியக்காரி என்று பட்டம் கட்டிவிட்டார்கள். இப்படி ஏராளமான பெண்கள் இன்னும் மோசமான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse women
English summary

Shocking Story About a Women Witches

Shocking Story About a Women Witches
Desktop Bottom Promotion