Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மொதல்ல ஏன் பால், பழம் தர்றாங்க தெரியுமா? இதுக்குதான்...
திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகளுக்கு முதலில் ஏன் பாலும் பழமும் கொடுக்கிறார்கள் என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
புதிதாக திருமணம் நடந்து முடிந்ததும் திருமணம் ஆன புதுமண தம்பதிகளை வீட்டுக்கு அழைத்து வந்ததும் அவர்களுக்கு முதலில் ஒரு டம்ளர் பாலும் பழமும் தான் கொடுப்பார்கள்.

அது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் மட்டுமல்ல, நவீனமயமாகிவிட்ட இன்று வரையிலும் காலம் காலமாக இந்த சம்பிரதாயங்கள் நம்மிடையே தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுபற்றி இந்த கட்டுரையில் விளக்காமப் பார்க்கலாம்.

திருமணச் சடங்குகள்
தமிழகம் ஏன் இந்தியாவைப் பொறுத்தவரையில் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவை பெரும்பாலும் சாதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன. திருமணச் சடங்குகளும் அவ்வாறுதான். அவரவர் சாதியைப் பொறுத்து வேறுபடுகின்றன. ஆனால் இந்த பால், பழம் கொடுக்கும் சடங்கை நீங்கள் கவனித்தால் தெரியும். அது எல்லா சாதியினரிடத்தும் உண்டு. இந்த சடங்கின் அடிப்படைக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் இதற்குக் காரணம். அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மணப்பெண்
ஒரு பெண் தான் பிறந்து வளர்ந்த சூழலை விட்டுவிட்டு தான் மணம் முடிக்கும் ஆணின் குடும்பத்துக்கு புதுவிதமான சூழலில் வந்து வாழ வேண்டிய சூழலில் இருக்கிறாள். கணவன் வீட்டாரின் சூழலில் சொல்லப்படும் சில வார்த்தைகள் மற்றும் உறவினர்களின் கிண்டல்கள் ஆகியவற்ளைக் கேட்டு, புது சூழலில் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு. அதனால் சில பெண்கள் பயந்தும் விடுவார்கள்.

பசுவின் பால்
ஒரு பசு மாடானது விஷத்தையே சாப்பிட்டாலும் கூட தான் தருகின்ற பாலில் துளி கூட எப்படி விஷம் இல்லாமல் சுத்தமா இருக்குமோ அதுபோன்று கணவன் வீட்டில் உள்ளவர்களால் உங்களுக்குத் தீமையே நேர்ந்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை நீ ஒருபோதும் கொட்டிவிடக் கூடாது என்பதற்காகத் தான் பால் கொடுக்கப்பகிறது.

பழம்
அதேபோலத் தான் வாழைப்பழம் கொடுப்பதற்குப் பின்பாகவும் ஒரு சிறு பின்னணி உண்டு. வாழைப்பழத்தில் எப்படி அடுத்த சந்ததியை உண்டாக்குவதற்கான விதை இல்லாமல் இருந்தாலும் மூலமரத்தைச் சார்ந்து அது அடுத்த தலைமுறை வாழைக் கன்றைத் தருகிறதோ அதுபோல கணவனைச் சார்ந்து வம்ச விருத்தியைத் தர வேண்டும் என்பதைக் குறிப்பது தான் இந்த வாழைப்பழம்.

மணமகனுக்கு
பெண்ணுக்கு பாலும் பழமும் கொடுக்கப்படுவதற்கான காரணங்கள் தெரிந்துவிட்டது. அது ஓகே. ஆனால் கூட இருக்கும் மணமகனுக்கும் பால், பழம் கொடுக்கப்படுவது எதனால் என்ற சந்தேகம் வரத்தான் செய்யும். அதற்கும் சில காரணங்கள் உண்டு. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

பால் கொடுப்பது
ஆணே இந்த பாலில் எப்படி தயிரும் நெய்யும் அடங்கியிருக்கிறதோ அதேபோல இந்த பெண்ணுக்குள்ளும் அறிவும் ஆற்றலும் நிரம்பியிருக்கிறது. அதை பக்குவமாக உறையிட்டு, பக்குவமாகக் கடைந்து வெண்ணெய், நெய்யை உருக்கி எடுக்க வேண்டுமே ஒழிய, ஒருபோதும், பாலை கெட வைத்துவிடாதே என்பதை ஆணுக்கு உணர்த்துவதற்காகத் தான் மணமகனுக்கு பால் கொடுக்கப்படுகிறது.

வாழைப்பழம்
வாழைக்கன்றை எப்படி அதனுடைய தாய் மரத்தின் அடியில் உள்ள நிழலில் இருந்து பக்குவமாக பிரித்து எடுத்து, அதை வேறு இடத்தில் சென்று நடுகிறோமோ அதுபோல, அந்த பெண்ணை அவளுடைய வீட்டில் இருந்து பிரித்து உன்னுடைய வீட்டில் நடுகின்றோம். அதிலிருந்து பக்குவமாக வளர்த்தெடுத்து உன்னுடைய சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்வது உன்னுடைய பொறுப்பு. அது உன்னுடைய கையில்தான் இருக்கிறது என்பதை புரிய வைப்பதற்காகத் தான் இந்த வாழைப்பழம் மணமகனுக்குக் கொடுக்கப்படுகிறது.

பின்னணி
இதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும். நம்முடைய முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் சம்பிரதாயத்துக்கும் சடங்குகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு முக்கியமான காரணம் இருந்திருக்கிறது. அது தெரியாமல் நாம் அவலற்றையெல்லாம் வழக்கொழித்துவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டாலே போதுமானது.



Click it and Unblock the Notifications











