Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஆறு எடத்துக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்... வாஸ்து சொல்லுது
நாம் வீடு கட்டும்போது எந்தெந்த இடங்களில் வீடு இருக்கக் கூடாது என்பது பற்றிய வாஸ்து முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வாஸ்துப்படி ஒரு வீட்டை கட்டி முடிப்பது தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் வீட்டினுள் அப்பொழுது தான் நேர்மறை ஆற்றல் நிலவும்.

இந்த நேர்மறை ஆற்றலைக் கொண்டு கடவுளை நோக்கி நீங்கள் பூஜிக்கையில் நினைத்தது நிறைவேறும், சகல செளபாக்கியமும் உங்கள் வீட்டிற்கு கிடைக்கும்.

வாஸ்து முறைகள்
எனவே வீட்டை கட்டுவதில் இருக்கும் அளவீடுகளும் அமைப்புகளும் மிகவும் முக்கியம். அதை தவறாக அமைத்தால் நிறைய பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். இங்கே வீட்டை எந்த இடத்தில் கட்டக்கூடாது என்பதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறுக்கான ரோட்டிற்கு அருகில்
இந்துக்களின் புனித நூலான பவிஷ்ய புரான் குறுக்கான ரோட்டிற்கு அருகில் வீட்டை கட்டக் கூடாது என்று கூறுகின்றது. இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வீட்டை கட்டுவது வசிப்பதற்கு சரி வராது என்கின்றது. இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இறைச்சி கடைக்கு அருகில்
வீடானது இறைச்சி கடைக்கு அப்பால் இருப்பது தான் நல்லது. ஏனெனில் இறைச்சி கடையிலிருந்து வரும் எதிர்மறை ஆற்றல் அங்கு அருகில் வசிப்பவர்களையும் பாதிக்க கூடும். இது வறுமையை ஏற்படுத்தும் மற்றும் வீட்டின் மகிழ்ச்சியை தடுக்கலாம்.

மருத்துவமனைக்கு அருகில்
மருத்துவமனைக்கு அருகில் வீடு வாங்குவதை தவிருங்கள். ஏனெனில் கிருமிகள், காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் எளிதாக உங்களை பரவக் கூடும். அடிக்கடி இறப்பு மற்றும் உடல் நல பாதிப்பு போன்றவை உங்களுக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.

பாழடைந்த இடத்திற்கு அருகில்
எதாவது ஒரு வீடு பாழடைந்து போய் ரெம்ப காலமாக பூட்டியே இருந்தால் அந்த இடத்தில் வீடு கட்டுவது எதிர்மறை ஆற்றலை இழுக்கும். இது ஒரு பெரிய வாஸ்து தோஷமாக கூறப்படுகிறது. இடிந்த நிலையிலோ அல்லது பாழடைந்த நிலையிலோ இருந்தால் வாங்காதீர்கள். ஏனெனில் அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம்.

மதுபான கடைக்கு அருகில்
வாஸ்து சாஸ்திரம் படி மதுபானக் கடைக்கு அருகில் வீட்டை கட்டக் கூடாது. இந்து மதத்தின் படி கெட்ட சக்தி மற்றும் எதிர்மறை ஆற்றல் ஆகியவை மதுபானம், அசைவ உணவுகள் போன்றவற்றால் ஈர்க்க கூடும். எனவே வீடுகளை இந்த மாதிரி இடத்தில் இல்லாமல் சற்று தொலைவில் பார்ப்பது நல்லது.

சுடுகாட்டிற்கு அருகில்
சுடுகாட்டிற்கு அருகிலும் நாம் வீட்டை கட்டக் கூடாது. வாஸ்து சாஸ்திரம்படி எதிர்மறை ஆற்றல் நம் வீட்டினுள் வர வாய்ப்புள்ளது. அதே மாதிரி எதாவது தற்கொலைகள் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலும் வீடு வாங்க வேண்டாம். இதுவும் உங்கள் வீட்டின் ஆற்றலை பாதிக்கும்.



Click it and Unblock the Notifications