Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்த ஆறு எடத்துக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்... வாஸ்து சொல்லுது
நாம் வீடு கட்டும்போது எந்தெந்த இடங்களில் வீடு இருக்கக் கூடாது என்பது பற்றிய வாஸ்து முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வாஸ்துப்படி ஒரு வீட்டை கட்டி முடிப்பது தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் வீட்டினுள் அப்பொழுது தான் நேர்மறை ஆற்றல் நிலவும்.

இந்த நேர்மறை ஆற்றலைக் கொண்டு கடவுளை நோக்கி நீங்கள் பூஜிக்கையில் நினைத்தது நிறைவேறும், சகல செளபாக்கியமும் உங்கள் வீட்டிற்கு கிடைக்கும்.

வாஸ்து முறைகள்
எனவே வீட்டை கட்டுவதில் இருக்கும் அளவீடுகளும் அமைப்புகளும் மிகவும் முக்கியம். அதை தவறாக அமைத்தால் நிறைய பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். இங்கே வீட்டை எந்த இடத்தில் கட்டக்கூடாது என்பதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறுக்கான ரோட்டிற்கு அருகில்
இந்துக்களின் புனித நூலான பவிஷ்ய புரான் குறுக்கான ரோட்டிற்கு அருகில் வீட்டை கட்டக் கூடாது என்று கூறுகின்றது. இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வீட்டை கட்டுவது வசிப்பதற்கு சரி வராது என்கின்றது. இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இறைச்சி கடைக்கு அருகில்
வீடானது இறைச்சி கடைக்கு அப்பால் இருப்பது தான் நல்லது. ஏனெனில் இறைச்சி கடையிலிருந்து வரும் எதிர்மறை ஆற்றல் அங்கு அருகில் வசிப்பவர்களையும் பாதிக்க கூடும். இது வறுமையை ஏற்படுத்தும் மற்றும் வீட்டின் மகிழ்ச்சியை தடுக்கலாம்.

மருத்துவமனைக்கு அருகில்
மருத்துவமனைக்கு அருகில் வீடு வாங்குவதை தவிருங்கள். ஏனெனில் கிருமிகள், காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் எளிதாக உங்களை பரவக் கூடும். அடிக்கடி இறப்பு மற்றும் உடல் நல பாதிப்பு போன்றவை உங்களுக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.

பாழடைந்த இடத்திற்கு அருகில்
எதாவது ஒரு வீடு பாழடைந்து போய் ரெம்ப காலமாக பூட்டியே இருந்தால் அந்த இடத்தில் வீடு கட்டுவது எதிர்மறை ஆற்றலை இழுக்கும். இது ஒரு பெரிய வாஸ்து தோஷமாக கூறப்படுகிறது. இடிந்த நிலையிலோ அல்லது பாழடைந்த நிலையிலோ இருந்தால் வாங்காதீர்கள். ஏனெனில் அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம்.

மதுபான கடைக்கு அருகில்
வாஸ்து சாஸ்திரம் படி மதுபானக் கடைக்கு அருகில் வீட்டை கட்டக் கூடாது. இந்து மதத்தின் படி கெட்ட சக்தி மற்றும் எதிர்மறை ஆற்றல் ஆகியவை மதுபானம், அசைவ உணவுகள் போன்றவற்றால் ஈர்க்க கூடும். எனவே வீடுகளை இந்த மாதிரி இடத்தில் இல்லாமல் சற்று தொலைவில் பார்ப்பது நல்லது.

சுடுகாட்டிற்கு அருகில்
சுடுகாட்டிற்கு அருகிலும் நாம் வீட்டை கட்டக் கூடாது. வாஸ்து சாஸ்திரம்படி எதிர்மறை ஆற்றல் நம் வீட்டினுள் வர வாய்ப்புள்ளது. அதே மாதிரி எதாவது தற்கொலைகள் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலும் வீடு வாங்க வேண்டாம். இதுவும் உங்கள் வீட்டின் ஆற்றலை பாதிக்கும்.



Click it and Unblock the Notifications











