Just In
- 13 min ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 1 hr ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 2 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 3 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இந்த ஆறு எடத்துக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்... வாஸ்து சொல்லுது
நாம் வீடு கட்டும்போது எந்தெந்த இடங்களில் வீடு இருக்கக் கூடாது என்பது பற்றிய வாஸ்து முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வாஸ்துப்படி ஒரு வீட்டை கட்டி முடிப்பது தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் வீட்டினுள் அப்பொழுது தான் நேர்மறை ஆற்றல் நிலவும்.
இந்த நேர்மறை ஆற்றலைக் கொண்டு கடவுளை நோக்கி நீங்கள் பூஜிக்கையில் நினைத்தது நிறைவேறும், சகல செளபாக்கியமும் உங்கள் வீட்டிற்கு கிடைக்கும்.
வாஸ்து முறைகள்
எனவே வீட்டை கட்டுவதில் இருக்கும் அளவீடுகளும் அமைப்புகளும் மிகவும் முக்கியம். அதை தவறாக அமைத்தால் நிறைய பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். இங்கே வீட்டை எந்த இடத்தில் கட்டக்கூடாது என்பதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
MOST READ: எப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா?... அதுக்கு நீங்க பண்ற இந்த 5 விஷயம் தான் காரணம்...
குறுக்கான ரோட்டிற்கு அருகில்
இந்துக்களின் புனித நூலான பவிஷ்ய புரான் குறுக்கான ரோட்டிற்கு அருகில் வீட்டை கட்டக் கூடாது என்று கூறுகின்றது. இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வீட்டை கட்டுவது வசிப்பதற்கு சரி வராது என்கின்றது. இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இறைச்சி கடைக்கு அருகில்
வீடானது இறைச்சி கடைக்கு அப்பால் இருப்பது தான் நல்லது. ஏனெனில் இறைச்சி கடையிலிருந்து வரும் எதிர்மறை ஆற்றல் அங்கு அருகில் வசிப்பவர்களையும் பாதிக்க கூடும். இது வறுமையை ஏற்படுத்தும் மற்றும் வீட்டின் மகிழ்ச்சியை தடுக்கலாம்.
மருத்துவமனைக்கு அருகில்
மருத்துவமனைக்கு அருகில் வீடு வாங்குவதை தவிருங்கள். ஏனெனில் கிருமிகள், காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் எளிதாக உங்களை பரவக் கூடும். அடிக்கடி இறப்பு மற்றும் உடல் நல பாதிப்பு போன்றவை உங்களுக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.
பாழடைந்த இடத்திற்கு அருகில்
எதாவது ஒரு வீடு பாழடைந்து போய் ரெம்ப காலமாக பூட்டியே இருந்தால் அந்த இடத்தில் வீடு கட்டுவது எதிர்மறை ஆற்றலை இழுக்கும். இது ஒரு பெரிய வாஸ்து தோஷமாக கூறப்படுகிறது. இடிந்த நிலையிலோ அல்லது பாழடைந்த நிலையிலோ இருந்தால் வாங்காதீர்கள். ஏனெனில் அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம்.
மதுபான கடைக்கு அருகில்
வாஸ்து சாஸ்திரம் படி மதுபானக் கடைக்கு அருகில் வீட்டை கட்டக் கூடாது. இந்து மதத்தின் படி கெட்ட சக்தி மற்றும் எதிர்மறை ஆற்றல் ஆகியவை மதுபானம், அசைவ உணவுகள் போன்றவற்றால் ஈர்க்க கூடும். எனவே வீடுகளை இந்த மாதிரி இடத்தில் இல்லாமல் சற்று தொலைவில் பார்ப்பது நல்லது.
MOST READ: உங்க முடி சும்மா தொட்டாலே இப்படி வழுக்கிக்கிட்டு போகணுமா? இந்த கற்பூர எண்ணெய தேய்ங்க...
சுடுகாட்டிற்கு அருகில்
சுடுகாட்டிற்கு அருகிலும் நாம் வீட்டை கட்டக் கூடாது. வாஸ்து சாஸ்திரம்படி எதிர்மறை ஆற்றல் நம் வீட்டினுள் வர வாய்ப்புள்ளது. அதே மாதிரி எதாவது தற்கொலைகள் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலும் வீடு வாங்க வேண்டாம். இதுவும் உங்கள் வீட்டின் ஆற்றலை பாதிக்கும்.