Latest Updates
-
கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ரெசிபி...வாழைக்காயை இந்த மாதிரி செய்யுங்க... மட்டன் சுக்கா மாதிரியே இருக்கும்! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கையில் பணம் குவியப்போகுது... -
மணமணக்கும்.. வெந்தயக் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 5 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்! -
3 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கும் உலகின் அதிசய நாடுகள்... இங்க தண்ணீரை விட பெட்ரோல் விலை குறைவாம்...! -
குரு-செவ்வாய் உருவாக்கும் கேந்திர யோகம்: ஏப்ரல் 2-க்கு பின் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க... ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்...! -
10 வரமிளகாயும், 10 பல் பூண்டும் இருந்தா.. 5 நிமிடத்தில் இப்படி சட்னி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வண்டி ஓட்டணும்... இல்லனா ஆபத்து தேடிவரும்...! -
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.. -
தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்!
பாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி - உண்மையா? பொய்யா? (வீடியோ)
பாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி - உண்மையா? பொய்யா? (வீடியோ)
இன்றையை காலக்கட்டத்தில் வெறும் ஒரு கிளிக்கில் செய்திகளை படிக்க முடியும் என்பதால், வதந்திகளும் பொய்யான செய்திகளும் திரும்ப திரும்ப சுற்று வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாக உள்ளன.
இணையத்தில் தாங்கள் பார்க்கும் அனைத்தையும் கண்மூடித்தனமாக மக்கள் நம்பும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன மற்றும் அது உண்மையா பொய்யா என கண்டறிய கூட நம் மக்கள் முயற்சிப்பது இல்லை.

இதன் காரணமாக, குழப்பமும் பயமும் காட்டுத்தீ போல பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இது போன்ற சூழ்நிலைகளில் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.
இதோ! அது போன்ற ஒரு சம்பவத்தில் மக்கள், வித்தியாசமாக இருக்கும் ஒரு விலங்கின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெறித்தனமாக பகிர்ந்துள்ளனர். அந்த விலங்கு பாதி பன்றி போலவும், மீதி பாதி மனித குழந்தை போலவும் உள்ளது.
மேலும் அந்த வதந்தியில், கென்யாவில் தாய் பன்றி ஒன்று விசித்திரமாக தோற்றமளிக்கும் மரபணுமாற்றப்பட்ட மனித பன்றியை ஈன்றெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
அந்த மரபணு மாற்றப்பட்ட மனித பன்றியை பற்றிய முழு உண்மையையும் இங்கே காணலாம்.
அது உண்மைக் குழந்தை அல்ல!
ஒரு சின்ன ஆராய்ச்சியின் படி, இணையத்தில் உலா வரும் 'மரபணுமாற்றப்பட்ட மனித பன்றி'யின் புகைப்படம் உண்மையான உயிருள்ள படைப்பு இல்லை என தெளிவாகிறது. இத்தாலிய கலைஞர் மகனுகோ லய்ரா என்பவரால் சிலிக்கானால் செய்யப்பட்ட படைப்பாகும்.
அது ஒரு போட்டோசூட்!
இந்த புகைப்படங்கள் அக்கலைஞரின் எட்சி தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த சிலிக்கான் சிற்பமானது மிகவும் தத்ரூபமாக தெரியவேண்டும் என்பதற்காக, தொழுவத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. தாய் பன்றியும் கூட அந்த புகைப்படத்தில் காணப்பட்டது.
உண்மையில் இது ஒரு புரளி!
இந்த புகைப்படம் உண்மையா பொய்யா என பயந்துகொண்டு இருந்தவர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் இது புரளியை தவிர வேறொன்றும் இல்லை.
இது போன்ற சுவாரஸ்யமான பல தகவல்களை தெரிந்துகொள்ளவும், புரளிகளை ஆராய்ந்து உண்மையை அறிந்துகொள்ளவும் இந்த தளத்தை பின்தொடருங்கள்.



Click it and Unblock the Notifications











