Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
மனைவிக்கு முன் மாமியாருடன்... உகண்டா பழங்குடியின் உவ்வேக் கலாச்சாரம்!
அங்கோல் எனும் உகண்டாவின் பழங்குடி மக்கள் மத்தியில், மணமகன், மணமகளுடன் இணையும் முன், மாமியாருடன் இணையும் விசித்திர கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது.
இன்றளவும் அதிகமாக பழங்குடி மக்கள் வாழும் நாடுகள் பலவன ஆப்ரிக்காவில் உள்ளன. இவர்களது நாகரீகம், கலாச்சாரம் போன்றவை இன்றளவும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். அதில் சிலவன சுவாரஸ்யமாகவும், சிலவன கூச்சப்படும் வகையிலும் அமைந்திருக்கின்றன.
பெரும்பாலும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தில் விசித்திரமாக காணப்படுவது அவர்களது தாம்பத்தியம் சார்ந்த பழக்கங்கள் தான். கம்போடியாவின் கிரௌன் எனும் பழங்குடி மக்களின் விசித்திர பழக்கத்தை நாம் இதற்கு முன்னர் கண்டுள்ளோம்.
ஆனால், அதை காட்டிலும் மிக விசித்திரமாக, மோசமாக காணப்படுகிறது உகண்டாவின் அங்கோல் மக்களின் முதலிரவு கலாச்சாரம்...

இவர்களுக்கு விசித்திரம் அல்ல...
இந்த பழங்குடி மணமகன்களுக்கு முதலிரவன்று மாமியாருடன் இணைவது விசித்திரம் அல்ல. இவர்கள் மணப்பெண்ணுடன் இணையும் முன்னரே, அந்த பெண்ணின் தாயுடன் இணைய வேண்டும் என்பது கலாச்சாரம் என்ற பெயரில் பின்பற்றி வருகின்றனர்.

ஏன் இப்படி?
மணமகளுக்கு அவர்கள் அளிக்கும் திருமண பரிசே இதுதான் என அவர்கள் கூறுகின்றனர். மணமகளுக்கு அவர்கள் தான் தாம்பத்தியம் குறித்து கற்பிக்க வேண்டுமாம்.
Image Source - RHPHOTOARTS

கடமை!
மணமகள் ஒரு நல்ல மனைவியாக எப்படி இருக்க வேண்டும்? அவர்கள் கணவனிடம் எப்படி கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும் என கற்பிக்க வேண்டியது இவர்களது கடமையாக பார்க்கின்றனர்.

அதுவும் தானாம்!
அதே போலமணமகன் கட்டில் வித்தையில் சிறந்தவரா? இல்லையா? என்பதையும் கணிக்க வேண்டியது இந்த பழங்குடி அத்தைமார்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.

நேரடியாக பார்த்தல்...
இவர்கள் மணமகன், மணமகளுடன் பேசி அல்லது அவர்கள் கூடுவதை நேரடியாக கண்டு அவர்களுக்கு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக் கூறுவார்களாம். திருமணநாள் இரவில் இவர்கள் மணமக்களுடன் சேர்ந்து தங்குவதையும் பழக்கமாக வைத்துள்ளனர்.

இதுமட்டுமல்ல...
இதுமட்டுமல்ல... உகாண்டாவில் இதுபோல பல இனத்தவரின் கலாச்சாரங்கள் வாய்ப்பிளக்கும் படி தான் இருக்கிறது. பெண்ணுறுப்பு சிதைப்பு, உயிருடன் இருக்கும் போதே அவரது விருப்பபப்டி சமாதி எழுப்புதல் என இப்படி பலவன இருக்கின்றன.



Click it and Unblock the Notifications











